என் மலர்
நீங்கள் தேடியது "வைபவ் சூர்யவன்ஷி"
- U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.
- சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஹராரே:
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே 53 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென் டாக்கின்ஸ் 66 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.
சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்னாள், இந்நாள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- 40.2 ஓவர்கள் மட்டுமே இங்கிலாந்தால் தாக்குப்பிடித்தது.
- பால்கனர் சதம் அடித்தாலும் 311 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது. சூர்யவன்ஷி 80 பந்தில் 15 பவுண்டரி, 15 சிக்சருடன் இந்த ரன்களை குவித்தார். ஆயுஷ் மாத்ரே 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வேதாந்த் திரிவேதி 36 பந்தில் 32 ரன்களும், விஹான் மல்கோத்ரா 36 பந்தில் 30 ரன்களும், அபிக்யான் கந்து 31 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர். கனிஷ்க் சவுகான் ஆட்டமிழக்கால் 20 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 56 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். பென் மேய்ஸ் 28 பந்தில் 45 ரன்கள் விளாசினார். அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தாலும் கலெப் பால்கனர் அபாரமாக விளையாடி 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து 40.2 ஓவரிலேயே 311 ரன்கள் எடுத்து அல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அம்ப்ரிஸ் 3 விக்கெட்டும் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6-வது முறையாக இளையோர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- சூர்யவன்ஷி ஸ்கோரில் தலா 15 பவுண்டரி, சிக்சர்கள் அடங்கும்.
- அவருக்கு அடுத்தப்படியாக ஆயுஷ் மாத்ரே 53 ரன்கள் சேர்த்தார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஜார்ஜ் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.
அடுத்து வைபவ் சூர்யவன்ஷி உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சூர்யவன்ஷி 32 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆயுஷ் மாத்ரே 50 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யவன்ஷியுடன் வேதாந்த் திரிவேதி ஜோடி சேர்ந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 55 பந்தில் தலா 8 பவுண்டரி மற்றும் சிக்சர்களுடன் சதம் அடித்தார். சதம் அடித்த அவர் தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்த்தினார். 71 பந்தில் 150 ரன்னைக் கடந்தார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 15 பவுண்டரிகள், 15 சிக்சர்கள் அடங்கும். சூர்வன்ஷி ஆட்டமிழக்கும்போது இந்தியா 25.2 ஓவரில் 251 ரன்கள் குவித்திருந்தது.
அதன்பின் வந்த வேதாந்த் திரிவேதி 36 பந்தில் 32 ரன்களும், விஹான் மல்கோத்ரா 36 பந்தில் 30 ரன்களும், அபிக்யான் கந்து 31 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர்.
கனிஷ்க் சவுகான் ஆட்டமிழக்கால் 20 பந்தில் 37 ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவரில 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது.
பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
- 32 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம்
- 55 பந்தில் தலா 8 பவுண்டரி மற்றும் சிக்சர்களுடன் சதம் அடித்தார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஜார்ஜ் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.
அடுத்து வைபவ் சூர்யவன்ஷி உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சூர்யவன்ஷி 32 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆயுஷ் மாத்ரே 50 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யவன்ஷியுடன் வேதாந்த் திரிவேதி ஜோடி சேர்ந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 55 பந்தில் தலா 8 பவுண்டரி மற்றும் சிக்சர்களுடன் சதம் அடித்தார்.
சதம் அடித்த அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தியா 22.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
- வைபவ் சூர்யவன்ஷி 127 ரன்களுடனும், ஆரோன் ஜார்ஜ் 118 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
- 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது.
இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் முகமது பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் இந்திய அணி தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி , ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
இதில் வைபவ் சூர்யவன்ஷி 127 ரன்களுடனும், ஆரோன் ஜார்ஜ் 118 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது.
- உலக கோப்பை தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யவன்ஷி செயல்படுவார்.
மும்பை:
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நடக்கவுள்ளது. இந்த தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாகவும் ஆரோன் ஜார்ஜ் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனெனில் ஆயுஷ் மாத்ரே மற்றும் விஹான் மல்ஹோத்ரா காயம் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தவறவிடுகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பெனோனியில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
U19 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:-
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்எஸ் அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ படேல், மொஹமத் சிங் ஏனான், டிஹில், குமார், டெனில், ஹெனில்.
- பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
- ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் சூர்யவன்ஷி ஆவார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அவரது கிரிக்கெட் பயணம் 4 வயதில் தொடங்கியது. அவரது தந்தை அவரது ஆர்வத்தை அடையாளம் கண்டு 9 வயதில் சமஸ்திபூரில் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். அவர் தனது சாதனைகளால் கிரிக்கெட் உலகில் பேசப்படும் ஒரு வீரராக உருவெடுத்துள்ளார்.
அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். மேலும் இளம் வயதில் சதம் (101 ரன்கள் 38 பந்துகளில்) அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அடுத்தடுத்து பல சாதனைகளை அவர் படைத்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் 14 வயதிலேயே பல சாதனைகளை படைத்த சூர்யவன்ஷிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சூர்யவன்ஷிக்கு இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்கினார். இது சிறந்த இளம் திறமையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய குடிமகன் விருது ஆகும்.
இந்த விருது பெறுவதற்காக இன்று நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பீகார் அணியில் சூர்யவன்ஷி, சகிபுல் கனி சதம் விளாசினர்.
- ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் சதம் விளாசினார்.
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் 3 இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அதிவேக சதம் அடித்து பல சாதனைகளை குவித்து வருகின்றனர். பிளேட் வகைப்பிரிவில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியை சேர்ந்த இளம் வீரர் சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்தார்.
இதே போட்டியில் பீகார் அணியின் கேப்டன் சகிபுல் கனி 32 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம் வைபவ் சாதனையை சகிபுல் முறியடித்தார்.
