search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சமுக ஆஞ்சநேயர்"

    • பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்க ஐந்துவிதமான அனுக்கிரகங்களை வாரி வழங்குகின்றார்.
    • ஸ்ரீ ஆஞ்சநேயர் பரிபூரண கடாட்சம் தருபவர்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர் என்பது, ஆஞ்சநேயர் தனது திருமுகத்தோடு, ஸ்ரீ வராகர், ஸ்ரீ கருடன், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீஹயக்கிரீவர் ஆகிய தெய்வங்களின் திருமுகங்களையும் தனது திருமுகத்தோடு இணைத்துக் கொண்டு பத்து கைகளுடன் விதவிதமான ஆயுதங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர். அத்தகைய சிறப்புமிக்க பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ஒன்று கோயம்புத்தூரில் நவாவூர் பிரிவு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

    இந்த ஐந்து திருவுருவங்களைக் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர். பக்தர்களுக்க ஐந்துவிதமான அனுக்கிரகங்களை வாரி வழங்குகின்றார். கிழக்கு முகமாகத் தரிசனம் தரும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பரிபூரண கடாட்சம் தருபவர். இஷ்ட சித்திகளை பக்தர்களுக்கு தருபவர், தெற்குமுகமாக தரிசனம் தரும் ஸ்ரீ நரசிம்மர், எதிரிகளின் தொல்லைகளை அழிக்கவும் மனோதைரியம் பெறவும், அசாதாரண சக்திகளால் ஏற்படும் தொல்லைகளைப் போக்கிக் கொள்ளவும் அருளுகிறார்.

    மேற்குமுகமாகத் தரிசனம் தரும் ஸ்ரீ கருட பகவான் சகல சவுபாக்கியங்களும் அருளுகிறார். வடக்குமுகமாகத் தரிசனம் தரும் ஸ்ரீ வராகர் செல்வச் செழிப்பினை பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார்.

    மேல் நோக்கிய பார்வையுடன் காணப்படும் ஸ்ரீ ஹயக்கிரீவர் சகல கலைகளையும், கல்வியையும் கற்றுக்கொண்டு அவற்றில் சிறந்து விளங்க அருளுகிறார். பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதால். பக்தர்கள் இவர் திருத்தலத்திற்கு வந்து மனமுருக வேண்டிச் செல்கின்றனர்.

    • ஆஞ்சநேயருக்கு ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.
    • பல்வேறு தோற்றங்களில் அருள்பாலிப்பதை நாம் பார்த்திருப்போம்.

    ராமனின் சிறந்த பக்தனாகவும், தூதனாவும் போற்றப்படும் ஆஞ்சநேயருக்கு, நாட்டில் ஏராளமான. ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் பல்வேறு தோற்றங்களில் அவர் அருள்பாலிப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் ஆஞ்சநேயரின் சில வடிவங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

     பஞ்சமுக ஆஞ்சநேயர்

    மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின் போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர் வடிவம் ஆகும்.

     நிருத்த ஆஞ்சநேயர்

    இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும்.

     கல்யாண ஆஞ்சநேயர்

    அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படுகிறார்.

     பால ஆஞ்சநேயர்

    அஞ்சனை மகனாக, அழகான பாலகனாக, அவர் தாயோடு சேர்ந்து இருக்கும் கோலமே 'பால ஆஞ்சநேயர்' என்று சொல்லப்படுகிறது. இவரை துதித்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

     வீர ஆஞ்சநேயர்

    ஒரு முறை முனிவர்களின் சாபத்திற்கு ஆளானார் அனுமன். அதனால் அவரது சக்திகள் அனைத்தும் அவருக்கு மறந்து போனது. இந்த நிலையில் சீதையை கண்டு வருவதற்காக அனுமனை, இலங்கைக்குப் போகச் சொன்னார் ராமன். அப்போது ஜாம்பவான், அனுமனுக்கு அவரின் சக்திகளைப் பற்றி எடுத்துக்கூற, தனது வீரமும், வலிமையும் நினைவுக்கு வந்து விஸ்வரூபம் எடுத்தார். அந்த வடிவமே 'வீர ஆஞ்சநேயர்' ஆகும்.

