என் மலர்
நீங்கள் தேடியது "வளைகுடா நாடுகள்"
- ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
- 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.
பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய ஸ்பை திரில்லர் படமான 'துரந்தர்' இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' புகழ் ஆதித்ய தார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தக் கதை பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.
வெளியான ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் இந்தப் படம் ரூ. 200 கோடி நிகர வசூலைத் தாண்டியது. வளைகுடா நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டுச் சந்தைகளில் ரூ. 44.5 கோடியை வசூலித்தது.
இந்த படம் பாகிஸ்தானுக்கு எதிரான செய்தியைக் கொண்டிருப்பதாகக் கூறி ஆறு வளைகுடா நாடுகள் படத்தைத் தடை செய்துள்ளன.
பாலிவுட் படங்களுக்கு வளைகுடா பகுதி ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த சூழலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் படத்தின் கருப்பொருளை எதிர்த்து அதன் வெளியீட்டிற்கு அனுமதி மறுத்தனர்.
முன்னதாக 'ஃபைட்டர்', 'டைகர் 3', 'ஆர்டிகிள் 370' மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளில் இதேபோன்ற தடைகளைச் சந்தித்துள்ளன.
- சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
- இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவைச் சேர்ந்த மலையாள மக்கள் வளைகுடா நாடுகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கப்பல் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து கேரள கடல்சார் வாரியம் விழிஞ்சம், கொல்லம், பேப்பூர் மற்றும் அழிக்கால் துறை முகங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கப்பல் சேவைகளை இயக்க முடிவு செய்தது. இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.
அதன்பேரில் கப்பல் சேவைகளை தொடங்க 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கேரள கடல்சார் வாரியத் தலைவர் என்.எஸ்.பிள்ளை தலைமையில் கொச்சியில் நாளை (27-ந் தேதி) முதல் கட்ட விவாதம் நடைபெற உள்ளது. இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டால், பயண நேரம் அதிகரித்தாலும், அதிக சரக்குகளை கொண்டு செல்லமுடியும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.






