search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர் கப்பல்"

    • கடலில் தத்தளித்த மாலுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
    • மீட்கப்பட்ட மாலுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில் பாங்சாபன் மாவட்டத்துக்கு அருகே தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. எச்.டி.எம்.எஸ். சுகோதாய் என்ற அந்த போர்க்கப்பல் புயலில் சிக்கியது.

    கப்பலில் 106 மாலுமிகள் பயணித்த நிலையில் கடுமையான புயலில் சிக்கிய அந்த கப்பலுக்குள் கடல்நீர் புகுந்தது.

    இதைத்தொடர்ந்து கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுடன் 3 போர் கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்களும் கடலில் தத்தளித்த மாலுமிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டன.

    இந்த நிலையில் 75 மாலுமிகளை மீட்டனர். 31 மாலுமிகள் மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பின்னர் 30 மாலுமிகள் மாயமானதாக கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இதையடுத்து கடலில் தத்தளித்த மாலுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் மீட்பு பணியின்போது 6 மாலுமிகள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போன 23 மாலுமிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கப்பல் மூழ்கி 2 நாட்களுக்கு மேல் ஆனதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

    • ஏழு போர்க் கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன.
    • மூன்று போர் கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும்.

    எதிரி நாடுகளின் ரேடாருக்குத் தென்படாமல் செயல்படும் போர்க் கப்பல்களை எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஏழு,  பி17-ஏ ரக போர்க் கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன.

    இந்த போர்க் கப்பல், கப்பல் கட்டும் துறையில் இந்தியாவை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 17ஏ போர்க் கப்பலின் 75 சதவீத ஆர்டர்கள் , தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 


    இந்நிலையில் ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17-ஏ ரக போர்க் கப்பலான தரகிரியை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை மனைவியர் நல சங்கத்தின் தலைவர் சாரு சிங்  அறிமுகப் படுத்தினார். மேற்கு கடற்படையின் தலைமைத் தளபதி அஜேந்திர பஹதுர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

    தரகிரி போர்க்கப்பலை போன்று எம்.டி.எல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு போர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. மூன்று போர் கப்பல்களும் இந்திய கடற்படையில் விரைவில் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ×