என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சியோமி நிறுவனத்தின் 11ஐ சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது 11ஐ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய 11ஐ சீரிசில் சியோமி 11ஐ மற்றும் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் என இரு மாடல்கள் அடங்கும். 

    சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 100 சதவீதம் சார்ஜ் ஆக 15 நிமிடங்களே ஆகும். இரு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் மாத வாக்கில் சீன சந்தையில் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் பெயரில் அறிமுகம் செய்யப்பட்து.

    புது ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை உணர்த்தும் டீசரில், புதிய மாடல்கள் பிளாக், கிரீன், பர்ப்பில் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதுதவிர எம்.ஐ. வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அதன் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்‌ஷிப் மாடல்களான ஒன்பிளஸ் 10 சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமாகிறது. இதுகுறித்த தகவலை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் தெரிவித்தார்.

    ஒன்பிளஸ் 10 ப்ரோ பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஜனவரியில் அறிமுகமாகும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், சரியான வெளியீட்டு தேதியை அவர் அறிவிக்கவில்லை. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் வளைந்த எல்.டி.பி.ஒ. அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 32 எம்.பி. செல்பி கேமரா, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்.பி. லென்ஸ், 3 எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர்ஓ.எஸ். 12 வழங்கப்படும் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் விலை மற்றும் அம்சங்கள் அந்நிறுவன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. விவரங்கள் சாம்சங் ஐயர்லாந்து வலைதளத்தில் இடம்பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் துவங்க இருக்கும் சி.இ.எஸ். 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் வலைதள விவரங்களின்படி இந்த ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் நான்கு வித நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் 128 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 65,800 வரை நிர்ணயிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் 256 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 71,800 வரை நிர்ணயிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலில் 6.4 இன்ச் பிளாட் டைனமிக் அமோலெட் இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 6 ஜி.பி. அல்லது 8 ஜி.பி. மெமரி, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் வழங்கப்படும் என தெரிகிறது.
    கேவியர் நிறுவனம் புல்லட் புரூஃப் வசதி கொண்ட ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஐபோன்களை மாற்றியமைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் கேவியர் நிறுவனம், தற்போது ஐபோன் 13-இல் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த மாடல்கள் ஸ்டெல்த் 2.0 என அழைக்கப்படுகின்றன. இவை ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் கிடைக்கின்றன.

    ஸ்டெல்த் 2.0 சீரிஸ் ஐபோன்கள் பி.ஆர்.2 கிளாஸ் 2 புல்லட்புரூஃப் ஆர்மர் கொண்டுள்ளது. இது துப்பாக்கி தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் அளவு உறுதித்தன்மை கொண்டவை ஆகும். இதனை என்.பி.ஒ.டி.சி.ஐ.டி. எனும் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த நிறுவனம் போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்களை உருவாக்கி வருகிறது.

     ஐபோன் 13 ஸ்டெல்த் 2.0

    ஸ்டெல்த் 2.0 மாடல்களில் எந்த கேமராவும் இருக்காது, என்பதால் பேஸ் ஐடி அம்சம் பயனற்று போகும். இதன் காரணமாக இந்த மாடல்களில் எவ்வித பயோமெட்ரிக் பாதுகாப்பும் இருக்காது. இந்த போன்களை கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தலாம் என கேவியர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

    புல்லட் புரூஃப் ஐபோன் பெயருக்கு ஏற்றார் போல் தோட்டாக்களை உண்மையில் தடுத்து நிறுத்துகிறது. எனினும், தோட்டாக்களை எதிர்கொண்ட பின் ஐபோன் செயலற்று போகிவிடுகிறது. ஐபோன் செயலற்று போனாலும், துப்பாக்கி தாக்குதல் போன்ற ஆபத்து காலத்தில் ஒருவரின் உயிரை காப்பாற்றுகிறது. இந்த ஐபோன் மொத்தத்தில் 99 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. 

    ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் அதிகபட்சம் 1 டி.பி. மெமரி ஆப்ஷனை பயனர்கள் தேர்வு செய்யலாம். இதன் துவக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 4.85 லட்சம் என துவங்கி டாப் எண்ட் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 1 டி.பி. மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 6.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விரைவில் தனது பிளாக்‌ஷிப் சியோமி 12 மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் சியோமி 12 அல்ட்ரா அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. சியோமி 12 சீரிஸ் மாடல்களுடன் இந்த ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    பல்வேறு உயர் ரக அம்சங்கள் மட்டுமின்றி சியோமி 12 சீரிஸ் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியோமி 12 சீரிஸ் - சியோமி 12, 12 ப்ரோ, 12 அல்ட்ரா மற்றும் சியோமி 12 அல்ட்ரா என்ஹான்ஸ்டு எடிஷன் உள்ளிட்ட மாடல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த பிளாக்‌ஷிப் சீரிஸ் அடுத்த ஆண்டு முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகிறது.

     சியோமி எம்ஐ 11

    புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதுபற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் ரெண்டர் லீக் ஆகி இருக்கிறது. புதிய ரெண்டரின் படி சியோமி 12 மூன்று கேமரா சென்சார்கள், எல்.இ.டி. பிளாஷ், கூடுதலாக மற்றொரு சென்சார் கொண்டிருக்கும்.

    இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. சியோமி 12 அல்ட்ரா மாடலில் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, பெரிஸ்கோப் டெலிபோட்டோ ஜூம் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. 
    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பைண்ட் என் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.


