search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது
    X

    கர்நாடகாவில் 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது

    • வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 22-ந்தேதியே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    2-வது கட்டமாக பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூர், பிதார், கொப்பலா, பெல்லாரி, பாருங்கள், தார்வாட், உத்தரகன்னடம், தாவணகெரே, ஷிமோகா, சிக்கோடி ஆகிய 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

    Next Story
    ×