search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் ஓட்டம்"

    • இளம்பெண்ணின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • கடந்த 1-ந் தேதி இளம்பெண்ணுக்கு வேறு வாலிபருடன் திருமணம் நடந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    இரண்டு பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கடந்த 1-ந் தேதி இளம் பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென எனது கணவரை தவிக்க விட்டு முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இளம் பெண்ணின் கணவர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது அவர் முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

    இது குறித்து இளம் பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்னாள் காதலனுடன் திருமணமான 20-வது நாளில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணையில் ரஞ்சனா கல்லூரி காதலன் பரந்தாமனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து புதுப்பெண் மற்றும் அவரது காதலனை தேடி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வளநாடு கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனா (வயது 21). இவர் வளநாடு பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கும் அதே கல்லூரியில் சென்ற ஆண்டு பி.காம். முடித்த மருங்காபுரி வளநாடு கைகாட்டி ராஜபாட்டி பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் (22) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியது. ரஞ்சனாவும் பரந்தாமனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

    இது ரஞ்சனாவின் பெற்றோரின் காதுகளுக்கு எட்டியது. பின்னர் பரந்தாமன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கடிவாளம் போட்டனர். காதலனை மறந்து விடுமாறு மகளை வற்புறுத்தினர். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.

    அதைத்தொடர்ந்து ரஞ்சனாவுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பின்னர் அவசர, அவசரமாக திண்டுக்கல் கணவாய்பட்டி கே.குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்த உறவுக்கார வாலிபர் வெங்கடேஷ் (33) என்பவருடன் கடந்த ஜனவரி 30-ந்தேதி ரஞ்சனாவுக்கு திருமணம் செய்து வைத்தனர். பின்னர் புதுமண தம்பதியினர் இருவரும் துவரங்குறிச்சிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

    புதுமனைவியை வெளியில் அழைத்து செல்லும் ஆர்வத்துடன் மணமகன் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது ரஞ்சனா கணவரிடம் பக்கத்து தெருவில் வசிக்கும் தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறியுள்ளார்.

    ஆசை மனைவியின் வேண்டுகோளை வெங்கடேஷ் தட்டவில்லை. அதைத்தொடர்ந்து ரஞ்சனா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் ரஞ்சனா ஓட்டலுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் ஆடிப்போன வெங்கடேஷ் தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆளுக்கு ஒரு திசையில் சென்று ரஞ்சனாவை தேடி பார்த்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரஞ்சனா கல்லூரி காதலன் பரந்தாமனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வெங்கடேஷ் துவரங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து புதுப்பெண் மற்றும் அவரது காதலனை தேடி வருகின்றனர்.

    • காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை மீனாட்சிபுரம் அருகே உள்ள புது காலனியை சேர்ந்த 25 வயது வாலிபர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் போத்தனூரை சேர்ந்த பட்டதாரியான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 9-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணமான 2-வது நாளில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இந்தநிலையில் கணவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என அனுப்பி இருந்தார்.

    இதனால் கணவரும், பெண்ணின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். கணவர் இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே அவரது வீட்டின் அருகே வசிக்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இளம்பெண்ணை திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண்ணுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
    • திருமணத்துக்காக ஏற்பாடுகளை இளம்பெண்ணின் பெற்றோர் செய்து வந்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண்.

    ஐ.டி.ஊழியர். இவருக்கு திருமணம் செய்து வைப்பது என அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். அடுத்த மாதம் 1-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்காக ஏற்பாடுகளை இளம்பெண்ணின் பெற்றோர் செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் அருகே உள்ள மருந்து கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இளம்பெண் வீட்டை விட்டு செல்லும் போது மோதிரம், செயின், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை எடுத்து சென்றது தெரிய வந்தது. இன்னும் 3 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் மாயமானதால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து அவர்கள் பீளமேடு ேபாலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    போத்தனூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படிக்கு மாணவருடன்மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தனது காதலனுடன் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இது குறித்து அவரது பெற்றோர் போத்தனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.  

    • போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த ராஜலட்சுமி தனது காதலனுடன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
    • போலீசாருக்கு ராஜலட்சுமியுடன் வந்திருப்பது காதலனா அல்லது கணவனா என்ற குழப்பம் ஏற்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள காக்காயன்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் மகள் ராஜலட்சுமி(18). பிளஸ்-2 வரை படித்துள்ள இவருக்கும், புத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்லபாண்டி(20) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 18 வயது நிரம்ப ஒரு சில வாரங்கள் பாக்கி இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து இருவீட்டாருக்கும் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து திருமணம் முடிந்ததும் இருவரையும் தனித்தனியாக பிரித்து வைத்தனர். பின்னர் 18 வயது பூர்த்தி அடைந்ததும் மீண்டும் கணவர் வீட்டிற்கு ராஜலட்சுமி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்லம்மாள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ராஜலட்சுமி ஏற்கனவே பூசாரிபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி(21) என்பவரை காதலித்து வந்ததும், அவருடன் மாயமானதும் தெரியவந்தது.

    போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த ராஜலட்சுமி தனது காதலனுடன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீசாருக்கு ராஜலட்சுமியுடன் வந்திருப்பது காதலனா அல்லது கணவனா என்ற குழப்பம் ஏற்பட்டது. அதற்கு ராஜலட்சுமி தான் முத்துப்பாண்டியை காதலித்ததாகவும், இவருடன்தான் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஏற்கனவே திருமணமாகி விட்டதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவருடன்தான் வாழவேண்டும் என்றால் முறைப்படி முதல் திருமணம் செய்தவரை விவகாரத்து செய்துவிட்டு முத்துப்பாண்டியுடன் சேர்ந்து வாழலாம் என தெரிவித்தனர். மேலும் பெற்றோரிடமும் எடுத்துக்கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×