search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் குற்றம்"

    • சிறுமி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
    • குற்றவாளி சார்பில் வாதாட வேண்டாம் என பார் கவுன்சில் வேண்டுகோள் வைத்துள்ளது

    சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை பரிதாபமாக தட்டியும் அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.

    அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அந்நகர மக்கள் அவளுக்கு உதவ மறுப்பதும் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறுதியாக, அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார்.

    காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    "நூற்றுக்கணக்கான பேரை விசாரணை செய்து, 700க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து பரத் சோனி எனும் ஆட்டோ ஓட்டுனர் இந்த குற்றத்தை செய்திருப்பதை கண்டு பிடித்தோம். சுமார் 35 அதிகாரிகள் இந்த சைபர் விசாரணையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக தூக்கம் இல்லாமல் தேடுதல் வேட்டை நடைபெற்றது. குற்றவாளியை நெருங்கும் போது அவன் தப்பி ஓட முயன்றான். காவல்துறையினர் அவனை துரத்தி பிடித்தனர். அச்சிறுமிக்கு உதவ மறுத்தவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என காவல்துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தனது மகனின் இந்த குற்றச்செயல் குறித்து, "என் மகன் தண்டிக்கப்பட வேண்டியவன். அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இது ஒரு வெட்கக்கேடான செயல். அவனை காணவோ, அவனை காப்பாற்றவோ நான் காவல் நிலையத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல போவதில்லை" என பரத் சோனியின் தந்தை ராஜு சோனி கூறினார்.

    "கோவில் நகரமான உஜ்ஜைன் நகரின் பெயரையே இச்சம்பவம் நாசப்படுத்தி விட்டது. நீதிமன்ற பார் கவுன்சிலை சேர்ந்த எந்த வழக்கறிஞரும் குற்றவாளி சார்பாக வாதாட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்," என உஜ்ஜைன் பார் கவுன்சில் தலைவர் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் பாலியல் குற்ற நிகழ்வை மறைத்து வழக்குகள் மாற்றி பதியப்படுகின்றன.
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழக்கின் விபரங்களை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பார்கள்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் கோவில்பட்டியை சேர்ந்த 17 வயது பெண்ணிடம் ஆன்லைன் மூலம் பழகி சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிவகாசிக்கு அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணை கணவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. இதற்காக அவரது வீட்டிற்கு பலர் வந்து சென்றனர். அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களை வீடியோக்கள் எடுத்து மிரட்டி அந்த தம்பதி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று ராஜபா ளையத்தை சேர்ந்த ஒரு நபர் அந்த பெண் வீட்டிற்கு வந்துள்ளார். வழக்கம்போல் அந்த கும்பல் அவருக்கு தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்து அந்த நபரை மிரட்டி உள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜபாளையத்தை சேர்ந்த நபரை விபச்சார கும்பல் அரிவாளால் வெட்டியது.

    படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்த பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்திலும் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஆனால் உண்மை தன்மை குறித்து எப்.ஐ.ஆரில் பதிவு செய்யாமல் சாதாரண அடிதடி வழக்காக பதிவு செய்துள்ளனர். பாலியல் தொடர்பாக குற்ற நிகழ்வை மறைத்து போலீசார் சாதாரண வழக்காக பதிவு செய்வதால் இதுபோன்ற குற்றத்தை தடுக்க முடியாது.

    எனவே வழக்கின் உண்மை தன்மையை சரியாக பதிவுசெய்ய போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×