search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி ஊழியர் தற்கொலை"

    • மாரிச்செல்வம் கடந்த 2 வருடங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரி ராஜா மகன் மாரிச்செல்வம்(வயது 25). இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் மாரிச்செல்வம் கடந்த 2 வருடங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாரிச்செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில் இருந்தார். மயங்கி நிலையில் இருந்த மாரிச்செல்வம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண புகைப்படங்களை தனது செல்போனில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.
    • மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே வீரக்கல்லைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 33). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உறவினரின் மகளான சித்ரா என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமண புகைப்படங்களை தனது செல்போனில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பணியாற்றியபோது வந்தவாசியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஸ்டேட்டசில் இருந்த படங்களைப் பார்த்து பிரியா ராஜசேகரனிடம் கேட்டுள்ளார். மேலும் அவர்கள் காதலித்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் பிரியாவுக்கு ராஜசேகரன் தாலி கட்டுவது போன்ற புகைப்படங்களை சித்ரா மற்றும் உறவின ர்களுக்கு அனுப்பி யுள்ளார். இதனால் ராஜசேகரன் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான ராஜசேகரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜசேகரனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கியிருந்த அனிதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • 30 வயதாகியும் திருமணமாகவில்லையே என்ற விரக்தியில் இருந்த அனிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    தருமபுரி நகர பகுதிக்குட்பட்ட குமாரசாமி பேட்டையை சேர்ந்தவர் அனிதா (வயது 30). இவர் சேலம் அம்மாப்பேட்டை ஸ்டேட் பாங்கியில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கியிருந்த அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 30 வயதாகியும் திருமணமாகவில்லையே என்ற விரக்தியில் இருந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பதறியபடி அங்கிருந்து ஓடி வந்த உறவினர்கள் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனிதாவை சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனிதா இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×