search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையங்கள்"

    • புறநகர் போலீஸ் நிலையங்கள் மாநகர கட்டுப்பாட்டில் வருவதால், சிட்டி பகுதியில் போலீஸ் பலம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    • வடவள்ளி போலீஸ் நிலையத்தில் 2 எஸ்.ஐ. உள்பட 20 காவலர்கள் உள்ளனர்

    வடவள்ளி,

    கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குள் துடியலூர், வடவள்ளி போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பதட்ட சூழ்நிலை நிலவிய போது மாநகரப் பகுதியில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் தொடங்க வேண்டும் என மக்கள் உள்பட பல்வேறு அமைப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து கோவை சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் பகுதிகளில் புதிதாக போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் நிர்வாக வசதிக்காக மாவட்ட போலீஸ் எல்லைக்குள் வரும் வடவள்ளி, துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்கள் மாநகர போலீசுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வந்தது.

    அதன்படி நேற்று முதல் வடவள்ளி, துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களும் மாநகர போலீஸ் துறை வசம் சென்றது. இந்த போலீஸ் நிலையங்கள் இனி மாநகர போலீசுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியானது.

    வடவள்ளி போலீஸ் நிலையத்தில் 2 எஸ்.ஐ. உள்பட 20 காவலர்கள் உள்ளனர். வடவள்ளி இன்ஸ்பெக்டர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் இருப்பார். மாநகர போலீசார் வசம் வடவள்ளி போலீஸ் நிலையம் சென்றுள்ளதால், அவர்கள் வருகிற திங்கட்கிழமைக்குள் தங்கள் பணியை முழு வீச்சில் தொடங்குவார்கள் என தெரிகிறது.சட்டம் ஒழுங்குக்கு ஒரு இன்ஸ்பெக்டர், குற்ற சம்பவங்களுக்கு ஒரு இன்ஸ்ெபக்டர் என 2 பேர் விரைவில் பணியை தொடங்க உள்ளனர். இதனால் வடவள்ளி பகுதியில் கூடுதல் காவலர்கள் பணியமற்றப்பட்டு மாநகர காவல் வசம் வர உள்ளது. இதனால் குற்றசம்பங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதுவரை வடவள்ளி போலீஸ் நிலைய பகுதிக்குளு இருந்த வேடபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்படுகிறது.

    இதுதவிர வடவள்ளி பகுதி வார்டு எண் 36,37,38,39,40 வார்டுகளுடன் சோமை யம்பாளையம், மருதமலை, வீரகேரளம், பேரூர அருகே உள்ள ஆண்டிபாளையம் ஆகியவவை தொண்டாமுத்தூர் காவல்நிலைய எல்லைக்கு செல்கிறது.

    இதேபோல், துடியலூர் போக்குவரத்து போலீஸ் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மாநகர் போலீசில் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி துடியலூர் போக்குவரத்து போலீசார் ஆர்.எஸ் புரம் போக்குவரத்து போலீஸ் பிரிவுடனும், துடியலூர் அனைத்து மகளிர் போலீசார், கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துடனும் இணைந்து செயல்பட உள்ளது. புறநகர் போலீஸ் நிலையங்கள் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டதால் மாநகரின் எல்லை மற்றும் போலீஸ் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் முதன்முறையாக மதுரை போலீஸ் நிலையங்களில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • கமிஷனர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கலாம்.

    மதுரை

    போலீஸ் நிலையம் சென்றால் புகார் கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.

    இதனை களையும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் ''கிரேட்'' திட்டம் (குறைபாடுகள் களைதல் மற்றும் கண்காணித்தல்) அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனை மாநகர ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதன்படி மதுரை மாநகரில் உள்ள 25 போலீஸ் நிலையங்களில் எழுத்தர் அறை பகுதியில், கணிணியுடன் கூடிய வரவேற்பு அறை உருவாக்கப்பட்டு, அங்கு 360 டிகிரி கோணத்திலும் சுழலும் வகையில், ஆடியோ பதிவுடன் கூடிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதனை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கலாம்.

    போலீஸ் நிலையத்திற்கு வருபவரிடம், மனுதாரர் எந்த காரணத்துக்காக வந்துள்ளார்? அவரது பெயர், தேதி, நேரம், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வரவேற்பாளர் பெற்று அதனை ''கிரேட்'' இணையதளத்தில் பதிவிடுவார்.

    அதன் பிறகு கமிஷனர் அலுவலக கிரேட் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட புகார்தாரரை தொடர்பு கொண்டு புகாரின் தன்மை, போலீசாரின் விருந்தோம்பல் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்பார். இது போலீஸ் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் மனுவை பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலோ, புகார்தாரரிடம் அத்துமீறி நடந்து கொண்டாலோ சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் கிரேட் அலுவலர்கள், இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கிரேட் திட்டம், காவல் நிலை யங்களில் பொதுமக்கள் நல்ல முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்யவும், குறைகளுக்கு விரைவாக தீர்வு காணவும், தேவையற்ற காத்திருப்பை தவிர்க்கவும் உதவும் வகையில் அமையும்.

    இது தொடர்பாக மேலும் தகவல்கள் தெரிவிக்க விரும்பினால், 0452-2520760 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தரலாம்" என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

    மதுரை மாநகர காவல்துறையின் கிரேட் திட்டம், காவல் நிலைய ங்களின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணிக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேல் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    ×