     பக்த ஆஞ்சநேயர்

    தன்னை வழிபடும் பக்தர்களை, இரு கரம் கூப்பி வணங்கும் தோற்றத்தில் இருப்பவரே 'பக்த ஆஞ்சநேயர்.' ராமரை எங்கும் எதிலும் காண்பவர் அனுமன். அதன்படி ராமநாமம் சொல்லி தன்னை வணங்கும் பக்தர்களின் மனதிலும் ராமரைக் காண்கிறார் அனுமன். அதனாலேயே அவர் பக்தர்களை கரம் குவித்து வணங்குவதாக சொல்லப்படுகிறது.

     யோக ஆஞ்சநேயர்

    ராமாயணத்தின் முடிவில் ராம நாமத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் சொல்வதைக் கேட்டு இன்புறுவதற்காக இங்கேயே தங்கிவிட்டார் அனுமன். ராமரின் நாமத்தை மட்டுமே கேட்கும் தொனியில் அவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். இந்த வடிவத்தையே யோக ஆஞ்சநேயர் என்கிறோம். இவரை ராம நாமம் சொல்லி வழிபட்டால் கேட்டவை கிடைக்கும்.

     சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்

    ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டுவர சென்ற அனுமன் வருவதற்கு நேரம் ஆனதால். சீதை மணலில் செய்த லிங்கத்தைக் கொண்டு பூஜை செய்தார் ராமர், அதனால் வருந்திய அனுமனின் வாட்டத்தைப் போக்க, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பூஜித்து அருள் செய்தார் ராமபிரான். லிங்கத் திருமேனியை ஸ்தாபனம் செய்த வடிவில் காட்சி தருபவர் 'சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்.

     சஞ்சீவி ஆஞ்சநேயர்

    ராவணனுடனான போரில் ராமருக்கு பேருதவியாக இருந்தவர் அனுமன். ஒருமுறை லட்சுமணன் போரில் மூர்ச்சை அடைந்தபோது, அவரை காப்பதற்காக சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தவர் அனுமன். இப்படி சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் இருப்பவரையே 'சஞ்சீவி ஆஞ்சநேயர்' என்கிறோம்.

    • ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர்.
    • சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர்.

    புத்தி, பலம், புகழ், உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை, நோயற்ற வாழ்வும், சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவார். நவக்கிரஹங்களும் ஆஞ்சநேயரின் வாலில் ஆவாஹனம் ஆகி உள்ளார்.

    நவகிரஹ தோசங்கள பில்லி சூன்யங்கள் செய்வினை கோளாறுகள் ஆகிய தோஷங்களையும் தீர்ப்பவர். குழந்தை பேறு இல்லாமை தீராத வியாதி திருமணத்தடை மேலதிகாரிகள் தொல்லை குடும்ப வாழ்க்கை பதவி உயர்வு மற்றும் ஏவல் பேய் பிடித்தவர்களுக்கு நிவர்த்தியும் உண்டாகும்.

    ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பழம், தேங்காய், தயிர்சாதம், வெண்ணெய், உளுந்துவடை நிவேத்தியம் செய்யலாம். பசுநெய் தீபம் ஏற்றலாம். துளசிமாலை ஸ்ரீ ராம நாம வடைமாலை பழ மாலைகள் பவள மல்லி மாலைகள், வெற்றிலை மாலை சாத்துபடி செய்யலாம்.

    யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர். ஆயிரம் யோசனை தூரம் கடலைத் தாண்டியவர் அஞ்சனாகுமாரர். சிரசை வாயில் புகுந்து வெளியே வந்தவர். மைநாக மலையினால் கௌரவிக்கப்பட்டவர். சமுத்திராஜனால் ஆதரிக்கப்பட்டவர்.

    நிழல் இழுக்கும் சிம்ஹீயைக் கொன்றவர் கையினால் அடித்தே லங்கினியை வீழ்த்தியவர். அசோகவனத்தை அழித்தவர். ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர். வாலில் வைத்த தீயினால் இலங்கையை அழித்தவர். லஷ்மணரை காப்பாற்ற நிமிடத்தில் சஞ்சீவி மலையை கொண்டு வந்த மகாத்மாவான ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை சேவிப்போம். நமது இடர்களை களைந்து சகல மேன்மைகளையும் பெறுலாம்.

