என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அசத்தல் அம்சங்கள் நிறைந்த நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ரக்கட் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ஹெச்.எம்.டி. குளபோல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அக்டோபர் 20 ஆம் தேதி துவங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் கிரானைட் மற்றும் அல்ட்ரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை நோக்கியா எக்ஸ்.ஆர்.20 மாடலில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், அட்ரினோ 619 ஜி.பி.யு. வழங்கப்படுகிறது.

     நோக்கியா எக்ஸ்.ஆர்.20

    இத்துடன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11, 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வாட்டர் ரெசிஸ்டண்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் தனது சாதனங்களுக்கு சிறந்த முறையில் உதிரிபாகங்களை பெறுவதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும். எனினும், தற்போது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் குறைபாடு பிரச்சினையில் ஆப்பிள் நிறுவனமும் சிக்கியுள்ளது. சிப்செட் குறைபாடு காரணமாக ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிராட்காம் மற்றும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் போன்ற நிறுவனங்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெறுவதில் ஆப்பிள் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் 13 சீரிசுக்கு கடும் வரவேற்பு கிடைப்பதை தொடர்ந்து இரு நிறுவனங்களால் ஆப்பிளுக்கு தேவையான உதிரிபாகங்களை வினியோகம் செய்ய முடியவில்லை என தெரிகிறது.

     ஐபோன் 13 ப்ரோ

    செப்டம்பரில் விற்பனைக்கு வந்த ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் தற்போதைய சூழலில், அக்டோபர் மாத இறுதியில் தான் வினியோகம் செய்யப்படும் என்ற நிலையில் உள்ளது. பெரும்பாலான ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் பட்டியலிடப்படவே இல்லை.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.62 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    ரியல்மி ஜிடி நியோ 2

    புதிய ரியல்மி ஜிடி நியோ 2 மாடல் நியோ கிரீன், நியோ புளூ மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 31,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், பண்டிகை கால விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் முறையே ரூ. 24,999 மற்றும் ரூ. 28,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கிறது.


    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் வை20டி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பன்டச் ஒ.எஸ்.11.1 மற்றும் ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

     விவோ வை20டி

    விவோ வை20டி ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 15,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகி வருகிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஏ சீரிசில் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி ஏ13 5ஜி பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

     சாம்சங் கேலக்ஸி ஏ12

    ரென்டர்களின் படி சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பாடி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 290 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
    சியோமியின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 10 மாடல் குறைந்த விலையில் பல்வேறு தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதேபோன்று புதிய ரெட்மி நோட் மாடலும் அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ரெட்மி ஸ்மார்ட்போன்

    முந்தைய தகவல்களின்படி ரெட்மி நோட் 11 மாடல் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட்டில் செல்பி கேமரா, பின்புற பேனல் கிளாஸ் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது. இத்துடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் செவ்வக கேமரா மாட்யூலுக்கு மாற்றாக சதுரங்க வடிவ கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    அமேசான் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 மாடலுக்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.


    அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் மாபெரும் பண்டிகை கால சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. பல்வேறு பொருட்களுக்கும் இந்த விற்பனையில் விலை குறைப்பு, தள்ளுபடி, வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    அந்த வரிசையில், ஸ்மார்ட்போன்களுக்கும் அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஐபோன் 12 மினி மாடல் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது ஐபோன் 11 மாடலின் 64ஜிபி விலை ரூ. 39,999 என்றும் 128 ஜிபி ரூ. 44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     அமேசான் ஸ்கிரீன்ஷாட்

    இத்துடன் ஐபோனிற்கு வங்கி சார்ந்த சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்வோருக்கு ரூ. 13,650 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையடுத்து ஐபோன் 11 64 ஜிபி மாடலை ரூ. 26,349-க்கும் 128 ஜிபி மாடலை ரூ. 31,349-க்கும் வாங்க முடியும்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய இ40 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.


    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.

    இதன் பின்புறம் கைரேகை சென்சார், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி700 ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

     மோட்டோ இ40

    முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 48 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இதன் விலை 149 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

    எனினும், இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது கிரே மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

     மோட்டோ இ40

    அம்சங்களை பொருத்தவரை 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 48 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகின்றன.


    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுள் நிறுவனத்தின் டென்சார் சிப்செட் பயன்படுத்துகின்றன. 

    பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அலுமினியம் பிரேம் மற்றும் மேட் பினிஷ் செய்யப்பட்டு இருக்கும். பிக்சல் 6 ப்ரோ மாடல் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் கொண்டிருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

     கூகுள் பிக்சல் 6 சீரிஸ்

    அதன்படி பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.71 இன்ச் 3120x1440 பிக்சல் வளைந்த பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 50 எம்பி பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கின்றன.


    ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனையில் இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்கள் அதிக தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது. 

     ப்ளிப்கார்ட்

    பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஐந்தில் ஒரு வாடிக்கையாளர் தங்களின் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து புதிய ஸ்மார்ட்போனினை வாங்கியுள்ளனர். ஆப்பிள் மட்டுமின்றி சியோமி மற்றும் ரியல்மி நிறுவன மாடல்களும் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சாம்சங் சப்போர்ட் வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் தவிர வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    கடந்த மாதம் சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமராவுடன் குவாட் கேமரா சென்சார்கள், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி எம்22

    ஜெர்மனியில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 239.90 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 20,700 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியவில் இந்த ஸ்மார்ட்போன் ஆப்லைன் ஸ்டோர் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இது பிளாக், லைட் புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

    ×