search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநாத சுவாமி கோவில்"

    • ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    பிரதமர் மோடி 2 நாள் ஆன்மீக பயணமாக இன்று பிற்பகல் ராமேசுவரம் வருகை தருகிறார். இதையொட்டி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமேசுவரத்தில் அனைத்து விதமான போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் ராமேசுவரத்தில் கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. 3,400 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களில் ராஜஸ்தானை சேர்ந்த 1,200 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக நேற்று முன்தினம் சிறப்பு ரெயில் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து பேருந்துகளில் ராமேசுவரம் வந்தனர்.

    இன்று அவர்கள் மீண்டும் மதுரைக்கு திரும்பவேண்டிய நிலையில், பிரதமர் மோடி வருகையால் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் தவித்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

    பிரதமர் மோடி பிற்பகலில் ராமேசுவரம் வந்தபிறகு மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநில பக்தர்கள் பத்திரமாக மதுரைக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சுற்றுலா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 21.01.2024 அன்று ராமேசுவரம் நகரில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தனுஷ்கோடி சுற்றுலா தளத்திற்கு 20.01.2024 நண்பகல் 12 மணி முதல் 21.01.2024 நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி பாதுகாப்பு கருதி நாளை (20.01.2024) மற்றும் 21.01.2024 ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    20.01.2024 அன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம் நகர் பகுதியிலும் இதே நேரத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    21.01.2024 அன்று ராமேசுவரம் நகரில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் சென்று வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    தனுஷ்கோடி சுற்றுலா தளத்திற்கு 20.01.2024 நண்பகல் 12 மணி முதல் 21.01.2024 நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

    ராமநாத சுவாமி கோவிலில் 20.01.2024 அன்று பிரதமர் மோடி வருகையையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    பாதுகாப்பு நலன் கருதி ராமேசுவரம் நகர்ப்பகுதி முழுவதும் 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இருதினங்களுக்கு டிரோன் கேமரா பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.
    • விடுமுறை நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தென்னகரத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு நாள் தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வார விடுமுறை நாட்களில் ராமேசுவரத்துக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    அதன்படி விடுமுறை நாளை முன்னிட்டு நேற்று இரவு முதல் தமிழகம் முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெயில், பஸ், வேன், கார் மூலம் ராமேசுவரம் வந்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக வடமாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

    இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் பின்னர் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினர். தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமியையும், பர்வத வர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.

    விடுமுறை நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. அக்னி தீர்த்த கடற்கரை, கோவில், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகளவில் பக்தர்கள் வருகை தந்ததால் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகளில் வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.

    • ஸ்ரீ ரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.
    • தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

    ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு அவைகளை பற்றி பார்ப்போம்.

    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

    உற்சவர் அல்லாமல் மூலவரே வீதிவலம் வருவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் தான்.

    சிதம்பரம் கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

    சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் மட்டும் தான்.

    எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

    இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள்.

    நவம்பரில் கோவிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோவில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறு மாதம் எரிந்துகொண்டே இருக்கும்.

    கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் 'பஞ்சவர்ணேஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறது.

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீறுகுகை.

    தருமபுரியிலுள்ள பாப்பாரப்பட்டியில் இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.

    ஸ்ரீ ரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.

    தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

    -ஷிவானி

    • ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வார்கள்.
    • அக்னிதீர்த்த கடல் மற்றும் புனித தீர்த்தங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக கருதப்படுவது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில். இதனால் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வார்கள். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி வழிபட்டு செல்வார்கள்.

    இதனால் ராமேசுவரம் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதிலும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்படும்.

    விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    இதனால் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகள், அக்னிதீர்த்த கடல் மற்றும் புனித தீர்த்தங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


    • புதுமண தம்பதிகளுக்கு நடைபெறும் மறுவீடு நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
    • இன்று மாலை வரை சுவாமி-அம்பாள் ராமர் பாதம் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருக்கல்யாண திருவிழா 17 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. திருவிழாவின் 16-வது நாளான நேற்று இரவு கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி-அம்மாள் திருஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    17-வது திருநாளான இன்று காலை சுவாமி-அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்க கேடய வாகனத்தில் எழுந்தருளி கெந்தமாதனபர்வ மண்டக படிக்குக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாள் காலை 7.50 மணி முதல் 4 ரத வீதிகளிலும் உலா வந்தனர்.

    அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். புதுமண தம்பதிகளுக்கு நடைபெறும் மறுவீடு நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை வரை சுவாமி-அம்பாள் ராமர் பாதம் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இரவில் கோவிலுக்கு திரும்புவார்கள்.

    இதைத் தொடர்ந்து பள்ளியறை பூஜை நடைபெறும். எனவே இன்று காலை சுவாமி-அம்பாள் பட்டண பிரவேசம் புறப்பட்டதும் கோவில் நடை மூடப்பட்டது. சுவாமி-அம்பாள் திரும்பிய பின்னர்தான் நடை திறக்கப்படும். நாளை காலைதான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். இன்று ராமர் பாதம் சென்று சாமி தரிசனம் செய்யலாம். இன்றுடன் திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகிறது.

    இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருப்பதால் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    ×