என் மலர்
இந்தியா

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே காஷ்மீரில் முக்கிய வனப்பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட 2 பேர் பிடி பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






