search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிக்கப்பட்ட மக்கள்"

    நாகப்பட்டினம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி, முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். #EdappadiPalaniswami #GajaCyclone
    நாகை:

    கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.

    இதற்கிடையே விடுபட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.



    பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழங்கினர். தென்னை மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் தென்னங்கன்றுகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, ஓஎஸ் மணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதன்பின்னர் நாகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். இதேபோல் திருவாரூரிலும் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். #EdappadiPalaniswami #GajaCyclone

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்திப்பது அரசியல் செய்வதற்கு அல்ல ஆறுதலும், உதவிகளும் வழங்க மட்டுமே என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கும்போது மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. காவல்துறை பாதுகாப்போடு பிரதான சாலைகளில் செல்லும் அமைச்சர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மட்டுமே சந்தித்து திரும்புகிறார்களே தவிர, நகர கிராமப்புற பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மற்ற மக்களை சந்திப்பதில்லை என போகுமிடமெல்லாம் மக்கள் கூறுகின்றனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதாக கூறுகின்றனர். ஆகவே சில நாட்களுக்கு மட்டுமே நிவாரணம் அளிப்பதைவிட மத்திய மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி, அம்மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும்.

    அமைச்சர்கள் ஆங்காங்கே ஆய்வு கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல விடாமல் தடுப்பதை தவிர்த்து அதிகாரிகளை சுதந்திரமாக கிராமங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

    இதற்கு முன்பு புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகைக்கு யானைப்பசிக்கு சோளப்பொறியை தந்ததை போல் மத்திய அரசு நிவாரணம் கொடுத்துள்ளது. இம்முறையாவது அவ்வாறு இல்லாமல் இடைக்கால நிவாரண நிதியாக குறைந்தபட்சம் 5 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

    சோழநாடு சோறுடைத்து என்று சொல்வார்கள். ஆனால் செல்லும் இடங்களில் எல்லாம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அநாதைகள் போலவும், அகதிகள் போலவும் உணவுக்காக வீதிகளில் நிற்பது வேதனையாக உள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்திப்பது அரசியல் செய்வதற்கு அல்ல. ஆறுதலும், உதவிகளும் வழங்க மட்டுமே.

    அ.ம.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்.ஜி.ஓ.க்கள் போல செயல்பட்டு வருகிறார்கள். அ.ம.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் முகாம்களுக்கும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும், தொடர்ந்து அனுப்பப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

    தனியார் தொண்டு நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருவதை வரவேற்கிறேன். இந்த பணியில் அவர்களுக்கு இடையூறு ஏற் டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  #TTVDhinakaran #GajaCyclone

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். #BanwarilalPurohit #Thoothukudifiring #governormeetsvictims
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து  தூத்துக்குடி ஆலையை மூட அரசாணை வெளியிட்டப்பட்டது. அரசியல் காரணங்களினாலேயே இந்த அரசாணை வெளியிடப்பட்டதாக பல்வேறு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



    முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். #BanwarilalPurohit #Thoothukudifiring #governormeetsvictims
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை என்று தே.மு.தி.க. மகளிரணிச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரேமலதா விஜயகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘‘வரலாற்றில் மட்டுமே படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. இது தமிழக மக்களுக்கு ஒரு அவமான சின்னம் தமிழ்நாட்டின் கருப்பு நாள் மே.22.

    ஒரு மானை சுட்டால் கூட தண்டனை கொடுக்கக்கூடிய நாட்டில் மனிதர்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை இவர்களுக்கு கொடுத்தது யார்? தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் இணைய தளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது. முடக்க வேண்டியது இணைய தளங்களை அல்ல. ஆட்சியை தான்.

    தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தால் எந்த மாற்றமும் வராது. மாற்ற வேண்டியது இந்த அரசை தான். 100 நாள் அறவழியில் மக்கள் போராடினார்கள். பேரணிக்கு ஏன் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது திட்டமிட்ட படுகொலை. தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைத்து 3 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால் 50 ஆயிரம் மக்கள் கூடும் பேரணியில் பாதுகாப்பு பணிக்கு ஏன் அதிக அளவில் போலீசார் போடவில்லை.

    உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் என வழங்குகிறது. ஒரு உயிரின் மதிப்பு ரூ.10 லட்சம் தானா? இந்த அரசு எதை செய்தாலும் காசு கொடுத்து வாயை அடைக்கலாம் என கருதுகிறது.

    மக்களுக்கு பாதுகாப்பு தராமல் ஸ்டெர்லைட் ஆலைக்கும் அதன் முதலாளிக்கும் அரசு பாதுகாப்பு அளிக்கிறது. மத்திய-மாநில அரசுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒரு நாளைக்கு 4 முறைபேட்டி அளிக்கின்றனர். தூத்துக்குடி மக்களை நேரடியாக சந்திக்கவில்லை.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏன் மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை. படுகொலைக்கு பின்னால் பணம் விளையாடி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஒரு மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு காத்துக் கொண்டிருக்கிறார்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×