search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறநகர்"

    • தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரெயில் சேவையை அதிகரிக்கும் வகையில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
    • பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி மக்களில் முக்கிய போக்குவரத்தாக புறநகர் ரெயில் சேவை உள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை பயணிகளுக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரிப்பு காரணமாக மின்சார ரெயில்சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.

    இதேபோல் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரெயில் சேவையை அதிகரிக்கும் வகையில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரெயில்பாதை கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதுவரை இந்த வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் வழக்கமாக இயக்கப் பட்ட ரெயில் சேவையும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் ரெயில் நிலையங்களில் நீண்டநேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 90 ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது 83 ஆக குறைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரபூர்வ தகவலை ரெயில்வே அறிவிக்க வில்லை. எனினும் குறைந்த அளவு ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை செங்கல்பட்டு-தாம்பரம் வழித்தடத்தில் 45 மின்சார ரெயில் சேவை, தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்திற்கு 45 ரெயில் சேவை கள் இயக்கப்பட்டன. பின்னர், பராமரிப்பு பணி கள் காரணமாக ரெயில் சேவைகள் குறைக்கப் பட்ட தாக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 42 ெரயில்களும், செங்கல்பட் டில் இருந்து தாம்பரத்திற்கு 41 ரெயில்களும் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிக ரிக்கப்படவில்லை. இதனால் மக்கள்அதிகம் பயன்படுத்தும் வழித்தடத்தில் 83 ரெயில் சேவைமட்டுமே உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் பரித விக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ள தால் அதிகமானோர் மின்சார ரெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணி கள் சென்னை நகர் பகுதியில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வாகனங்களில் செல்ல கூடுதல் செலவு மற்றும் பயணநேரம் அதிகம் உள்ளிட்ட காரணங்களால் ரெயில் சேவை பயணம் மேலும் உயர்ந்து உள்ளது.

    அதிகாலை நேரத்தில் தென்மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பஸ்பயணிகள் தற்போது வண்டலூர், மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்களில் இறங்கி செல்கிறார்கள். அதிகாலை நேரத்தில் மாநகர பஸ்போக்குவரத்து போதிய அளவில் இல்லாதததும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    ஏற்கனவே மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் பயணிகள் கூட்டத்தால் ஊரப்பாக்கம், பொத்தேரி ரெயில் நிலையங்களிலேயே ரெயில் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காலை நேரங்களில் வழக்கமாக சென்னை நகருக்குள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு தினந்தோறும் செல்லும் பய ணிகள் கடற்கரை மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலில் செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள்.

    அவர்கள் கூட்ட நெரிசலை கண்டு அடுத்த மின்சார ரெயிலில் காத்திருந்து ஏறினாலும் அதே அளவு கூட்டம் வருவதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, செங்கல்பட்டு -சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போது, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை தயார் நிலையில் இருந்தபோது செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது 3-வது ரெயில் பாதை செயல்பாட்டுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகியும் ரெயில் சேவை அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை மாலை மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் இதுபற்றி தெரியாமல் ரெயில் நிலையங்களுக்கு சென்றனர். ரெயில்நிலையங்களில் இது போன்று ரெயில்கள் ரத்து மற்றும் நேரம் மாற்றங்கள் குறித்து தெரிவிக்க எந்த அறிவிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதில்லை. இதுபற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க ரெயில்வே கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பயணிகளை பற்றி ரெயில்வே துறையினர் கவலைப்பாடாமல் அவர்கள் விரும்பியபடி ரெயில் சேவைகளை இயக்குகின்றனர் என்றனர்.

    • கீழக்கரை பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வசித்து வருகின்ற னர். கீழக்கரை வழியாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன.

    இவைகளில் புறநகர் பேருந்துகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கும்பகோணம், நாகப்பட்டினம் டெப்போ புறநகர் பஸ்கள் கீழக்கரை நகருக்குள் உள்ள பஸ் நிலையத்திற்கு வராமல் ஏர்வாடி முக்கு ரோடு வழியாக சென்று விடுகின்றன.

    இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிக்கு செல்ல வேண்டிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரு கின்றனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே அனைத்து பஸ்களும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு இயக்க நிறுவன வழக்கறிஞர் சாலிஹ் ஹூசைன் கூறியதாவது:-

    இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து பஸ்சுக்கு 20 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து கீழக்கரை வந்து சேரும் மக்கள் முக்கு ரோட்டில் இருந்து ரூ.60 ஆட்டோவிற்கு கொடுத்து வீடு செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களையும் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு, கஸ்பாபேட்டை, காசிபாளையம், எழுமாத்தூர், சிவகிரி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் ஈரோடு நகர் பகுதியான சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு,

    மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன்நகர், சக்திநகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழைய பாளையம், பெரியவலசு, பாப்பாத்தி க்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, கொத்துக்காரன்தோட்டம், 16 ரோடு, நாராயணவலசு, குமலன்குட்டை, டவர்லைன் காலனி, திருமால்நகர், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு, நேதாஜிரோடு, காந்திஜிரோடு, பெரியார் நகர், ஈ.வி.என்.ரோடு, மேட்டூர்ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இதேபோல் காசிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் சூரம்பட்டிவலசு, ரெயில்நகர், கே.கே.நகர், சென்னிமலைரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதிபதிபாளையம், தொழிற்பேட்டை பகுதி, காசிபாளையம், சாஸ்திரிநகர், ஜீவாநகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜிரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் முதலாவது முதல் 8-வது பகுதி வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பழைய ரெயில் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    கஸ்பாபேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம்,

    நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டகோத்தாம் பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதிநகர், மூலப்பா ளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான் வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    எழுமாத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம் பாளையம், வே.புதூர், ஆனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 24 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    சிவகிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பா ளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மா புதூர், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்கு புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    ×