என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் போகோ எம்6 பிளஸ் 5ஜி போன் 13999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
    • 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் போகோ எம்6 பிளஸ் 5ஜி போன் 14999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    போகோ செல்போன் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் போகோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் விரைவில் போகோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் போகோ எம்6 பிளஸ் 5ஜி போன் 13999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் போகோ எம்6 பிளஸ் 5ஜி போன் 14999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பிளாக், பர்பிள், சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 14 ஹைபைர்ஓஎஸ் அடிப்படையிலானது. ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசசர் கொண்டதாக இருக்கும். 120HZ ரெப்ரெஷ் ரேட் உடன் 6.79 இன்ச் எல்சிடி டிஸ்பிளே. 108 மெகாபிக்சல் சென்சார், 2-மெகாபிக்சல் சென்சார் உடன் இரண்டு கேமராவும், 16-மெகாபிக்சர் முன்பக்க கேமராவையும் கொண்டதாக இருக்கும். 5030mAh பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் இருக்கும்.

    • 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
    • இதில் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், இரு மாடல்களின் முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி Z போல்டு 6 மாடலில் வெளிப்புறம் 7.6 இன்ச், உள்புறம் 6.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 12MP, 50MP மற்றும் 10MP பிரைமரி கேமரா சென்சார்கள், 10MP செல்பி கேமரா மற்றும் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 12MP+50MP பிரைமரி கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    விலை விவரங்கள்:

    கேலக்ஸி Z ப்ளிப் 6 (12ஜிபி+256ஜிபி) ரூ. 1,09,999

    கேலக்ஸி Z ப்ளிப் 6 (12ஜிபி+512ஜிபி) ரூ. 1,21,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+256ஜிபி) ரூ. 1,64,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+512ஜிபி) ரூ. 1,76,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+1டிபி) ரூ. 2,00,999

    புதிய கேலக்ஸி Z சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது.

    • ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் நிகழ்ச்சி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போன் மெட்டல் டிசைன் கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில்- நார்டு 4, ஒன்பிளஸ் பேட் 2, ஒன்பிளஸ் வாட்ச் 2R மற்றும் நார்டு பட்ஸ் 3 ப்ரோ என மொத்தம் நான்கு சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இதில் ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் வித்தியாசமான டிசைன் கொன்ட ஒன்பிளஸ் ஏஸ் 3V மாடலின் ரிபிரான்ட் செய்யப்பட்ட மாடல் என்று கூறப்படுகிறது. இதேபோன்று ஒன்பிளஸ் பேட் 2 மாடல் ஒன்பிளஸ் பேட் ப்ரோ மாடலின் ரிபிரான்ட் செய்யப்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது.

    புதிய ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி மாடலில் மெட்டல் யுனிபாடி டிசைன் வழங்கப்படுகிறது. பட்ஸ் 3 ப்ரோ மாடல் பட்ஜெட் பிரிவில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வாட்ச் 2R மாடல் குறைந்த எடை மற்றும் வயர் ஓ.எஸ். கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனங்கள் அதன் சர்வதேச அறிமுகத்தின் போதே, இந்திய சந்தையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

    • பல்வேறு டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் இரு நிறங்களில் கிடைக்கும்.

    லாவா நிறுவனத்தின் புதிய பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஜுலை 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஒட்டி அந்நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களில் புதிய லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், கிளாஸி ஃபிரேம் மற்றும் கர்வ்டு ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி., 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் ஆப்ஷன்களிலும் பர்பில் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கும்.

     


    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் FHD+ ஸ்கிரீன், டிமென்சிட்டி 7050 பிராசஸர், 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி, 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. 

    • மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என தகவல்.
    • 5500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இத்தாலியில் நடத்தும் நிகழ்ச்சியில் தனது புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச் அடங்கிய படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

    புதிய புகைப்படத்தின் படி ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் கேமரா பகுதியை தவிர மற்ற இடங்களில் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிலஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், 6.74 இன்ச் 1.5K 2.8D கர்வ்டு AMOLED 120Hz ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, அலர்ட் ஸ்லைடர் மற்றும் 5500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    • 5500 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும்.
    • சீனாவில் ஏஸ் 3வி பெயரில் வெளியானது. இது ஒன்பிளஸ் நோர்டு 4 என மறுபெயரிட்டு இந்தியாவில் வெளியாக வாய்ப்பு.

    சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பிளஸ் நோர்டு 3 (OnePlus Nord 3) போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்டு 4 (OnePlus Nord 4) செல்போனை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு விலை 31,999 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரேசன் 3 SoC பிராசசர் கொண்டதாகவும், 5500 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும்.

