search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருதலை காதல் விவகாரம்: வி‌ஷம் குடித்த வங்கி ஊழியர் மரணம்
    X

    ஒருதலை காதல் விவகாரம்: வி‌ஷம் குடித்த வங்கி ஊழியர் மரணம்

    சேலத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் வங்கி ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டி, ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கோபால் (வயது 22). இவர் 5 -ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கோபால் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்தார்.

    மேலும் தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியதாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் தனக்கு படிப்புத் தான் முக்கியம். நான் யாரையும் காதலிக்கமாட்டேன் என்று தெரிவித்தார். இருப்பினும் கோபால் தொடர்ந்து அந்த பெண்ணிடம் காதலை ஏற்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் காதலை ஏற்க மறுத்து விட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த கோபால் வி‌ஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கோபாலை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×