என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்யூவி கார்"
- ஸ்கோடா கைலாக்கின் தற்போதைய மாடல்கள் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகின்றன.
- இது முறையே 115 hp பவர் மற்றும் 178 Nm டார்க் வழங்கும் திறன் கொண்டது.
ஸ்கோடா நிறுவனம் கைலாக் எஸ்யூவியை நவம்பர் 2025 இல் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய பவர்டிரெய்ன் விருப்பத்தை வழங்க பிராண்ட் இப்போது திட்டமிட்டுள்ளது. ஸ்கோடா கார்களில் வழங்கப்படும் டர்போ எஞ்சின்களில் CNG இணக்கத்தன்மையை மதிப்பிடுவதில் ஸ்கோடா இந்தியா தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது வரை, CNG மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், ஸ்கோடா நிறுவனம் இது கடினமான ஒருங்கிணைப்பாக இருக்காது. ஏனெனில் இந்த பிராண்டில் ஏற்கனவே சர்வதேச அளவில் கிடைக்கும் ஆக்டேவியா, ஸ்கேலா மற்றும் சிட்டிகோ போன் மாடல்களில் CNG பவர்டிரெய்ன் கிடைக்கிறது. மேலும், டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் CNG பவர்டிரெய்னை கொண்டு வரும் முதல் நிறுவனமும் ஸ்கோடா இல்லை. டாடா நெக்சான் ஏற்கனவே CNG யூனிட்டுடன் கூடிய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினை வழங்குகிறது.

விற்பனையில் உள்ள ஸ்கோடா கைலாக்கின் தற்போதைய மாடல்கள் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகின்றன. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் (MT மற்றும் AT) இணைந்து செயல்படுகிறது. இது முறையே 115 hp பவர் மற்றும் 178 Nm டார்க் வழங்கும் திறன் கொண்டது.
இந்திய சந்தையில் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்டீஜ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இந்த பிராண்ட் கைலாக்கிற்கு - ஆலிவ் கோல்ட், லாவா ப்ளூ, டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல், பிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட் மற்றும் டீப் பேர்ல் பிளாக் என ஏழு வண்ண விருப்பங்களையும் வழங்குகிறது. ஸ்கோடா கைலாக்கின் விலை ரூ.7.89 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது இந்தியாவில் பிராண்டால் வழங்கப்படும் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் SUV ஆகும்.
- கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம்
- விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர்
உத்தரபிரதேசத்தில் 2022 டிசம்பரில் கரிஷ்மா என்ற பெண் விகாஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்பு இந்த ஜோடி கிரேட்டர் நொய்டாவில் உள்ள விகாஸ் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் கரிஷ்மா அவரது கணவர் மற்றும் கணவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக கரிஷ்மாவின் சகோதரர் தீபக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால், விகாசின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கரிஷ்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கரிஷ்மாவிற்கு ஒரு பெண் குழந்தையைப் பிறந்துள்ளது. அதன்பிறகும் விகாஸ் குடும்பத்தினரின் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதனால் கரிஷிமாவின் குடும்பத்தினர் விகாஸ் குடும்பத்திற்கு கூடுதலாக ₹10 லட்சம் கொடுத்தனர். அதன்பின்பும் இந்த கொடுமை முடிவுக்கு வரவில்லை.
அண்மையில், விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதனை கரிஷ்மா குடும்பத்தினரால் கொடுக்கமுடியவில்லை.
இந்நிலையில், மார்ச் 29 அன்று கரிஷ்மா எங்களை தொடர்பு கொண்டு விகாஸ் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார். உடனே நாங்கள் விகாஸ் வீட்டிற்கு சென்று பார்க்கையில் கரிஷ்மா இறந்து கிடந்தார். கரிஷ்மாவை அவரது கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரில், விகாஸ், அவரது தந்தை சோம்பல் பதி, அவரது தாய் ராகேஷ், சகோதரி ரிங்கி மற்றும் சகோதரர்கள் சுனில் மற்றும் அனில் ஆகியோர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விகாஸ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.






