search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 96 பேர்  வேட்பு மனுதாக்கல்
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 96 பேர் வேட்பு மனுதாக்கல்

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது.
    • இதில் 70-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. இதில் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    வரும் 10-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    வேட்புமனுதாக்கல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர்.

    Next Story
    ×