என் மலர்
தொழில்நுட்பம்
- போட் நிறுவனத்தின் புதிய இயர்போன் THX டியூனிங் செய்த ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
- மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ஆடியோ மோட்களை ஸ்விட்ச் செய்ய விசேஷ பட்டன் உள்ளது.
போட் நிறுவனம் தனது புதிய நெக்பேண்ட், ராக்கர்ஸ் 378 இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புது நெக்பேண்ட் இயர்போன் அளவில் பெரிய டைனமிக் டிரைவர்கள், 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் தொழில்நுட்பம், THX சார்பில் டியூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. போட் இம்மார்டல் 121 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
போட் ராக்கர்ஸ் 378 மாடல் பயனர்களுக்கு அதிக சவுகரியத்தை வழங்கும் நோக்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மென்மையான சிலிகான், எடை குறைந்த ஃபிரேம் கொண்டிருக்கிறது. இதன் நெக்பேண்ட்-இல் இயர்போனை கண்ட்ரோல் செய்வதற்கான பட்டன்கள் உள்ளன. மேலும் இயர்பட்களில் காந்தம் உள்ளது.

ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் போட் ராக்கர்ஸ் 378 மாடல் 200 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 25 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. இந்த இயர்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 15 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. ராக்கர்ஸ் 378 மாடலில் உள்ள 10mm டைனமிக் டிரைவர்களை THX டியூனிங் செய்து 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் வழங்குகிறது.
இந்த தொழில்நுட்பம் அதிநவீன சரவுண்ட் சவுண்ட், முப்பரிமாண கோணத்தில் ரியலிஸ்டிக் ஆடியோ மற்றும் பொசிஷனல் அக்யுரசி வழங்குகிறது. இதில் உள்ள ஸ்பெஷல் பீஸ்ட் மோட் ஆடியோ லேடன்சியை 65ms வரை குறைக்கும். மோட்களிடையே மாறிக் கொள்ள பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, போட் பாரம்பரிய சவுண்ட் உள்ளிட்டவை கேமிங்கிற்கு ஏற்ற இயர்பட்ஸ் ஆக மாற்றுகிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போட் ராக்கர்ஸ் 378 மாடல்- ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ, மிட்நைட் புளூ மற்றும் வைப்ரண்ட் ரெட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை போட் லைஃப்ஸ்டைல், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் சில நாட்களுக்கு முன் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.
ரியல்மி இந்தியா நிறுவனம் தனது வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் புது அறிவிப்பை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டு இருக்கிறது. அதில், "Something exiting is Bubbling" மற்றும் "realme is set to get really refreshing" எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
புது டீசர்களின் படி ரியல்மி நிறுவனம் கோகோ கோலா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என்பதை உணர்த்தும் வகையில் இடம்பெற்று இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்பெஷல் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர டுவிட்டரில் கோகோ கோலா போன் படம் கொண்ட அக்கவுண்ட் ஒன்று கோலா போன் குளோபல் (@colaphoneglobal) பெயரில் துவங்கப்பட்டு இருக்கிறது.

குளிர்பான நிறுவனங்களுடன் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கூட்டணி அமைப்பது முதல் முறை இல்லை. முன்னதாக 2015 வாக்கில் பெப்சி போன் P1s மாடலை ஷென்சென் ஸ்கூபி கம்யுனிகேஷன் எக்யுப்மெண்ட் கோ லிமிடெட் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ரியல்மி 10 கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் புதிதாக சிவப்பு நிறம் மற்றும் கோகோ கோலா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பெரும்பாலும் ரியல்மி 10 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
ரியல்மி 10 மாடலில் 6.4 இன்ச் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. புது ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த மாத துவக்கத்திலேயே பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- ஸ்மார்ட்போன், டிவி, இயர்பட்ஸ் என தொடர்ந்து புது சாதனங்கள் வெளியீட்டை ஒன்பிளஸ் அறிவித்து வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் "கிளவுட் 11" நிகழ்வை பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன்கள், ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் மெக்கானிக்கல் கீபோர்டு என ஏராளமான சாதனங்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வரிசையில், ஒன்பிளஸ் நிறுவனம் மற்றொரு சாதனத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
புது சாதனம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் ஆகும். இது ஒன்பிளஸ் பேட் என அழைக்கப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பேட் விவரங்களை இதுவரை அறிவிக்கவே இல்லை. எனினும், இந்த டேப்லெட் விவரங்கள் ஒன்பிளஸ் 11 5ஜி மைக்ரசைட்-இல் இடம்பெற்று இருக்கிறது.

ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய ஒன்பிளஸ் பேட் மாடலுக்கென பிரத்யேக பக்கம் திறக்கப்பட்டுள்ளது. இதில் புது டேப்லெட் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் பேட் மாடலின் மூன்று புறங்களிலும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் பேட் பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வந்தது.
இந்த நிலையில், புது சாதனத்தின் வெளியீடு தற்போது உறுதியாகி விட்டது. இந்த டேப்லெட் டெஸ்டிங் இம்மமாத துவக்கத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக 2021 வாக்கில் ஒன்பிளஸ் பேட் டேப்லெட் மாடல் EUIPO டிரேட்மார்க் பெற்று இருந்தது. மேலும் இந்த டேப்லெட் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒப்போ டேப்லெட்களின் ட்வீக் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
- போக்கோ நிறுவனத்தின் புதிய X5 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அம்பலமாகி இருக்கிறது.
- போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வந்தது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான போக்கோ, தனது போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனை பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அடங்கிய விளம்பர படம் பதான் திரைப்படத்தின் இடைவெளி சமயத்தில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் போக்கோ X5 ப்ரோ போஸ்டரும் டுவிட்டரில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. போக்கோ X5 ப்ரோ வெளியீட்டு தேதி பற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக போக்கோ X5 ப்ரோ டீசரை இந்திய கிரிகெட் அணி வீரரும், போக்கோ விளம்பர தூதருமான ஹர்த்திக் பாண்டியா வெளியிட்டு இருந்தார்.

டுவிட்டரில் வெளியாகி இருக்கும் விளம்பர போஸ்டரில் ஹர்த்திக் பாண்டியா ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படம், அவரின் அருகில் ஸ்மார்ட்போன் அறிமுக தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில் போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
போக்கோ X5 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 120Hz ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், HDR10+ வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
போக்கோ X5 ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அட்ரினோ GPU, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத், GPS, 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது சாதனங்கள் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, இயர்பட்ஸ் என ஏராளமன சாதனங்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் டிவி 65Q2 ப்ரோ, ஒன்பிளஸ் கீபோர்டு வரிசையில், ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் டீசர் படத்தை ஒனபிளஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி புது ஸ்மார்ட்போனின் பின்புறம் வளைந்திருப்பதும், கிளாஸி ஃபிரேம் கொண்டிருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. இவைதவிர புது ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கனவே இணையத்தில் வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் 11R மாடலில் 6.7 இன்ச் FHD+ 1080x2412 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு, 2MP மேக்ரோ லென்ஸ் என மூன்று பிரைமரி சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் டிமென்சிட்டி 8100-மேக்ஸ் பிராசஸருக்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படலாம். புது ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- நாய்ஸ் நிறுவனத்தின் புது கேமிங் இயர்பட்ஸ் 36 மணி நேர பிளேபேக் வழங்கும் பேட்டரி உள்ளது.
- இதில் உள்ள குவாட் மைக் ENC என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நாய்ஸ் ஏர் பட்ஸ் 2 மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புது இயர்பட்ஸ் ஆகும். நீண்ட நேர கேமிங் செய்வோருக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் புது இயர்பட்ஸ் பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது.
நாய்ஸ் பட்ஸ் காம்பேட் மாடலில் க்ரிஸ்டர் க்ளியர் ஆடியோ அனுபவம் கிடைக்கும். இத்துடன் லோ லேடன்சி, 36 மணி நேரத்திற்கான பிளே டைம், குவாட் மைக் மூலம் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது கேமிங், அழைப்புகள், விர்ச்சுவல் மீடிங் மற்றும் தடையில்லா தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்ற இயர்பட்ஸ் ஆகும்.