எலைட் வகைப்பிரிவில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஒரு இந்தியரின் வேகமான லிஸ்ட் ஏ சதங்கள்:
32 பந்துகள்: சகிபுல் கனி (பீகார்)
33 பந்துகள்: இஷான் கிஷன் (ஜார்க்கண்ட்)
35 பந்துகள்: அன்மோல்பிரீத் சிங் (பஞ்சாப்)
36 பந்துகள்: வைபவ் சூர்யவன்ஷி (பீகார்)
40 பந்துகள்: யூசுப் பதான் (பரோடா)
41 பந்துகள்: உர்வில் படேல் (குஜராத்)
42 பந்துகள்: அபிஷேக் சர்மா (பஞ்சாப்)
முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர்கள்:-
29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்
31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்
32 பந்துகள்: சகிபுல் கனி
33 பந்துகள்: இஷான் கிஷன்
35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்
36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்
36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி
37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி
- சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார்.
- லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 'பிளேட்' வகைப்பிரிவில் இன்று பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பீகார் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்று தொடக்க வீரராக விளையாடினார்.
எப்போதும் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் 36 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். இரட்டை சதத்தை தவறவிட்டாலும் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
சதம் அடித்ததன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர்கள்:-
வைபவ் சூர்யவன்ஷி - 14 ஆண்டுகள் 272 நாட்கள் (2025)
ஜஹூர் இலாஹி - 15 ஆண்டுகள் 209 நாட்கள் (1986)
ரியாஸ் ஹாசன் - 16 ஆண்டுகள் 9 நாட்கள் (2018)
மேலும் 36 பந்தில் சதம் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். முதல் இடத்தில் அன்மோல்ப்ரீத் சிங் 35 பந்தில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டில் அடித்திருந்தார்.
இந்தியர்களின் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதத்தின் பட்டியல்:
35 - அன்மோல்ப்ரீத் சிங், பஞ்சாப் vs அருணாச்சல பிரதேசம், 2024
36 - வைபவ் சூரியவன்ஷி, பீகார் vs அருணாச்சல பிரதேசம், இன்று
40 - யூசுப் பதான், பரோடா vs மகாராஷ்டிரா, 2010
41 - உர்வில் படேல், குஜராத் vs அருணாச்சல பிரதேசம், 2023
42 - அபிஷேக் சர்மா, பஞ்சாப் vs மத்திய பிரதேசம், 2021
ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் ஷாஹித் அப்ரிடி சதம் அடித்திருந்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம்
29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்
31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்
35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்
36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்
36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி
37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி
குறைந்த பந்தில் அதிவேக 150 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்த வீரர்கள்:-
59 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs அருணாச்சல பிரதேசம் (2025)
64 பந்துகள் - ஏபி டிவில்லியர்ஸ் vs மேற்கிந்திய தீவுகள் (2015)
65 பந்துகள் - ஜோஸ் பட்லர் vs நெதர்லாந்து (2022)
- வைபவ் சூர்யவன்ஷி 84 பந்தில் 190 ரன்கள் விளாசியுள்ளார்.
- இதில் 16 பவுண்டரிகளும் 15 சிக்சர்களும் அடங்கும்.
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. அவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு எலைட் வகைப் பிரிவுக்கு ஏற்றம் பெறும். எலைட் பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்படும் அணி அடுத்த ஆண்டு பிளேட் வகைப்பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.
இந்நிலையில் இந்த பிரிவில் பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பீகார் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்று தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த வைபவ், இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 10 ரன்னில் தனது இரட்டை சதத்தை வைபவ் தவறவிட்டார். அவர் 84 பந்தில் 190 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகளும் 15 சிக்சர்களும் அடங்கும்.
இதற்கு முன்பு u19 ஆசிய கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் 171 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
துபாயில் நடந்த U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 347 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 156 ரன்களில் சுருண்டு 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்தியா அணி பேட்டிங் செய்த போது 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அலி ராசா வீசினார். அந்த ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் என பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரில் வைபவ் 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
விக்கெட் விழுந்த உற்சாகத்தில் பந்துவீச்சாளர் அலி ராசா, வைபவ் சூர்யவன்ஷிக்கு மிக அருகில் சென்று, அவர் முகத்திற்கு நேராக ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது வைபவ்விற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
பெவிலியன் திரும்பும் போது கடுப்பான வைபவ் சூர்யவன்ஷி, அலி ராசாவை பார்த்து முறைத்தபடியே, திடீரென தனது காலை கையால் சுட்டிக்காட்டி ஏதோ சைகை செய்தார். "நீ என் காலில் இருக்கும் ஷூ.." என்பது போல அவர் சைகை செய்தார்.
மைதானத்தில் அவுட் ஆகி வெளியேறும் போது, எதிரணி வீரரை பார்த்து ஷூவை சுட்டிக்காட்டி வம்பிழுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது. வெறும் 14 வயதான வைபவ் களத்தில் இப்படியா நடந்து கொள்வது? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனது ஓவரில் 3 சிக்சர் அடித்த பேட்டரின் விக்கெட்டை வீழ்த்தும் போது எந்தவொரு பந்து வீச்சாளரும் ஆக்ரோஷமாக கொண்டாடுவார்கள் அதைதான் அவரும் செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
- சூர்யவன்ஷி 95 பந்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- இதில் 14 சிக்சர்களும் அடங்கும்.
துபாய்:
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இதில் பீகாரைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். அவர் 95 பந்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 14 சிக்சர்களும் அடங்கும்.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 32 பந்தில் 100-ஐ கடந்து டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர்களில் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் (14 சிக்சர்) அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
ஏற்கனவே, ஐ.பி.எல். மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.