    இந்த போன் உடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ப்ரோ, ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ஆகியவையும் வெளியாக வாய்ப்புள்ளது.

    சீனாவில் கடந்த மார்ச் மாதம் ஒன்பிளஸ் ஏஸ் 3வி பெயரில் செல்போன் வெளியானது. இது ஒன்பிளஸ் நோர்டு 4 என மறுபெயரிட்டு இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    50 மெகாபிக்சல் பிரைமரி சென்சாருடன் டுயல் ரியர் கேமரா செட்டப் கொண்டதாகவும், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டதாகவும் இருக்கும்.

    • பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
    • இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.

    ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு மத்தியில், பிஎஸ்என்எல் விலையை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமாக உள்ளது.

    அதன் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு மற்றும் தாராளமான டேட்டா அலவன்ஸ் ஆகியவற்றுடன், அதிக மதிப்பு மற்றும் குறைந்த செலவை எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது வரும் ஜூலை 3, 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    ஜியோ மற்றும் ஏர்டெல்: விலை உயர்வுகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

    வோடபோன் ஐடியா: புதிய விலைகள் ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

    பிஎஸ்என்எல் திட்டத்தின் சலுகை பற்றிய விவரங்கள் இதோ:

    புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். இது வழக்கமான திட்டங்களை விட நீண்டது.

    இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.

    மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபிக்கு சமம்.

    ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்.

    இத்தகைய விரிவான திட்டத்தை குறைந்த விலையில் வழங்குவதற்கான பிஎஸ்என்எல்-ன் நடவடிக்கை சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், பயனர்கள் மீதான நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹானர் 200 16GB ரேம் வரையிலும், 512GB இன்டர்னர் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வெளியாக உள்ளது.
    • ஹானர் 200 ப்ரோ 15GB ரேம் வரை சப்போர்ட் செய்வதாகவும், 1TB இன்டர்னெல் ஸ்டோரோக் கொண்டதாகவும் இருக்கும்.

    ஹானர் ஸ்மார்ட்போன் நிறுவனம் விரைவில் ஹானர் 200 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருக்கிறது. இதற்கான தகவல்களை அமேசான் ஆன்லைன் நிறுவன இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் ரிலீஸ் ஆகும் தேதி வெளியிடப்படவில்லை.

    ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ என இரண்டு சீரிஸில் வெளியாக உள்ளது. ஹானர் 200 ஸ்னாப்டிராகன் 5 ஜெனரேசன் 3 பிராசசரை கொண்டதாகவும், ஹானர் ப்ரோ ஸ்னாப்டிராகன் 5 ஜெனரேசன் 3 பிராசசரை கொண்டதாகவும் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    6.7 இன்ச் Full HD+ கர்வ்டு OLED டிஸ்பிளே கொண்டதாகவும், ரிசொலுசன் 2664X1200 பிக்சல்ஸ் அண்டு ஸ்மூத் விசுவலுக்கான 120Hz ரெஃப்ரெஸ் ரேட் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரைட்நெஸ் 4 ஆயிரம் நிட்ஸ்க்கு அதிகமாக கொண்டதாகவும் இருக்கும் எனவும் தெரிகிறது.

    ஹானர் 200 16GB ரேம் வரையிலும், 512GB இன்டர்னர் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வெளியாக உள்ளது.

    ஹானர் 200 ப்ரோ 15GB ரேம் வரை சப்போர்ட் செய்வதாகவும், 1TB இன்டர்னெல் ஸ்டோரோக் கொண்டதாகவும் இருக்கும்.

    5200 mAh பேட்டரி கொண்டதாக இருக்கும் நிலையில் 100W பார்ஸ்ட் சார்ஜிங் மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான மேஜிக் OS 8.0-ஐ கொண்டது. இரண்டு சிம்கார்டு பயன்படுத்தலாம். 5ஜி வசதி கொண்டதாகும்.

    • ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது.
    • இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 299 -ல் இருந்து (தினம் 1.5 GB) ரூ. 349 -ஆக உயர்கிறது.

    365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

     

    • ரெனோ 12 மற்றும் ரெனோ 12 ஜி என்ற சீரிஸ் கொண்ட போன்களை வெளியிட இருக்கிறது.
    • ஏஐ பெஸ்ட் பேஸ், ஏஐ எரேசர் 2.0, ஏஸ் ஸ்டூடியோ, ஏஐ கிளியர் வாய்ஸ் (Clear Voice) போன்ற ஏஐ அடிப்படையிலான கேமரா செயல்பாடுகளை கொண்டுள்ளது.

    ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒப்போ ரெனோ 12 5ஜி செல்வோனை விரைவில் வெளியிட இருக்கிறது. இதற்காக இணையதள விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட், இதெற்கான ஒரு பகுதியை உருவாக்கி சீரிஸ்களை லிஸ்ட் செய்துள்ளது. இந்த சீரிஸ் வகை போன்கள் ஏய் பீச்சர்ஸ் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெனோ 12 மற்றும் ரெனோ 12 ஜி என்ற சீரிஸ் கொண்டதாக இருக்கும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏஐ பெஸ்ட் பேஸ், ஏஐ எரேசர் 2.0, ஏஸ் ஸ்டூடியோ, ஏஐ கிளியர் வாய்ஸ் (Clear Voice) போன்ற ஏஐ அடிப்படையிலான கேமரா செயல்பாடுகளை கொண்டுள்ளது.

    இந்த போன்கள் கூகிள் ஜெமினி அடிப்படையிலான ஏஐ சம்மரி, ஏஐ ரெகார்டு, ஏஐ கிளியர் வாய்ஸ், ஏஐ ரைட்டர், ஏஐ ஸ்பீக் பீச்சர்ஸ்களை கொண்டதாகவும் இருக்கும்.

    ரெனோ 12 மீடியாடெக் டைமென்சிட்டி 8250 ஸ்டார் ஸ்பீட் எடிசன் பிராசசரை கொண்டதாகவும், ரெனோ 12 ப்ரோ மீடியாடெக் டைமென்சிட்டி 9200+ ஸ்டார் ஸ்பீட் எடிசன் பிராசசரை கொண்டாகவும் இருக்கும்.

    இரண்டு சீரிஸ் போன்களும் 50எம்பி மற்றும் 8எம்பி டுயல் கேமரா செட்டப் கொண்டதாகவும் இருக்கும். 50எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளதாக இருக்கும்.

    5000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டதாகவும் இருக்கும். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையில் கலர்ஓஎஸ்-ல் செல்போன் இயங்கும்.

    ரெனோ 12 கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் கொண்ட 12 6.7 இன்ச் டிஸ்பிளே வசதி கொண்டது. 12GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எபோனி பிளாக், மில்லேனியம் சில்வர், சாஃப்ட் கலர்களில் கிடைக்கும்.

    • நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
    • அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.

    இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

    ஏர்டெல் பிரீபெயிட் மாதாந்திர சலுகை, இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் மற்றும் ஓராண்டு வேலிடிட்டி வழஹ்கும் பிரீபெயிட் சலுகைகளின் கட்டணங்களை ஏர்டெல் உயர்த்துகிறது. அடுத்த வாரம் புதிய விலை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது. அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.

    இதேபோல், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களின்படி மாதாந்திர கட்டணம் அதிகரிப்பதைக் காண முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 179-ல் இருந்து ரூ. 199-ஆக உயர்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 455-ல் இருந்து ரூ. 509 ஆக உயர்கிறது. அதிகபட்சமாக ஒரு வருட வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 2999-ல் இருந்து ரூ. 3599-ஆக உயர்ந்துள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-


    பழைய விலை

    புதிய விலை

    டேட்டா

    செல்லுபடியாகும் காலம் (நாட்கள்)

    179

    199

    2ஜிபி

    28

    455

    509

    6ஜிபி

    84

    1799

    1999

    24 ஜிபி

    365

    265

    299

    ஒரு நாளைக்கு 1ஜிபி

    28

    299

    349

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    28

    359

    409

    ஒரு நாளைக்கு 2.5 ஜிபி

    28

    399

    449

    ஒரு நாளைக்கு 3 ஜிபி

    28

    479

    579

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    56

    549

    649

    ஒரு நாளைக்கு 2 ஜிபி

    56

    719

    859

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    84

    839

    979

    ஒரு நாளைக்கு 2 ஜிபி

    84

    2999

    3599

    ஒரு நாளைக்கு 2ஜிபி

    365


    • செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

    நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.

    மாதாந்திர ப்ளான், இரு மாதம், மும்மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணங்களை உயர்த்தி ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

    ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அவற்றில் 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.

    அதன்படி, செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189ஆகவும், 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349ஆகவும், ரூ.399 என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டம், வரும் ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன எனவும் ஜியோ அறிவித்துள்ளது.

    ×