என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்டம்"
- கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
- புனரமைப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மைத்துறை மூலம் டி.மானகசேரி கிராமத்தில் தரிசு நிலங்களில் செம்மை நெல் சாகுபடி எந்திரம் மூலம் நடைபெற்று வரும் நடவு பணிகள், நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் நடவு செய்யப் பட்டுள்ள கரும்புகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குதிரைவாலி விதைகள், ரூ.42 ஆயிரம் மானியத்தில் சுழல் கலப்பையும், ரூ.2,500 மானியத்தில் நெல் விதைக்கும் கருவியையும், ரூ.6 ஆயிரம் மானியத்தில் சோளம் இடு பொருட்கள், பண்ணை கருவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லியில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள அங்கன் வாடிகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.அங்கு சேதமடைந்த கட்டி டங்களை புனரமைப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
- வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
- நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வ செய்தனர்.
சிவகங்கை நகராட்சியில் கட்டப்பட்டுவரும் அறிவுசார் மையம், செட்டியூரணியில் கரைகளை பலப்படுத்தும் பணி, வாரசந்தை, தெப்பக்குளம், ராணி ரெங்க நாச்சியார் பஸ் நிலையம் ஆகியவற்றில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அவர்கள் இதுதொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கூறியதா வது:-
சிவகங்கை நகராட்சி யில் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்க ளுக்கு பயிற்சி வழங்க ரூ.1.85 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வரு கிறது. ெசட்டியூரணியை அதிக ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணியும், அதனை சுற்றி வேலி அமைக்கும் பணியும், நடை பாதை ஏற்படுத்தவும் பணிகள் நடந்து வருகிறது.
சிறுவர்களுக்கான விளை யாட்டு உபகரணங்களுக்காக ரூ.1.60 கோடி ஒதுக்கீடு ெசய்யப்பட்டுள்ளது. சாலையோர கடைகளை ஒழுங்குப்படுத்தவும், வாரசந்தையில் கூடுதல் கடைகள் அமைக்கவும் ரூ.3 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. ராணி ரெங்கநாச்சியார் பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்