    • வராகர் முகம் சகல தரித்திரமும் நீங்கி மங்களகரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.
    • ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

    1. கிழக்கு முகம் - ஹனுமார் பிரதிவாதி சத்ரு உபத்திரவம் நீங்கும.

    2. ஹயக்ரீவர் குதிரை முகம் ஜன வசீகரணம் வாக்குசித்தி வித்தையில் அபிவிருத்தி உண்டாகும்.

    3. நரசிம்மம் சிங்கமுகம் சகல வித பய தோஷங்களும் பூத ப்ரேத துர்தேவதா தோஷங்களும் நீங்கும்.

    4. வராகர் முகம் சகல தரித்திரமும் நீங்கி மங்களகரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.

    5. கருடன் முகம் சகல விஷஜ்வர சரீர ரோகங்கள் நீங்கும் சகல விதமான தோஷங்களம் நீக்கப்பட்டு மேன்மை பெறலாம். ஸ்ரீ பஞ்சமுப ஆஞ்சநேயரை சேவித்தால் நவகிரஹ தோஷங்களம் நீங்கும்.

    என்றும் நமக்கு வேண்டியது பலம் ஆத்மபலம் மனோபலம் புத்திபலம் தேகபலம் பிராணபலம் சம்பத்பலம் இந்த ஆறு பலங்களையும் பெற்று வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாட்சம் அவசியம். ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

    அனுமன் மகாபலிஷ்டன் அஞ்சனாகுமாரன் ராமேஷ்டன் வாயுபுத்திரன். அர்ஜுன சகன் அமிதபாராக்ரமன மாருதி சுந்தரன பிங்காட்சன ஆஞ்சநேயன மாருதிராயன சஞ்சீவராயன் பஜ்ரங்பலி ஸ்ரீராமதாசன அனுமந்தையா ஆஞ்சநேயலு மகாவீர் போன்ற பல நாமங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உண்டு.

    ஸ்ரீ அனுமான் பஞ்சபூதங்களை மட்டுமா? பஞ்சேந்திரியங்களையும் கர்மேந்திரியங்கள் 5 ஞானேந்திரியம் 5 இவைகளையும் வசப்படுத்தியவர்.

    • வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாஷம் அவசியம்.
    • ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

    1. கிழக்கு முகம் - ஹனுமார் பிரதிவாதி சத்ரு உபத்திரவம் நீங்கும்.

    2. ஹயக்ரீவர் குதிரை முகம் - ஜன வசீகரணம் வாக்குசித்தி வித்தையில் அபிவிருத்தி உண்டாகும்.

    3. நரசிம்மம் சிங்கமுகம் - சகல வித பய தோஷங்களும் பூத ப்ரேத துர்தேவதா தோஷங்களும் நீங்கும்.

    4. வராகர் முகம் - சகல தரித்திரமும் நீங்கி மங்கள கரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.

    5. கருடன் முகம் - சகல விஷஜ்வர சரீர ரோகங்கள் நீங்கும் ஸகல விதமான தோஷங்களும் நீக்கப்பட்டு மேன்மை பெறலாம். ஸ்ரீ பஞ்சமுப ஆஞ்சநேயரை சேவித்தால் நவகிரஹ தோஷங்களும் நீங்கும்.

    என்றும் நமக்கு வேண்டியது பலம் ஆத்மபலம், மனோபலம், புத்திபலம், தேகபலம், பிராணபலம், சம்பத்பலம் இந்த ஆறு பலங்களையும் பெற்று வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாஷம் அவசியம். ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

    அனுமன், மகாபலிஷ்டன், அஞ்சனாகுமாரன், ராமேஷ்டன், வாயுபுத்திரன், அர்ஜுன சகன், அமிதபாராக்ரமன மாருதி, சுந்தரன, பிங்காட்சன, ஆஞ்சநேயன, மாருதிராயன, சஞ்சீவராயன், பஜ்ரங்பலி, ஸ்ரீராமதாசன, அனுமந்தையா, ஆஞ்சநேயலு, மகாவீர் போன்ற பல நாமங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உண்டு. ஸ்ரீ அனுமான் பஞ்சபூதங்களை மட்டுமா? பஞ்சேந்திரியங்களையும் கர்மேந்திரியங்கள் 5 ஞானேந்திரியம் 5 இவைகளையும் வசப்படுத்தியவர்.

    • தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள்.
    • அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.

    இலங்கை யுத்தம் முடிந்து ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வழியில் ஸ்ரீபரத்வாஜ மகரிஷி வரவேற்று ஆசி கூற ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டி லட்சுமணன் ஆஞ்சநேயர் ஆகியோர் தங்கினர். அப்போது அங்கு திரிகால ஞானியான நாரதர் வந்து சேர்ந்தார். நாரதரை வணங்கி ஸ்ரீராமருக்கு ஆசி கூறிய நாரதர் ராமா முக்கியமான விஷயமாகவே உன்னை சந்திக்க வந்தேன். இலங்கை யுத்தம் முடிந்தாலும் அது இன்னமும் முற்றுப் பெறவில்லை. உனது வில்லுக்கு இன்னமும் வேலை உள்ளது என்று கூற திகைத்த ஸ்ரீராமர் 'நாரத மகரிஷியே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? விளக்கமாக கூறுங்கள் என்று வேண்டினார்.

    ராமா! ராவணன் அழிந்தாலும் அரக்கர்கள் வாரிசுகள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இலங்கை யுத்தத்துக்கு பழிக்கு பழி வாங்க சபதம் செய்துள்ளார்கள். இரக்த பிந்து இரக்த ராட்சகன் என்ற இரண்டு அசுரர்கள் கடலுக்கு அடியில் அமர்ந்து தவம் செய்கிறார்கள். இவர்கள் தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள். பிறகு அவர்களால் உலகுக்கு பெரும் அழிவு ஏற்படும். எனவே இவர்களை நீ உடனே சம்ஹாரம் செய்ய வேண்டும்' என நாரதர் கூறினார்.

    மகரிஷியே நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் இப்போது நான் அயோத்தி செல்வதில் தாமதிக்க இயலாது. குறிப்பிட்ட நாளில் நான் அயோத்தி செல்லாவிடில் தம்பி பரதன் தீக்குண்டம் இறங்கி உயிரை விட்டுவிடுவான் என ராமர் கூற 'அப்படியானால் சரி உனக்கு பதில் தம்பி லட்சுமணனை அனுப்பு என நாரதர் கூற அவன் என் நிழல் ஆயிற்றே என்னை விட்டு பிரியமாட்டான் என்று சபதம் செய்துள்ளானே என்ற ராமர் கண்களில் அனுமார் பட அனுமாரை அழைத்தார் 'அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.

    அரக்கர்களின் ஆணிவேரை அழிக்கும் யுத்தமல்லவா? தேவர்கள் வாழ்த்தினர். திருமால் சங்கு சக்கரத்வீயும தனது அவதாரமான ஸ்ரீஹயக்கிரீவா ஸ்ரீநரசிம்மா ஸ்ரீவராஹர் ஸ்ரீகருடன் ஆகிய அவதாரத்தையும் வழங்க பிரம்மா பிரம்மா கபாலத்தை வழங்க தேவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் தந்திட ஆஞ்சநேயர் 10 கரங்களுடன் காட்சி தந்தார். விரைவாக செல்ல கருடன் தனது சிறகுகளை தந்தான். அனுமார் புறப்படும் நேரம் சிவபெருமான் வந்து சேர்ந்தார். 10 கரங்கள் 10 கரத்திலும் ஆயுதங்கள். எதை தருவது? பார்த்தார் சிவன் தன் நெற்றிக்கண்ணையே தந்துவிட்டார். மூன்று கண்கள் 10 கரங்களுடன் புறப்பட்ட வீர தீரம் நிறைந்த ஸ்ரீதிரிநேத்திர தசபுஜ ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் வாழ்வில் வளங்கள் பல பெற்று வாழலாம்.

