search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜாஜி ஹால்"

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு புதுவை அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கவில்லை. #RIPKarunanidhi #Karunanidhideath #dmk

    புதுச்சேரி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு புதுவை அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களுக்கும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதனால் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது.

    நகரின் பிரதான சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தது. மார்க்கெட்டுகள் இயங்கவில்லை. சினிமா காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தொழிற்பேட்டைகள் இயங்க வில்லை.

    சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டே இருந்தது. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    புதுவை முழுவதும் ஆங் காங்கே தி.மு.க.வினரால் கருணாநிதியின் உருவப்படம் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு இருந்தது. #RIPKarunanidhi  #Karunanidhideath #dmk

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக்குறைவால் இன்று காலமான நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறையை அரசு அறிவித்துள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இதனை அடுத்து, நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. புதுவையிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். 
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சென்னை ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    மருத்துவமனைக்கு வெளியே இருந்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகர கூடுதல் கமிஷ்னர் ஜெயராம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
    ×