search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி சேவை"

    வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கி உள்ளன. #BankStrike
    சென்னை:

    அனைத்து வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் ஒரே விகிதத்தில் சம்பளம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வங்கி மேலாளர்கள், சீனியர் மேலாளர்கள், உதவி மேலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் ஸ்டிரைக்கால் அனைத்து வங்கி அதிகாரிகளும் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் மட்டும் வேலைக்கு வந்திருந்தனர். கிளர்க், கேஷியர், உதவியாளர்கள், கணக்கு மற்றும் கடன் வழங்கக்கூடிய பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். வங்கிகள் திறந்து இருந்தபோதிலும் சேவைகள் எதுவும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. வங்கி அதிகாரிகள் கையில் தான் பணம் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி, ரகசிய சாவி போன்றவை இருக்கும். அவர்கள் வந்தால்தான் பணப்பரிமாற்றம் மற்றும் காசோலை பரிவர்த்தனை செய்ய முடியும்.

    அதிகாரிகள் இல்லாமல் ஊழியர்கள் மட்டும் வங்கிகளில் இருந்ததால் வங்கி சேவை எதுவும் நடைபெறவில்லை. பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின.

    வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சென்னையில் உள்ள அனைத்து அரசு வங்கிகளும் அதிகாரிகள் ஸ்டிரைக்கால் செயல்படவில்லை. நாளை சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் விடுமுறை என்பதால் தொழில்செய்வோர், வியாபாரிகள், நிறுவனங்களின் பணப்பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    ஏ.டி.எம்.கள் செயல்பட்டாலும் அதிலிருந்து குறைந்த அளவுதான் பணம் எடுக்க முடிந்தது. பெரிய அளவிலான தொகை எடுக்க முடியாமல் வர்த்தக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டனர்.

    அதே நேரத்தில் அனைத்து தனியார் வங்கிகளும் இன்று செயல்பட்டன. தனியார் வங்கிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. காசோலை பரிமாற்றம், டி.டி. எடுத்தல் போன்ற பணிகள் எவ்வித கணக்கமும் இல்லாமல் நடைபெற்றது.


    புரசைவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடப்பட்டு இருக்கும் காட்சி

    தேசிய வங்கிகளான ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.ஓ.பி., பெடரல் வங்கி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, கார்ப்பரேசன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் சேவை முடங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவை கிடைக்காது என்பதால் மக்கள் வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் படையெடுக்க தொடங்கி விட்டனர்.

    24-ந்தேதி திங்கட்கிழமை மட்டும் வங்கிகள் செயல்படும். அதனை தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி கிறிஸ்துமஸ், 26-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தொடர் விடுமுறை, வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்களின் பணப்பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கும். #BankStrike

    தூத்துக்குடி தபால் நிலையங்களில் வங்கி சேவை வருகிற 21-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா ஆறுமுகநாடார் ராஐம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தபால் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.சாந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

    நாடு முழுவதும் தபால் நிலையங்களில் வங்கி சேவை வருகிற 21-ந் தேதி(செவ்வாய்கிழமை) தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது ஒரு கிளை என்ற நோக்கத்தில் 650 கிளைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சேவையில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டிய அவசிய மில்லை (ஜீரோ பேலன்ஸ்). 
    வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண், பான் எண் மற்றும் செல்போன் எண் மட்டும் போதுமானது. உங்கள் இருப்புத் தொகைக்கு ஏற்ப 4 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். 

    இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கிளையிலும் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். தேவையெனில் வாடிக்கையாளர் பகுதி தபால்காரர் வாடிக்கையாளர் வீட்டுக்கு வந்து வங்கி சேவை அளிப்பார். 
    மேலும் மொபைல் பேங்கிங் அப்பிளிகேசன், மிஸ்டுகால் பேங்கிங், எஸ்.எம்.எஸ். பேங்கிங், ஐவிஆர் பேங்கிங், கியூ.ஆர் கோடு போன்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், லோன் பீரிமியம் போன்றவற்றை உங்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கின் மூலம் மிக எளிமையாக நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செலுத்த முடியும். 

    இந்த சேவை தூத்துக்குடி தலைமை தபால் நிலையம், தூத்துக்குடி மேலூர் துணை தபால் அலுவலகம், ஆரோக்கியபுரம், மீளவிட்டான், சிலுவைப்பட்டி ஆகிய தபால் அலுவலகங்களில் தொடங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா தூத்துக்குடி ஆறுமுகநாடார் ராஐம்மாள் திருமண மண்டபத்தில் வருகிற 21-ந் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, கீதாஜீவன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி மக்கள் இந்த சேவையை பயன் படுத்தி கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
    அனைத்து தபால் நிலையங்களிலும் விரைவில் வங்கி சேவை செயல்படுத்தப்படும் என்று குழித்துறையில் மத்திய மந்திரி மனோஜ் சின்கா கூறினார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தபால் நிலையம் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    புதிய கட்டிடத்தை மத்திய தொலை தொடர்பு மந்திரி மனோஜ் சின்கா திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். புன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு இந்தியா முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் 300 பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 214 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    2019-ம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பாஸ்போர்ட் மையம் என்கிற நிலையை நிறைவேற்ற உள்ளோம்.

    கிராமப்புற தபால் நிலையங்கள் உள்பட அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து விதமான வங்கி சேவைகளை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளோம். இதனால் கிராம பகுதி மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×