ஃபெதர்லைட் கேஸ், யுஎஸ்ப டைப் சி ரக சார்ஜிங், IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள 13mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் எவ்வித தடையும் இன்றி அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. அதிநவீன டிசைன், குவாட் மைக் ENC மற்றும் 36 மணி நேர பேட்டி லைஃப் உள்ளிட்டவை கேமிங் அனுபவத்தை தடையில்லாமல் பார்த்துக் கொள்ளும்.
நாய்ஸ் பட்ஸ் காம்பேட் அம்சங்கள்:
இன்-இயர் டிசைன், ஒன் இயர் டச் கண்ட்ரோல்
13mm ஸ்பீக்கர் டிரைவர்
ப்ளூடூத் 5.3, A2DP, HFP, HSP, AVRCP ப்ரோஃபைல் சப்போர்ட்
அல்ட்ரா லோ-லேடன்சி 40ms
குவாட் மைக் ENC
முழு சார்ஜ் செய்தால் 8 மணி நேர பேக்கப்
சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 37 மணி நேர பேக்கப்
இன்ஸ்டாசார்ஜ், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங், சார்ஜிங் இண்டிகேட்டர்
IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
விலை மற்றும் விற்பனை விவரம்:
நாய்ஸ் பட்ஸ் காம்பேட் மாடல் அறிமுக சலுகையாக ரூ. 1,499 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஸ்டெல்த் பிளாக், கவெர்ட் வைட் மற்றும் ஷேடோ கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.
- இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
- சூப்பர் ஸ்லிம் டிசைன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ்ஒஎஸ் 12 வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 50MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், ஏஐ லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்ஃபினிக்ஸ் நோட் 12i அம்சங்கள்:
6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
ARM மாலி-G52 2EEMC2 GPU
4 ஜிபி LPDDR4x ரேம்
64 ஜிபி eMMC 5.1 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12
50MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
2MP டெப்த் சென்சார்
ஏஐ லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் ஃபோர்ஸ் பிளாக் மற்றும் மெட்டாவெர்ஸ் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் விற்பனை ஜனவரி 30 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.
- பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை தொடர்ச்சியாக மாற்றியமைத்து வருகிறது.
- விலை உயர்வு தவிர நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளிலும் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த விலை பிரீபெயிட் சலுகைகளின் விலையை உயர்த்தி இருக்கிறது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஒன்பது டெலிகாம் வட்டாரங்களில் விலை உயர்வை அமலுக்கு கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஹரியானா மற்றும் ஒடிசாவில் குறைந்த விலையில் கிடைத்த பிரீபெயிட் சலுகை விலையை 57 சதவீதம் அதிகரித்தது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் குறைந்த பட்ச பிரீபெயிட் சலுகை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏர்டெல் ரூ. 99 சலுகை விலை தற்போது ரூ. 155 ஆக அதிகரித்துள்ளது.

ஏர்டெல் ரூ. 99 விலை சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி, 200MB டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் போன்ற பலன்களை வழங்கியது. தற்போது புதிய குறைந்த விலை பிரீபெயிட் சலுகையான ரூ. 155 வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.
இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இவை எந்தெந்த பகுதிகள் என்ற விவரம் தற்போது மர்மமாகவே உள்ளது.
"சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எங்களின் குறிக்கோளை அடையும் வகையில், நாங்கள் மீட்டர்டு சலுகையை நிறுத்திவிட்டு, ரூ. 155 விலையில் எண்ட்ரி லெவல் சலுகையை அறிவித்து இருக்கிறோம். இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் உள்ளன. இது பயனர்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்கும்," என ஏர்டெல் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
- கோகோ கோலா ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- புது கோகோ கோலா ஸ்மார்ட்போன் இந்த காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
கோகோ கோலா ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா புது ஸ்மார்ட்போனின் அதிக தரமுள்ள ரெண்டர்களை வெளியிட்டு இருக்கிறார். இதில் ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என தெளிவாக தெரியவந்துள்ளது.
இதோடு கோகோ கோலா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். இதோடு புது ஸ்மார்ட்போனிற்கான கோகோ கோலா நிறுவனம் ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கோகோ கோலா கூட்டணி அமைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனினும், டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் ரெண்டர்களில் உள்ள கோகோ கோலா ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ரியல்மி 10 4ஜி போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ், வலது புறத்தில் வால்யும் ராக்கர், வளைந்த எட்ஜ்கள் உள்ளன. ஸ்மார்ட்போனை சுற்றி சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இவை தவிர கோகோ கோலா ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளன.
ரியல்மி 10 4ஜி அம்சங்கள்:
கோகோ கோலா ஸ்மார்ட்போன் ரியல்மி 10 4ஜி மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்ற பட்சத்தில் அதன் அம்சங்கள் பெரும்பாலும் ரியல்மி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ரியல்மி 10 4ஜி மாடலில் 6.5 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், பன்ச் ஹோல் கட் அவுட், மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், LPDDR4X ரேம், 128 ஜிபி UFS2.2 ஸ்டோரேஜ், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 8 ஜிபி டைனமிக் ரேம் சப்போர்ட், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP B&W போர்டிரெயிட் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
இவைதவிர பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஹெட்போன் ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஸ்மார்ட்போனை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும். கனெக்டிவிட்டிக்கு 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் ஜிபிஎஸ் உள்ளது.
- ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏராளமான புது சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- சமீபத்தில் ஒன்பிளஸ் 11 ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல்களின் இந்திய மற்றும் சர்வதேச வெளியீடு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலும் இதே நாளில் அறிமுகம் செய்யப்படும் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. "கிளவுட் 11" நிகழ்வில் புது ஸ்மார்ட்போன், இயர்பட் வரிசையில் தற்போது ஃபிளாக்ஷிப் டிவியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் டிவி Q சீரிஸ் அதிநவீன தொழில்நுட்பம், பிரீமியம் விஷூவல் மற்றும் சவுண்ட் அம்சங்களை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

