search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் கடைகள்"

    • இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறு விறுப்பாக நடைபெறும்.
    • ஆயுதப் பூஜையையொட்டி வீடு மற்றும் கடைகள் சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தனர்.

    சேலம்:

    சேலம் 4 ரோடு, குகை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறு விறுப்பாக நடைபெறும். இந்த நிலையில் ஆயுதப் பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்படும். ஆயுதப் பூஜையையொட்டி வீடு மற்றும் கடைகள் சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தனர்.

    சேலம் சூரமங்கலம் மீன் மார்க்கெட்டில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இன்று காலை முதலே இங்கு மக்கள் கூட்டம் இன்றி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    • மீன் கடைகள் திறக்காமல் இழுத்தடிப்பட்டு வருகிறது.
    • அரசு நிதி ரூ.12 லட்சம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள பெருமாள் கோவில் எதிரில் மெயின் ரோட்டோரம் தினமும் மீன் விற்பனை நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஊராட்சி சார்பில் 2019-ந் ஆண்டில் ரூ.12 லட்சத்தில் மீன்கள் விற்பனை செய்வதற்காக 10 கடைகள் கட்டப்பட்டது. இங்கு குடிநீர், மின்சார வசதி இல்லாததால் வியாபாரிகள் இந்த கடைகளை பயன்படுத்த ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து ரோட்டோரத்தில் விற்பனை செய்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த வழியாக செல்லும் போது முகம் சுளித்து செல்கின்றனர். 2 ஆண்டுகளாக கடை கள் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.இரவு நேரத்தில் மது அருந்தும் பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் கடைகள் மாறி உள்ளன.

    எதிரில் உள்ள இடத்தில் மது பாட்டில்கள், பாலிதீன் குப்பைகள் குவிந்துள்ளது. இதனால் அரசு நிதி ரூ.12 லட்சம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தி கடைகளை புதுப்பித்து, குப்பையை அகற்றி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • இன்று புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மீன் கடைகள் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    • இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    ஈரோடு:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அசைவ பிரியர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். இதனால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்படும்.

    இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் பிறந்தது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெறும்.

    இன்று புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மீன் கடைகள் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பாலம் அருகே மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இன்று காலை முதலே மக்கள் கூட்டம் இன்றி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஒரு சிலர் மட்டுமே மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    • மீன் கடைகளை அகற்றுவதை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம் நடைபெற்றது.
    • அனுமதி இன்றி வீதிகளில் செயல்படும் மீன் கடைகளை அகற்ற 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, 48 காலனி, ெரயில்வே பீடர் ரோடு, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக காவல்துறைக்கும், நகராட்சி அலுவலகத்திற்க்கும் புகார்கள் வந்தன.

    இதனை அடுத்து சிவகங்கை நகர் மன்ற தலைவர் ஆனந்த் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சிவகங்கை வீதிகளில் அனுமதியின்றி செயல்படும் மீன் கடைகளை அகற்ற உத்தரவிட்டனர். நகராட்சி பணியாளர்கள் வீதிகளில் செயல்படும் மீன்கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி தலைவர் ஆனந்த் சம்பவ இடத்திற்கு வந்து மீன் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அனுமதி இன்றி வீதிகளில் செயல்படும் மீன் கடைகளை அகற்ற 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. வரும் காலங்களில் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட்டில் மட்டுமே மீன் கடைகள் செயல்படும் என நகரசபை தலைவர் தெரிவித்தார்.

    ×