search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையர் பள்ளியில் ஆண்டு விழா
    X

    விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையர் பள்ளியில் ஆண்டு விழா

    • பள்ளி முதல்வர் பொன்மனோன்யா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
    • சிறப்பு விருந்தினராக ட்ரஷர் ஐலண்ட் பள்ளி முதல்வர் சமீமா பர்வின் கலந்து கொண்டார்.

    சுரண்டை:

    சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 12-வது ஆண்டு விழா மற்றும் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்ச்செல்வி அம்மா, பள்ளியின் முதல்வர் பொன்மனோன்யா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், செயலர் சிவ டிப்ஜினிஸ்ராம் நிகழ்ச்சியை வழி நடத்தினர். தலைமையாசிரியர் முருகராஜ் விழாவை பொறுப்பேற்று நடத்தினார். மாணவி ஜெசிகா வரவேற்று பேசினார். வில்லுப்பாட்டு, வரவேற்பு நடனமாக சிவ தாண்டவம், மாறுவேடப்போட்டி, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகம், பட்டிமன்றம் மற்றும் நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக ட்ரஷர் ஐலண்ட் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வின் கலந்து கொண்டு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார். மாணவன் ஜெகதீஷ் நன்றி கூறினான். மாணவிகள் ஆதர்சனா மற்றும் அஸ்விதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆசிரியைகள் பிரதீபா மற்றும் ஈஸ்வரி விழாவை ஒருங்கிணைத்தனர்.

    Next Story
    ×