search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழலையர் பள்ளி"

    • 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மழலையர் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
    • ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் விழாவில் கலந்துகொண்டனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆயுத ப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியில் மழலையர் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன புதிய கட்டிடத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார். குழந்தை களை கவரும் வகையில் நவீன வசதிகளுடன் குளி ரூட்டப்பட்ட வகுப்ப றைக ளுடன் மழலையர் பள்ளிக்க ட்டிடம் அமைந்துள்ளது.

    தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவுவத்துப்பறம்பில், பள்ளி தாளாளர் சனில் ஜாண், துணை தாளாளர் ஜார்ஜ் கண்டத்தில், பள்ளி முதல்வர் லிஸ்பெத், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சேவியர் சந்திரபோஸ், மேல்நி லைப்பள்ளி ஒருங்கி ணைப்பாளர் ராஜையன், துணை முதல்வர் பிரே ம்கலா, தலைமையாசிரியை மோனிக்கா ஸ்பினோலா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் விழாவில் கலந்துகொண்டனர்.

    100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மழலையர் பள்ளியில் சேர்ந்துள்ளனர். தற்போது மழலையர் பள்ளி (பிரி-கேஜி) சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    • பள்ளி முதல்வர் பொன்மனோன்யா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
    • சிறப்பு விருந்தினராக ட்ரஷர் ஐலண்ட் பள்ளி முதல்வர் சமீமா பர்வின் கலந்து கொண்டார்.

    சுரண்டை:

    சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 12-வது ஆண்டு விழா மற்றும் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்ச்செல்வி அம்மா, பள்ளியின் முதல்வர் பொன்மனோன்யா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், செயலர் சிவ டிப்ஜினிஸ்ராம் நிகழ்ச்சியை வழி நடத்தினர். தலைமையாசிரியர் முருகராஜ் விழாவை பொறுப்பேற்று நடத்தினார். மாணவி ஜெசிகா வரவேற்று பேசினார். வில்லுப்பாட்டு, வரவேற்பு நடனமாக சிவ தாண்டவம், மாறுவேடப்போட்டி, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகம், பட்டிமன்றம் மற்றும் நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக ட்ரஷர் ஐலண்ட் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வின் கலந்து கொண்டு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார். மாணவன் ஜெகதீஷ் நன்றி கூறினான். மாணவிகள் ஆதர்சனா மற்றும் அஸ்விதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆசிரியைகள் பிரதீபா மற்றும் ஈஸ்வரி விழாவை ஒருங்கிணைத்தனர்.

    ×