search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wounded people"

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். #BanwarilalPurohit #Thoothukudifiring #governormeetsvictims
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து  தூத்துக்குடி ஆலையை மூட அரசாணை வெளியிட்டப்பட்டது. அரசியல் காரணங்களினாலேயே இந்த அரசாணை வெளியிடப்பட்டதாக பல்வேறு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



    முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். #BanwarilalPurohit #Thoothukudifiring #governormeetsvictims
    தூத்துக்குடியில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூற துணை முதல்வர் ஓ.பி.எஸ். தூத்துக்குடி செல்கிறார். #thoothukudi firing #bansterlite
    சென்னை:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சிகிச்சை பெறுபவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    இதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி சென்று சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். #thoothukudi firing #bansterlite
    ×