என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஐடெல் நிறுவனத்தின் முதல் 4ஜி பீச்சர் போன் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
     

    ஐடெல் நிறுவனம் மேஜிக் 2 4ஜி பீச்சர் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஐடெல் நிறுவனத்தின் முதல் 4ஜி பீச்சர் போன் ஆகும். இதில் வைபை மற்றும் ஹாட்ஸ்பாட் டெதரிங், டூயல் 4ஜி வோல்ட் இ, 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    1.3 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ், வயர்லெஸ் எப்எம் மற்றும் ரெக்கார்டிங் வசதி, எல்இடி டார்ச், ஒன் டச் மியூட், 1900 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 24 நாட்களுக்கான ஸ்டான்ட்பை வழங்குகிறது.

     ஐடெல் மேஜிக் 2 4ஜி

    ஐடெல் மேஜிக் 2 4ஜி அம்சங்கள்

    - 2.4 இன்ச் QVGA 3D வளைந்த டிஸ்ப்ளே
    - வைபை மற்றும் ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 2.0
    - 8 பிரீலோட் செய்யப்பட்ட கேம்கள் 
    - 9 மொழிகளில் பயன்படுத்தும் வசதி
    - கிங் வாய்ஸ், ஆட்டோ கால் ரெக்கார்டர், ஒன் டச் மியூட்
    - 1900 எம்ஏஹெச் பேட்டரி

    ஐடெல் மேஜிக் 2 4ஜி மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2349 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்9 ப்ரோ மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடனும், சர்வதேச சந்தையில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நார்டு 2 இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. எனினும், இந்த மாடலில் ஆக்சிஜன் ஒஎஸ் வழங்கப்படும் என்றும் ரியல்மி மாடலில் ரியல்மி யுஐ வழங்கப்படும்.

     ஒன்பிளஸ் நார்டு

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி எக்ஸ்9 ப்ரோ குளோபல் வேரியண்ட் சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 2 பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாத துவக்கத்திலேயே அறிமுகமாகும் என தெரிகிறது.

    ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், பிளாட் ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்களுடன் ரியல்மி எக்ஸ்9 ப்ரோ மாடலில் உள்ள அம்சங்களே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    விவோ நிறுவனத்தின் V21e 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் 5ஜி மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது விவோ நிறுவனமும் இணைந்துள்ளது.

    விவோ நிறுவனம் விரைவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விவோ நிறுவனத்தின் புதிய விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் இடம்பெற்று வெளியாகி உள்ளது.

     விவோ ஸ்மார்ட்போன்

    புது விவோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ஓரளவு குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக விவோ V21e 4ஜி வேரியண்ட் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 5ஜி வேரியண்ட் இதுவரை வெளியாகவில்லை.

    அம்சங்களை பொருத்தவரை விவோ V21e 5ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் FHD+SAMOLED டிஸ்ப்ளே, 64 எம்பி குவாட் கேமரா சென்சார்களுடன் உருவாகி இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 21 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. புது கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் FHD+SAMOLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    புதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. 

     சாம்சங் கேலக்ஸி எம்32

    முன்னதாக கீக்பென்ச் தளத்தில் வெளியான விவரங்களின்படி கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1, 48 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமராக்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

    முன்புறம் 20 எம்பி செல்பி கேமராவும் கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. 

    புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கும் என்றும் கூறப்பட்டது.
    டெக்னோ நிறுவனத்தின் ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.


    டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்பார்ட் 7டி 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், குவாட் எல்இடி பிளாக் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் உள்ளது.

    ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் சார்ந்த ஹைஒஎஸ் 7.6 கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 7டி டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

     டெக்னோ ஸ்பார்க் 7டி

    டெக்னோ ஸ்பார்க் 7டி அம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - IMG PowerVR GE8320 GPU
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஹைஒஎஸ் 7.6
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் LED பிளாஷ்
    - ஏஐ கேமரா
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்இடி பிளாஷ்
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் நெபுலா ஆரஞ்சு, மேக்னட் பிளாக் மற்றும் ஜூவல் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அமேசான் தளத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் விற்பனையில் ரூ. 1000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 7999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 கொண்டிருக்கும் நார்டு CE 5ஜி மாடலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் உறுதியளித்து இருக்கிறது.

    மெமரியை பொருத்தவரை நார்டு CE 5ஜி மாடல் - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

     ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி உள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 30டி வார்ப் சார்ஜ் பிளஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

    ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் மேட் பினிஷ் கொண்ட புளூ வாய்ட், கிளாஸி பினிஷ் கொண்ட சார்கோல் இன்க் மற்றும் கிரேடியன்ட் எபெக்ட் கொண்ட சில்வர் ரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 22,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 27,999 ஆகும்.
    சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது எம்ஐ 11எக்ஸ் சீரிஸ் மாடல்கள் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை வெளியிட்டு உள்ளது.


    சியோமி இந்தியா நிறுவனம் தனது எம்ஐ 11எக்ஸ் சீரிஸ் மாடலை ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமான சுமார் 45 நாட்களுக்குள் இந்த மாடல் ரூ. 300 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

    முன்னதாக எம்ஐ 10ஐ 5ஜி மாடல்கள் ரூ. 400 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனை  செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்தது. எம்ஐ 11எக்ஸ் சீரிசில் எம்ஐ 11எக்ஸ் மற்றும் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ என இரு மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. 

