என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மீன் கடைகளை அகற்றுவதை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்
- மீன் கடைகளை அகற்றுவதை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம் நடைபெற்றது.
- அனுமதி இன்றி வீதிகளில் செயல்படும் மீன் கடைகளை அகற்ற 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, 48 காலனி, ெரயில்வே பீடர் ரோடு, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக காவல்துறைக்கும், நகராட்சி அலுவலகத்திற்க்கும் புகார்கள் வந்தன.
இதனை அடுத்து சிவகங்கை நகர் மன்ற தலைவர் ஆனந்த் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சிவகங்கை வீதிகளில் அனுமதியின்றி செயல்படும் மீன் கடைகளை அகற்ற உத்தரவிட்டனர். நகராட்சி பணியாளர்கள் வீதிகளில் செயல்படும் மீன்கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி தலைவர் ஆனந்த் சம்பவ இடத்திற்கு வந்து மீன் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அனுமதி இன்றி வீதிகளில் செயல்படும் மீன் கடைகளை அகற்ற 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. வரும் காலங்களில் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட்டில் மட்டுமே மீன் கடைகள் செயல்படும் என நகரசபை தலைவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்