    ஒப்போ நிறுவனம் இன்னோ டே 2021 நிகழ்வில் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பைண்ட் என் பெயரில் அழைக்கப்படும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3, ஹூவாய் மேட் எக்ஸ்2 மற்றும் இதர மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஒப்போ பைண்ட் என் திறக்கப்பட்ட நிலையில் 7.1 இன்ச் டிஸ்ப்ளேவும், மடிக்கப்பட்ட நிலையில் 5.49 இன்ச் டிஸ்ப்ளேவும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 2 லட்சம் முறைக்கும் அதிகமாக மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

     ஒப்போ பைண்ட் என்

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 35 வாட் சூப்பர்வூக் மற்றும் 15 வாட் ஏர்வூக் சார்ஜிங், 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஓ.எஸ். 12, ஆண்ட்ராய்டு மல்டி-டாஸ்கிங் ஜெஸ்ட்யூர்களுடன் புதிய ஜெஸ்ட்யூர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் இரண்டு செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பிரைமரி கேமராவை கொண்டே செல்பி படங்களும் எடுத்துக் கொள்ளலாம். 

    ஒப்போ பைண்ட் என் விற்பனை சீனாவில் டிசம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. இதன் 8 ஜி.பி./ 256 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 92,290 என்றும் 12 ஜி.பி. / 512 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 1,07,873 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐபோன் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐபோன் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஐபோன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் 14 ப்ரோ மாடலில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், அதிகபட்சம் 2 டி.பி. மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 ஜி.பி. ரேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

     ஐபோன்

    இதுவரை வெளியான ஐபோன்களில் ஆப்பிள் அதிகபட்சம் 12 எம்.பி. கேமரா சென்சார்களே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இம்முறை 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன்காரணமாக புதிய மாடல்களில் அதிகபட்சம் 8கே வரையிலான வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2024 வாக்கில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஐபோனிற்கான ப்ரோடோடைப் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கென சாம்சங் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே சாம்பில்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு வினியோகம் செய்துள்ளது. சாம்சங் மட்டுமின்றி எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய பேனல்களை வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது.

     ஐபோன்

    முந்தைய தகவல்களின்படி மடிக்கக்கூடிய ஐபோன் 8 இன்ச் பிளெக்சிபில் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டது. ஆப்பிள் இதுவரை மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்யாத நிலையில், சாம்சங் ஏற்கனவே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்று இருக்கிறது.
    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் 42 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.


    அணியக்கூடிய சாதனங்களுக்கு பெயர்போன நாய்ஸ் பிராண்டு இந்திய சந்தையில் நாய்ஸ் பட்ஸ் பிரைமா பெயரில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் அல்ட்ரா-லோ லேடென்சி மோட் கொண்டிருக்கிறது.

    புதிய பட்ஸ் பிரைமா மாடலில் அழைப்புகள், இசை, சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை இயர்பட் மூலமாகவே இயக்கலாம். இதில் உள்ள 6 எம்.எம். டிரைவர்கள் தெளிவான ஆடியோ, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     நாய்ஸ் பட்ஸ் பிரைமா

    இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 42 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்து 2 மணி நேரம் பயன்படுத்தலாம். நாய்ஸ் பட்ஸ் பிரைமா மாடல் விற்பனை டிசம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது. 

    நாய்ஸ் பட்ஸ் பிரைமா ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 5,999 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 1,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனம் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய சாதனம் பற்றிய விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன. இது விரைவில் அறிமுகமாக இருக்கும் ஒன்பிளஸ் 9ஆர்.டி. மாடல் இல்லை. இந்த சாதனம் ஐ.வி.2201 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது.

    அந்த வகையில் இந்த சாதனம் புதிய நார்டு மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இது நார்டு சி.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனா அல்லது புதிய ஒன்பிளஸ் சாதனமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.  சமீபத்தில் நார்டு 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதால், உடனடியாக மற்றொரு நார்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் ஆர்.டி. ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அந்நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 9 ஆர்.டி. மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். முன்னதாக ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போனும் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது புதிய மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. மோட்டோ ஜி51 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் / டெப்த் கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 13 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோ ஜி51 5ஜி

    மோட்டோ ஜி51 5ஜி அம்சங்கள்

    - 6.8 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. பிராசஸர்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர்
    - அட்ரினோ 619 ஜி.பி.யு.
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 50 எம்.பி. பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு / டெப்த் கேமரா
    - 2 எம்.பி. மேக்ரோ கேமரா
    - 13 எம்.பி. செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 20 வாட் சார்ஜிங் 

    புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் இண்டிகோ புளூ மற்றும் பிரைட் சில்வர் என இரு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி ஆப்ஷன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 16 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


    ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பைண்ட் என் பெயரில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனிற்கான டீசரையும் ஒப்போ வெளியிட்டு உள்ளது. ஒப்போ பைண்ட் என் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் இன்னோ டே 2021 நிகழ்வில் அறிமுகமாகிறது.

    நான்கு ஆண்டுகள் தீவிர ஆய்வு, 6 தலைமுறை ப்ரோடோடைப் மாடல்களை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எதிர்கால ஸ்மார்ட்போன்களுக்கு ஒப்போவின் பதில், புதிய பைண்ட் என் மாடல் இருக்கும் என ஒப்போ தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்தார்.

     ஒப்போ பைண்ட் என்

    பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குதல் மற்றும் தற்போதைய டிரெண்ட்களில் எவ்வித சமரசமும் இல்லாத மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்க ஒப்போ நிறுவன குழு 2018 ஆண்டில் இருந்து காத்திருந்தது.
    ×