ஒரே நாளில் 4 சாதனங்களை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் நிகழ்ச்சி இத்தாலியில் நடைபெறுகிறது. ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போன் மெட்டல் டிசைன் கொண்டுள்ளது.
ஒரே நாளில் 4 சாதனங்களை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
Published on

ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில்- நார்டு 4, ஒன்பிளஸ் பேட் 2, ஒன்பிளஸ் வாட்ச் 2R மற்றும் நார்டு பட்ஸ் 3 ப்ரோ என மொத்தம் நான்கு சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இதில் ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் வித்தியாசமான டிசைன் கொன்ட ஒன்பிளஸ் ஏஸ் 3V மாடலின் ரிபிரான்ட் செய்யப்பட்ட மாடல் என்று கூறப்படுகிறது. இதேபோன்று ஒன்பிளஸ் பேட் 2 மாடல் ஒன்பிளஸ் பேட் ப்ரோ மாடலின் ரிபிரான்ட் செய்யப்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது.

புதிய ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி மாடலில் மெட்டல் யுனிபாடி டிசைன் வழங்கப்படுகிறது. பட்ஸ் 3 ப்ரோ மாடல் பட்ஜெட் பிரிவில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வாட்ச் 2R மாடல் குறைந்த எடை மற்றும் வயர் ஓ.எஸ். கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனங்கள் அதன் சர்வதேச அறிமுகத்தின் போதே, இந்திய சந்தையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com