    1. ஹயக்ரீவர் - எல்லா வித்தைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதி ஹயக்ரீவர். அவருடைய அம்சமாக சகல விதமான ஞானத்தையும் பெற்ற அறிவாளி ஹனுமான். அவருடைய சிறந்த ஞானத்தை ராமனே வியந்து பாராட்டுகிறான். இவன் ருக்வேதம். யஜுர் வேதம்; சாம வேதம் இவற்றைப் பரிபூரணமாக அறிந்தவன். இலக்கணங்களை நன்றாகக் கற்றவன். இவன் பேச்சில் குறைபாடு ஒன்றுமே இல்லை. மிக விஸ்தாரமாகவும் மிகவும் சுருக்கமாகப் பேசி அளவோடு நிதானமாக மதுரமான குரலில் வார்த்தைகளை பேசும் ஆற்றல் அனுமானிடம் உள்ளது.

    2. வராஹர் - மஹாவிஷ்ணுவின் வாராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று பூமி தேவியைக் கண்டுபிடித்து இரண்யாஷணியிடமிருந்து தேவியை மீட்டார். ஹனுமானும் யாரும் செல்ல முடியாத இலங்கைக்குச் சென்று சீதையை கண்டுபிடித்து ராவணனிடமிருந்து மீட்பதற்கு உதவினார்.

    3. நரசிம்மர் - தம்முடைய பக்தனான பிரகலாதனுக்கு தீங்கு விளைவித்த இரண்யனை ஆக்ரோஷத்துடன் சம்ஹாரம் செய்தார். இங்கே தம்முடைய தெய்வமான சீதாதேவிக்கு தீங்கு விளைந்ததற்காக மாருதி ராவணனுடைய சேனை சேனாதிபதிகளை மந்திரிக்குமாரர்கள் முதலானோரை வதம் செய்து இலங்கையையும் எரியச் செய்தார்.

    4. கருடன் - பஷிகளுக்கெல்லாம் தலைவனாக கருடன் போற்றப்படுகிறார். பஷிராஜன் என்றே அவருக்குப் பெயர். ஆகாயத்தில் எல்லா உலகங்களாலும் எங்கும் பறக்கும்; வல்லமை படைத்தவர். அவருடைய அம்சமாக அவருடைய சக்தியால்தான் அனுமான் பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்தார். மீண்டும் கருடனைப் போலவே ஆகாய மார்க்கமாக கடலைக் கடந்து ராமனிடம் வந்து சேர்ந்தார்.

    இப்படி நால்வருடைய அம்சமும் சக்தியும் கொண்டவர் ஹனுமான். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த நால்வரோடு ஹனுமானையும் சேர்த்து பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று விசேசமாக கொண்டாடுகிறோம.; ஈரேழுலோகங்கள் தோன்றி அழிந்து போனாலும் நீ மட்டும் இன்று போல் என்றும் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று பன்முறை வாக்கு சாதுர்யம் பெற்றவர்.

    • பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது.
    • பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.

    அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமைமிக்க பஞ்சமுக அனுமன். அனுமனின் ஐந்து முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன். அனுமனின் தாடை நீண்டு இருக்கும். ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.

    கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும். தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள்,

    பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும். வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.

    இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்யம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும். பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார். 

    • நேயர் திருக்கோவிலில் ஆடிமாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
    • தொட–ர்ந்து பிரசாதம், அன்ன–தானம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளை யம்நால்ரோடு அருகே மாருதிநகர் பகுதியில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆடிமாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம் நால்ரோடு மாருதிநகரில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் சுயம்புலிங்க ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி சனிக்கிழமை ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை மாலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சுயம்புலிங்க ஆஞ்சநேயர் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், நெய், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெற்று, பக்தர்களுக்கு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். தொட–ர்ந்து பிரசாதம், அன்ன–தானம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு பூஜையில் கணக்கம்பட்டி அழுக்கு சித்தர் கோயில் பூசாரி சீனிவாசன், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பட்டாச்சாரியார் ராஜகோபால், பொன்னம் பாளையம் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து–கொண்டனர்.v

    ×