     சியோமி எம்ஐ 11எக்ஸ் சீரிஸ்

    இரு மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் மற்றும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 6.67 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஆடியோ ஜூம் போன்ற அம்சங்கள் உள்ளன. 

    எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ மாடல்கள் விலை ரூ. 29,999 முதல் துவங்குகின்றன. இரு மாடல்களும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. 
    ஒன்பிளஸ் நிறுவனம் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கும் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் விலை ஒன்பிளஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. தனியார் வங்கி சலுகை மூலம் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி விலை மற்றும் கேஷ்பேக் சலுகை விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி

    புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் மிக மெல்லிய டிசைன், ஹெட்போன் ஜாக், 64 எம்பி மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 30டி வார்ப் சார்ஜ் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் விலை ரூ. 22,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் நார்டு விலையை விட குறைவு ஆகும். அந்த வகையில், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஜூன் 10 ஆம் தேதி வெளியாகிவிடும்.
    ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யும் நார்டு CE 5ஜி மாடல் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு CE 5ஜி (கோர் எடிஷன்) மாடல் இந்தியாவில் ஜூன் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை ஒன்பிளஸ் டீசர்களாக வெளியிட்டு வருகிறது.

    ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசரில் புது நார்டு CE 5ஜி 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும், மற்ற சென்சார்கள் செங்குத்தாக அடுக்கப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் எல்இடி பிளாஷ் மாட்யூல் ஒன்றும் காணப்படுகிறது.

     ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி

    பிரைமரி கேமராவுடன் 8 எம்பி இரண்டாவது சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஒற்றை பன்ச் ஹோல் ஸ்கிரீன், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    ஒன்பிளஸ் டிவி U1S மாடலை பொருத்தவரை இது வாய்ஸ் கண்ட்ரோல் வசதி, கீழ்புற பெசல் பகுதியில் மின்விளக்குகள் இருக்கும் என தெரிகிறது. இந்த டிவியுடன் இரண்டு போன்களை இணைத்து அவற்றில் இருக்கும் தரவுகளை ஸ்டிரீம் செய்ய முடியும்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ22 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களும் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன. கேலக்ஸி ஏ22 5ஜி மாடலில் 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

     சாம்சங் கேலக்ஸி ஏ22

    கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. இரு மாடல்களும் கிரே, வைட், மின்ட் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 229 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 20,295 என துவங்குகிறது. கேலக்ஸி ஏ22 விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. 
    ரியல்மி நிறுவனம் தனது புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி 5சி ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்தில் சர்வதே சந்தையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன் விற்பனை முதலில் ஐரோப்பாவில் துவங்கும் என்றும் ரியல்மி அறிவித்தது. முன்னதாக மார்ச் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     ரியல்மி ஜிடி

    இந்த நிலையில், ரியல்மி 5ஜி நிகழ்வில் ஜூலை மாத வாக்கில் ரியல்மி ஜிடி கேமரா பிளாக்ஷிப் மாடல் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு துவங்கும் முன் ரியல்மி ஜிடி 5ஜி மாடல் விரைவில் அறிமுகமாகும் என ரியல்மி இந்தியா வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. எனினும், தற்போது இந்த பதிவு நீக்கப்பட்டு ஐரோப்பாவுக்கான ரியல்மி தளத்தில் மட்டும் இடம்பெற்று இருக்கிறது.

    அந்த வகையில், ரியல்மி ஜிடி 5ஜி மாடல் இம்மாதம் இந்தியாவில் அறிமுகமாகாது என தெரிகிறது. கடந்த ஆண்டு மட்டும் உலகின் 21 நாடுகளில் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகப்படுத்த ரியல்மி திட்டமிட்டுள்ளது. அதன்படி உலகின் 50 நாடுகளில் சுமார் 20-க்கும் அதிக மாடல்களை அறிமுகம் செய்ய ரிய்லமி திட்டமிட்டுள்ளது.
    அமேசான் நிறுவனம் துவங்க இருக்கும் புது சேவை இந்தியாவில் பிராட்பேண்ட் கட்டணத்தை குறைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அமேசான் நிறுவனம் இந்தியாவில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வான்வெளியில் இருந்தபட் இணைய சேவையை அதிவேகமாக வழங்க முடியும். 

    ஏற்கனவே எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் பாரதி ஏர்டெல் குழுமத்தின் ஒன் வெப் போன்ற நிறுவனங்கள் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்க திட்டமிட்டு அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை மூலம் தற்போதுள்ள இணைய கட்டணங்களை பெருமளவு குறையும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

     கோப்புப்படம்

    புதுவித இணைய சேவையை வழங்க அரசிடம் இருந்து பெற வேண்டிய அனுமதி, செயற்கைக் கோள் பேண்ட்வித் பயன்பாட்டு கட்டணம், இதர உரிமைகள் குறித்து அரசாங்கத்துடன் விவாதிக்க அமேசான் திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது தொலைதொடர்பு துறை மற்றும் வான்வெளி துறை அதிகாரிகளுடன் அமேசான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அமேசானின் பிராஜக்ட் குயிபெர் திட்டத்தின் கீழ் இந்தியாவில் அதிவேக பிராட்பேண்ட் சேவை துவங்கப்படும். 

    பிராஜக்ட் குயிபெர் திட்டத்தில் அமேசான் 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 7,31,32,10,00,000) முதலீடு செய்கிறது. இதை கொண்டு பூமி சுற்றுப்பாதையின் குறைந்த உயரத்தில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. எனினும், இதுகுறித்து அமேசான் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    ×