search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பு மனுதாக்கல்"

    • வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 22-ந்தேதியே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    2-வது கட்டமாக பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூர், பிதார், கொப்பலா, பெல்லாரி, பாருங்கள், தார்வாட், உத்தரகன்னடம், தாவணகெரே, ஷிமோகா, சிக்கோடி ஆகிய 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

    • பாராளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து விடுவார்.
    • ஜனநாயம் செத்து விட்டது என்பதை உணர்த்துவதற்காக சவப்பெட்டியுடன் வந்ததாக தெரிவித்தார்.

    கோவை:

    கோவையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நூர்முகமது. இவர் கோவையின் தேர்தல் மன்னனாக அறியப்படுகிறார். பாராளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து விடுவார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதை அடுத்து இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது அவர் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சவப்பெட்டியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நூர்முகமது மனுத்தாக்கல் செய்தார். இவர் 42-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது 42-வது முறையாக, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன். ஜனநாயம் செத்து விட்டது என்பதை உணர்த்துவதற்காக சவப்பெட்டியுடன் வந்ததாக தெரிவித்தார். 

    • வேட்பு மனு பெறப்படும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டுள்ளது.
    • அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நுழையாமல் இருப்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற இருப்பதையொட்டி தமிழ்நாட்டில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதி, விளவங்கோடு சட்டசபை தொகுதி, புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி ஆகியவற்றில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்வதற்காக அரசு அலுவலகங்களில் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக கட்டா ரவி தோகா மற்றும் உதவி தேர்தல் அதிகாரி எஸ்.தனலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

    மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு ஷெனாய் நகரில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கே.ஜெ. பிரவீன்குமார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கவிதா நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.


    இதேபோல் தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.பி. அமித் மற்றும் உதவி தேர்தல் அதிகாரி பி.எம்.செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தென் சென்னையில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம்.

    வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள் இன்று ஆர்வமுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    வேட்பு மனு பெறப்படும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டுள்ளது. அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நுழையாமல் இருப்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    வேட்பாளர் வாகனம் மற்றும் 2 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    வேட்பு மனு தாக்கலின் போது விதிமுறைகளை பின்பற்றும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. மனுதாக்கல் செய்ய வரும் போது முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

    வேட்பாளர்கள் நேரடியாக அல்லது முன்மொழிபவர் வழியே வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். தபாலில் வேட்பு மனுவை அனுப்ப கூடாது. முன்மொழிபவர் அல்லாத நபரிடம் கொடுத்து அனுப்பினாலும் மனு பெற்றுக்கொள்ளப்படாது.

    வேட்பு மனுவை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம். ஆனால் ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியாது. அதை பிரிண்ட் எடுத்து நேரடியாக வழங்க வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால் ஒருவர் முன்மொழிந்தால் போதும் சுயேட்சை வேட்பாளராக இருந்தால் 10 பேர் முன்மொழிய வேண்டும்.

    அதேபோல் வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள், வழக்கு விபரம் போன்றவற்றை முழுமையாக தெரிவிக்க வேண்டும்.

    வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இடங்களில் தகராறு ஏற்படாமல் இருப்பதற்காக அதிகாரிகள் மட்டத்தில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது.
    • இதில் 70-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. இதில் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    வரும் 10-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    வேட்புமனுதாக்கல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர்.

    • வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (31-ந்தேதி) தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர்த்து தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்பு மனுக்களை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் தாக்கல் செய்யலாம்.

    வேட்பு மனுக்கள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மனு தாக்கலின் போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலே அரசியல் கட்சியினர் நிற்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் 4 புறமும் 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகள் வரையபப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×