search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புவனேஸ்வர் குமார்"

    • புவனேஸ்வர்குமார் இன்ஸ்டாகிராம் பயோவில் புதிய மாற்றங்களை செய்துள்ளார்.
    • தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதனை மாற்றியுள்ளார்.

    டெல்லி:

    இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். இவர் பந்தை 'ஸ்விங்' செய்வதில் வல்லவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தவர் புவனேஷ்வர் குமார். டி20 போட்டிகளில் விக்கெட் பெரிய அளவில் கைப்பற்றாவிட்டாலும் டாட் பந்துகளை அதிகம் வீசக்கூடியவர். இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். காயம் காரணமாக சில தொடர்களில் இடம்பெறவில்லை. காயம் சரியான பின்பும் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

    33 வயதான புவனேஷ்வர் குமார், கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார். இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இதில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

    இந்நிலையில் புவனேஸ்வர்குமார் இன்ஸ்டாகிராம் பயோவில் புதிய மாற்றங்களை செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதனை மாற்றி 'இந்தியன்' என மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்கு கீழ் குடும்பம் தான் முதல் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மாற்றம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? என்ற அச்சத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எற்படுத்தி உள்ளது.

    • குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.
    • புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 27 ரன்களை எடுத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டன.

    குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். குஜராத் அணிக்காக முதல் சதம் அடித்த வீரரும் கில். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 27 ரன்களை எடுத்துள்ளார்.

    இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் எதிரணி ஜோடி சுப்மன் கில் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆவர். ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.

    ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் கூட, இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே இது நடந்துள்ளது. சையது முஷ்டாக் அலி டிராபியில் கர்நாடகாவின் கருண் நாயர் (111), தமிழகம் சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் (5/30) இந்த சாதனையை படைத்தனர்.

    2021-ல் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா இடையேயான டி20 சர்வதேச ஆட்டத்தில் இதுபோன்ற மற்றொரு நிகழ்வு நடந்தது. பெல்ஜியத்தின் சபர் ஜாகில் (100*) மற்றும் ஆஸ்திரியாவின் அகிப் இக்பால் (5/5) ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு தனித்துவமான சாதனை படைக்கப்பட்டது.

    • நேற்றைய போட்டியில் சாஹல் 2 ஓவர்கள் பந்துவீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
    • புவனேஸ்வர் குமார் 87 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் இரண்டு ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் உட்பட 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய பவுலராக சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

    இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக புவனேஸ்வர் குமார் முதலிடத்தில் இருந்தார். அவர் 87 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    அந்த சாதனையை யுஸ்வேந்திர சாஹல் முறியடித்துள்ளார். அவர் 75-வது போட்டியில் விளையாடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    • நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமார் 3 ஓவர் பந்து வீசி 9 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • புவனேஸ்வர் குமார் வெறும் 3.00 என்ற துல்லியமான எக்னாமியில் பந்து வீசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

    ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து கடந்த வருடம் துபாயில் சந்தித்த வரலாற்றுத் தோல்விக்கு பழி தீர்த்தது.

    அக்டோபர் 27-ம் தேதியன்று 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார், அஸ்வின், அக்சர் படேல் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார் வெறும் 3.00 என்ற துல்லியமான எக்னாமியில் பந்து வீசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

    குறிப்பாக தன்னுடைய முதல் 2 ஓவர்களில் 1 ரன் கூட கொடுக்காமல் அடுத்தடுத்த மெய்டன் ஓவர்களாக வீசிய அவர் மொத்தமாக வீசிய 3 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

    நேற்றைய போட்டியில் அவர் வீசிய 2 மெய்டன் ஓவர்களையும் சேர்த்து இந்த வருடம் 5 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. புவனேஸ்வர் குமார் : 5* (2022)

    2. ஜஸ்பிரித் பும்ரா : 4 (2014)

    3. ரிச்சர்ட் ங்கரவா : 4 (2021)

    அத்துடன் அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக மெய்டன் ஓவர்களை வீசிய இந்திய பவுலர் என்ற புதிய வரலாற்றையும் அவர் படைத்தார்.

    அந்த பட்டியல்:

    1. புவனேஸ்வர் குமார் : 20*

    2. ஜஸ்பிரித் பும்ரா : 19

    3. பிரவீன் குமார் : 19

    4. ஹர்பஜன் சிங் : 13

    5. இர்பான் பதான் : 13

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் 1000 பந்துகளை வீசிய முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே அதுவும் 500+ பந்துகளை மட்டுமே வீசியுள்ளார்.

    • பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், நோர்க்கியா ஆகிய இருவரும் 658 புள்ளிகளுடன் உள்ளனர்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 5 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஐசிசி டி20 போட்டிக்கான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்டிங்கில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்ய குமார் யாதவ் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். அவர் 44 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 5 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    புவனேஸ்வர் குமார்

    புவனேஸ்வர் குமார்

    இதேபோல் பந்து வீச்சில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் டாப் 10-ல் இடம் பிடித்தார். அவர் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் நோர்க்கியாவுடன் 7-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் 658 புள்ளிகளுடன் உள்ளனர்.

    • பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவேன்.

    இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 உலகக்கோப்பைக்கான பந்துவீச்சு வரிசை தொடர்பாக எழும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

    பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதும் பந்து வீசிய விதத்தைப் பார்க்கும் போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் உறுதிப்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன். எனது புத்தகத்தில் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். புவனேஸ்வர் குமார் நிச்சயமாக எனது கருத்துப்படி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார்.

    டி20 தொடரில் யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டும் என்னும் பட்சத்தில் ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவேன்.

    இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.

    • இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் சமனில் முடிந்தது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் பெறும் 4-வது தொடர் நாயகன் விருது இதுவாகும்.

    பெங்களூரு:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. தொடர் நாயகனாக இந்தியாவின் புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

    முன்னதாக, ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 3 தொடர் நாயகன் விருதுகளை வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×