search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல்குவாரி"

    • 104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில் தான் குவாரிகள் செயல்படுகிறது.
    • யார்டுகளில் 5 நாட்களாக மணல் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற புகார்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள் வீடுகளும் தப்பவில்லை.

    இந்நிலையில் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில் சில மணல் குவாரி ஒப்பந்ததாரர்களும் சிக்கி உள்ளனர். இவர்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் திருச்சி, கரூர், வேலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது அங்கிருந்த ஒப்பந்த தாரர்களின் ஆட்கள் ஓட்டம் பிடித்தனர்.

    தற்போது சோதனைகள் முடிந்தாலும், யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் யார்டுகளில் லாரிகளுக்கு மணல் வழங்கும் பணிகள் முடங்கியுள்ளது.

    104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில் தான் குவாரிகள் செயல்படுகிறது.

    ஆன்லைன் முறையில் மக்கள் பணம் செலுத்தினாலும், லாரிகளுக்கு யார்டுகளில் மணல் அள்ளிப் போடும் பணியில் ஈடுபடுபவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

    பணம் செலுத்தியவர்களுக்காக மணல் அள்ளிச் சென்ற லாரிகள் மணலுக்காக காத்திருக்கின்றன. இந்த யார்டுகளில் 5 நாட்களாக மணல் வழங்கப்படவில்லை. இதனால் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலசங்க தலைவர் ஐ.கே.எஸ்.நாராயணன் கூறுகையில், கடந்த 12-ந்தேதியில் இருந்து மணல், சவுடு குவாரிகள் இயங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட லாரிகள் மணல் அள்ளும் 'ஸ்டாக் பாயிண்டில்' ஒரு வாரமாக நின்று கொண்டிருக்கிறது.

    லாரி டிரைவர்கள் பசி பட்டினியுடன் காத்திருக்கிறார்கள். அங்கு நிற்கும் லாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து உள்ளனர்.

    இந்த விசயத்தில் முதலமைச்சர் தலையிட்டு உடனடியாக மீண்டும் மணல் குவாரிகள் செயல்பட நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருதுமால் நதி கரையில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
    • மேலும் அருகில் உள்ள கிருதுமால் நதியிலும் மணல் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பி.வாகைக்குளம் பகுதியில் கிருதுமால் நதி ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்த நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த நிலையில் கிருதுமால் நதி கரையில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அர்ச்சுனன் மாவட்ட கலெட்கருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் மேற்கண்ட பகுதியில் மணல் குவாரி அமைத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கும். ஜே.சி.பி. எந்திரம் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. மேலும் அருகில் உள்ள கிருதுமால் நதியிலும் மணல் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

    ×