search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை"

    குமரி மாவட்டத்தில் பயங்கர கடல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்றும் இதே நிலை நீடித்தது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர கடல் சீற்றம் காணப்படுகிறது.

    இதனால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். குறிப்பாக மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் கடல் அரிப்பும் ஏற்பட்டது.

    மேல் மிடாலம் பகுதியில் அலை தடுப்பு சுவர்கள் இல்லாததால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டது. எனவே இங்கு உடனடியாக அலை தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை மீனவர்கள் வள்ளம், கட்டுமரங்கள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு பிற்பகலுக்குள் கரை திரும்பிவிடுவார்கள்.

    ஆனால் கடல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்றும் இதே நிலை நீடித்தது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் மீன்களின் வரத்து குறைந்தது. இதனால் மீன் மார்க்கெட்டுகள் வெறிச் சோடியது. வியாபாரிகளும் மீன்கள் வாங்கி செல்ல வழியின்றி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கன்னியாகுமரியில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டியது. இதனால் கரையில் இருந்த மீன்பிடி உபகரணங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர். மேல் மிடாலம் பகுதியிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அவர்களின் மீன் பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரியில் கடற்கரையில் சுற்றுலா போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அவர்கள் கடலில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர்.

    கடல் சீற்றம், மற்றும் அலைகளின் கொந்தளிப்பை கூறி யாரும் கடலில் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். இதனால் கடலில் குளிக்கும் ஆசையுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

    கடலில் சூறாவளி காற்று வீசுவதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி  உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன.
    இங்கிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று  வருகிறார்கள். மேலும் பாய்மர படகு, பைபர் படகு, கட்டு மரங்களிலும் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். 

    தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி காற்று காரணமாக 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்  எனக் கூறி ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் வழக்கம்போல் கடலுக்கு செல்ல வேண்டிய புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படாததால் இன்று  மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது. 

    இதனால் மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை இழந்துள்ளனர். கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் காற்று பலமாக வீசுவதால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் உள்ளன. அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது.
    சூறாவளி காற்று எதிரொலியால் தஞ்சை மாவட்டத்தில் மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. #Fishermenboat

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், அண்ணாநகர் புதுத்தெரு, மந்திரிப்பட்டிணம், செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உட்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் பாய்மர படகு, பைபர் கிளாஸ் படகு, கட்டுமரங்கள் என சுமார் 4 ஆயிரம் நாட்டுப்படகுகளும் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகளும் உள்ளன.

    விசைப் படகுகள் திங்கள், புதன், சனிகிழமைகளிலும், மற்ற தினங்களில் நாட்டுப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.

    தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி காற்று காரணமாக 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனக் கூறி ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் வழக்கம்போல் கடலுக்கு செல்ல வேண்டிய தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படாததால் நேற்று முன்தினம் முதல் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இன்றும் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது.

    இதனால் மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை இழந்துள்ளனர். கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். #Fishermenboat

    ×