search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிய உணவு திட்டம்"

    • குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதல் நிதி.
    • ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ. 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ. 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பள்ளி மூடப்பட்டது.
    • மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வீரசோழபுரம் ஊராட்சியில் உள்ள மோளாங்குட்டைபாளையத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பள்ளி மூடப்பட்டது.

    அதிகாரிகள் தற்போது மேற்கொண்ட முயற்சியால் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் மதிய உணவு வழங்க அனுமதி இல்லாத நிலையில் இருந்து வந்தது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று முதல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக சத்துணவு மேலாளர் ஜெயந்தி, வட்டார கல்வி அலுவலர் சிவகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் பவுலின் சியா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×