search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி: வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    செம்பட்டி: வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

    • திருமண புகைப்படங்களை தனது செல்போனில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.
    • மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே வீரக்கல்லைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 33). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உறவினரின் மகளான சித்ரா என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமண புகைப்படங்களை தனது செல்போனில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பணியாற்றியபோது வந்தவாசியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஸ்டேட்டசில் இருந்த படங்களைப் பார்த்து பிரியா ராஜசேகரனிடம் கேட்டுள்ளார். மேலும் அவர்கள் காதலித்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் பிரியாவுக்கு ராஜசேகரன் தாலி கட்டுவது போன்ற புகைப்படங்களை சித்ரா மற்றும் உறவின ர்களுக்கு அனுப்பி யுள்ளார். இதனால் ராஜசேகரன் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான ராஜசேகரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜசேகரனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×