search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு இடிப்பு"

    • 2005 -ம் ஆண்டு அரசு மூலம் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது.
    • குடியிருந்தவர்களை தாக்கி வெளியே தள்ளியதால் ராணி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி கிராமம் மைலம்பாளையத்தை சேர்ந்த ராணி என்பவருக்கு கடந்த 2005 -ம் ஆண்டு அரசு மூலம் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது. மேற்படி இடத்தில் அவர் குடிசை அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.

    இந்தநிலையில் இடம் தொடர்பான முன்விரோதம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த கவுரி ( வயது 50), சாந்தி (50), மாணிக்கம் மூர்த்தி( 65), ராசு (54) மற்றும் அவரது உறவினர்கள் , ராணி குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது.

    மேலும் ராணி , அவரது மகள் மோகனப்பிரியா (30), ராணியின் பேரன் கணேஷ்(2½) ஆகியோரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    குன்னத்தூர் நில வருவாய் ஆய்வாளர் நிலத்தை அளந்து கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் குடியிருந்தவர்களை தாக்கி வெளியே தள்ளியதால் ராணி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×