search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் பங்க் ஊழியர்"

    • மனவேதனையில் இருந்த மோகனன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு அருகே கொக்கறகுன்னு வெங்கஞ்சி பகுதியை சேர்ந்தவர் மோகனன் (வயது 58). இவர் குழித்துறையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழிய ராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த மோகனன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் பொன்னுசாமியின் மொபட்டை திருடியது தெரிய வந்தது.
    • இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள மணிமலையை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் சென்னிமலை மாரி யம்மன் கோவில் பொங்கல் திருவிழாவுக்கு தனது மொபட்டில் வந்திருந்தார்.

    தொடர்ந்து அவர் மொபட்டை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் மொபட் எங்கும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பொன்னு சாமி சென்னிமலை போலீ சில் புகார் செய்தார். போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த கணேசன் (வயது 37) என்பவர் பொன்னுசாமியின் மொபட்டை திருடியது தெரிய வந்தது. இவர் முத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழி யராக வேலை பார்த்து வருகிறார்.

    இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் கணேசனிடம் விசாரித்த போது, இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகன ங்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைதொடர்ந்து கணேசனை போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடை த்தனர்.

    • பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வரும் சுடலைமுத்து குழந்தையை அடிக்கடி சென்று பார்த்து வருவது வழக்கம்.
    • 14-ந் தேதி சுடலைமுத்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறி சென்றுள்ளார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கீழக்கருங்கடலை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது42).

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தை பிரிந்து திருச்செந்தூரில் உள்ளார்.

    பேய்க்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வரும் சுடலைமுத்து குழந்தையை அடிக்கடி சென்று பார்த்து வருவது வழக்கம். மேலும் மனைவி பிரிந்து இருந்ததால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 14-ந் தேதி சுடலைமுத்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறி சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. வேலைக்கும் செல்லவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை செல்வராஜ், சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து சுடலைமுத்து எங்கு சென்றார்? என்ன ஆனார்? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    ×