search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறி தொழில்"

    • பஞ்சு விலை ஒரு பேலுக்கு ரூ.15,000 உயர்ந்துள்ளது.
    • விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட் பறிபோகும்.

    அவிநாசி :

    தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் அவிநாசி சி .ஐ. டி. யு. அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எம் . சந்திரன், மாநில பொருளாளர் எம். அசோகன் உட்பட மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய அரசின் தவறான கொள்கை காரணமாக விசைத்தறி தொழில் பெறும் நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது காரணமாக பெரும் போராட்டங்களுக்கு பின்பு ஓரளவு குறைந்த நிலையில், தற்பொழுது பஞ்சு விலை ஒரு பேலுக்கு ரூ.. 15,000 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நூல் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தொழில் நெருக்கடியும் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் உருவாகியுள்ளது.

    இதில் ஒன்றிய அரசும் மாநில அரசும் உடனடியாக தலையிட்டு பஞ்சு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. மசோதாவால் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட் பறிபோகும். கைத்தறி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து ஆகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மின்சாரம் தனியாருக்கு வழங்கப்படும்.

    அதேபோல மின்சாரத்துறையில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஆகவே ஒன்றிய அரசு இந்த சட்டத்தின் முன் வடிவை திரும்ப பெற வேண்டும். அதே போல தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளி மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 நாட்களுக்கு முன்பு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 5 முதல் 10ந் தேதி வரை தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
    • 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளது.

    மங்கலம் :

    அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் இருக்கின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கூலி உயர்வு பெறாமல் சென்ற மார்ச் மாதம் தான் தமிழக அரசு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். மேலும் வரலாறு காணாத பஞ்சுவிலை ஏற்றத்தால் மாதம் 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள இந்த தொழிலுக்கு மின்கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.

    விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள ஜவுளித்தொழில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இயங்கிகொண்டு உள்ளது.குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் இரவு பகல் பாராமல் உழைத்தும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். விசைத்தறி தொழில் கஷ்டங்களை கருத்தில் கொண்டு ஏற்கனவே தமிழக அரசு விசைத்தறிக்கு தனியாக சாதா விசைத்தறி என டேரிப் பிரித்து மானியமாக 750 யூனிட் மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் விசைத்தறிக்கு சுமார் 30சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவ்வளவு வருடம் செய்து வந்த தொழிலை விட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும் . எனவே அழிந்து வரும் இத்தொழிலையும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சுமார் 10 லட்சம் நபர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    ×