search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா தீபாராதனை"

    • நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
    • தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவாக வந்து அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அங்காளம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன், சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதனைத்தொடர்ந்து பனை, புளி, காட்டுவாகை, சவுக்கு உள்ளிட்ட மரங்களைக்கொண்டு புதிதாக கோவிலின் மேற்கு வாசலில் தேர் வடிவமைக்கப்பட்டது. அந்த தேருக்கு பலவித பூக்களால் ஆன மாலைகள், பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, வாழை மரங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.

    பின்னர் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் பம்பை, மேள, தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினர். அதன் பிறகு ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்தவுடன் அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோவிந்தா... அங்காளம்மா... ஈஸ்வரி தாயே என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்களின் வெள்ளத்தில் கோவிலைச்சுற்றி அசைந்தாடியபடி நிலைக்கு வந்தது.

    தேர் சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     அதுமட்டுமின்றி சில பக்தர்கள், திருநங்கைகள் பலவித அம்மன் மற்றும் சித்தாங்கு வேடமணிந்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும், நாக்கு, தாடைகளில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மன், வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • நாடி.ராஜேந்திரன் சுவாமிகளின் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
    • பீடத்தில் மாதம் தோறும் பெர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே 18 சித்தர்களின் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடத்தின் நிறுவனர் நாடி.ராஜேந்திரன் சுவாமிகளின் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

    சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் சத்குரு ஒளிலாயம் அமைந்துள்ளது.

    இங்கு 18, சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த பீடத்தில் மாதம் தோறும் பெர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    பீடத்தின் நிறுவனர் நாடி. ராஜேந்திரன் சுவாமிகளின், 6 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு பீடத்தின் வளாகத்தில் ஆறுபடை வீடு முருகப்பெருமானின் திரு உருவச் சிலை அமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    தொடர்ந்துவிநாயகர், பார்வதி, பரமசிவன் மும்மூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டி, சிறப்பு மகா யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. ஒளிலாயம் பீடத்தில் நடைபெற்ற மும்மூர்த்தி மகாயாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்எல்ஏ பி.வி.பாரதி, அதிமுக அமைப்பு செயலாளர் ஆசைமணி, பொறுப்பாளர்கள் செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி, ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், பொறியாளர் மார்கோனி, சீர்காழி அதிமுக முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    ஏற்பாடுகளை நாடி செல்வ முத்துக்குமரன், நாடி செந்தமிழ்ச்செல்வன், நாடி மாமல்லன், நாடி பரதன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பணிகள் நிறைவடைந்து, வரும் 7-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.
    • விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயில் உள்ளது. இதன் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது.

    தற்போது இந்த பணிகள் நிறைவடைந்து, வரும் 7-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று யாக பூஜைகள் தொடங்கின. விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. மாலை திருவிளக்கு வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஐங்கரன் வேள்வி, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பு அணிவித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் மாலையில் அப்பா பைத்தியம் சுவாமிகள் வேள்வி சாலைக்கு எழுந்தருளி 108 திரவிய வழிபாடு முதல் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், இசை விண்ணப்பம் உள்ளிட்டவை நடக்கிறது. 7-ந் தேதி காலை 7-40 மணிக்கு நான்காம் கால வேள்வி , காலை 9-45 மணிக்கு விமானத்துக்கு நீர் ஊற்றுதல் விநாயகர், முருகன், சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இந்த விழாக்களுக்கான ஏற்பாடுகளை முத்துமணிராஜா உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • இக்கோவிலில் 32 அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரம்மாண்ட சுதையினால் செய்யப்பட்ட சிலை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
    • தீமிதி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே மகிழியில் அமைந்துள்ள 32அடி உயரவாழ் முனீஸ்வரர் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் புகழ்பெற்ற வாழ்முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 32அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரம்மாண்ட சுதையினால் செய்யப்பட்ட சிலை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆனி ஆண்டுத் திருவிழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    முக்கிய விழாவான தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து பம்பை மேள வாத்தியங்களுடன் பூந்தேர் மற்றும் பூங்கரகம் புறப்பாடாகி அழைத்துச் சுற்றி வலம் வந்தது. அதைத்தொடர்ந்து வாழ்முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மனுக்கு சிறப்பு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×