முன்னதாக ஒன்பிளஸ் Q1 சீரிஸ் மாடல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் Q1 ப்ரோ வெர்ஷன் ஸ்லைடிங் சவுண்ட்பார் கொண்டிருந்தது. தற்போது புதிய Q சீரிஸ் டிவி வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே Q1 மாடலுடன் ப்ரோ மாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது Q2 ப்ரோ மட்டுமே அறிமுகமாகும் என தெரிகிறது.
ஒன்பிளஸ், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் புது ஸ்மார்ட் டிவி-க்காக "Notify Me" பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி இந்தியா முழுக்க ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் புதிய ஒன்பிளஸ் டிவி பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- ஜியோ தவிர ஏர்டெல் நிறுவனமும் நாடு முழுக்க தனது 5ஜி சேவைகளை தொடர்ச்சியாக பல நகரங்களில் வெளியிட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 50 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது நாடு முழுக்க 184 நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நகரங்களில் வசிக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் 5ஜி சேவைகளை தங்களின் சாதனங்களில் பயன்படுத்த அழைக்கப்படுவர். ஜியோ ட்ரூ 5ஜி 1Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்தலாம்.
"17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 50 கூடுதல் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிடுவதில் நெகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா மட்டுமின்றி உலகிலேயே 5ஜி சேவை வெளியீட்டில் இது மிகப்பெரியது ஆகும். ட்ரூ 5ஜி வெளியீட்டை வேகப்படுத்தி இருக்கிறோம். 2023 புத்தாண்டில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பலன்களை ஒவ்வொரு ஜியோ பயனரும் அனுபவிக்க வேண்டும். " என ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

"டிசம்பர் 2023 முதல் நாட்டில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். ஆந்திர பிரதேசம், அசாம், சட்டீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ் நாடு, தெலுங்கானா, உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி ஆர்கிடெக்ச்சரில் வேலை செய்யும். இது 5ஜி ஸ்பெக்ட்ரமை 700MHz, 3500MHz, 26GHz பேண்ட்களில் வழங்குகிறது. ஜியோ 5ஜி சேவைகள் 4ஜி நெட்வொர்க் சாராமல் இயங்கும் திறன் கொண்டிருக்கின்றன.
- மோட்டோரோலா நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- புதிய மோட்டோ G53 5ஜி மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
மோட்டோரோலா நிறுவனம் பல்வேறு மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மோட்டோ G13, மோட்டோ G23, மோட்டோ G53 மற்றும் மோட்டோ G73 5ஜி போன்களின் விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. பலமுறை இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் லீக் ஆகி இருக்கின்றன.
அந்த வரிசையில், தற்போது மோட்டோ G53 ஸ்மார்ட்போன் லைவ் படங்கள் வெளியாகி உள்ளது. டிப்ஸ்டர் பரஸ் குக்லனி மற்றும் மைஸ்மார்ட்-ப்ரைஸ் இணைந்து இதனை வெளியிட்டுள்ளன. இத்துடன் ஸ்மார்ட்போனின் ரிடெயில் பாக்ஸ் படங்களும் வெளியாகி உள்ளன. முன்னதாக மோட்டோ G23 ரெண்டர்கள் லீக் ஆன நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் அதன் சீன மாடல் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் ஹார்டுவேர் அம்சங்கள் சர்வதேச சந்தைக்கு ஏற்ப மாற்றப்பட்டு இருக்கிறது. டிசைனை பொருத்தவரை மோட்டோ G53 5ஜி மாடலில் செவ்வக கேமரா மாட்யுல், எல்இடி ஃபிலாஷ் உள்ளிட்டவை காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்க் புளூ நிறம் கொண்டிருக்கிறது.
மோட்டோ G53 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
புதிய மோட்டோரோலா மோட்டோ G53 5ஜி மாடலில் 6.53 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 1600x720 பிக்சல், பன்ச் ஹோல் கட்அவுட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ பிராசஸர், அட்ரினோ GPU, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. புதிய மோட்டோ G53 5ஜி மாடல் 180 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதன் ரிடெயில் பாக்ஸ் விவரங்களின் படி மோட்டோ G53 5ஜி ஸ்மார்ட்போனுடன் சார்ஜிங் அடாப்டர், யுஎஸ்பி டைப் சி கேபிள், சிம் எஜெக்டர் டூல் மற்றும் போன் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் புக்லெட் இடம்பெற்று இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பிலாஸ்டிக் கவரில் உள்ள விவரங்களின் படி இந்த மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 5ஜி பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் "XT2335-2" எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும் இது சீனாவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் உறுதியாகி இருக்கிறது.
Photo Courtesy: MySmartPrice






