search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலமோசடி வழக்கு"

    • போலி ஆவணத்தை பதிவு செய்த சார் பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
    • போலி பத்திரம் பதிவு செய்தபோது பதிவுத்துறை இயக்குனராக இருந்த ரமேஷ், புதுவை பதிவாளராக இருந்த பாலாஜி ஆகியோரும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    மேலும் போலி ஆவணத்தை பதிவு செய்த சார் பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் போலி பத்திரம் பதிவு செய்தபோது பதிவுத்துறை இயக்குனராக இருந்த ரமேஷ், புதுவை பதிவாளராக இருந்த பாலாஜி ஆகியோரும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த நிலையில் நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜிலென்ஸ் மூலம் கவர்னர், தலைமை செயலருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

    இதையடுத்து 2 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    நில அளவைத்துறை இயக்குனர் பதவி தெற்கு சப்-கலெக்டர் முரளிதரனுக்கும், மாவட்ட பதிவாளர் பதவி வடக்கு சப்-கலெக்டர் கந்தசாமிக்கும், மீன்வளத்துறை இயக்குனர் மாதவி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குனர் முத்துமீனாவுக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கழக இயக்குனர் பொறுப்பு பதவி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

    போலி பத்திரம் தயாரிக்க உதவிய புதுவை சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்த ரியல்எஸ்டேட் புரோக்கர் பாலமுத்து வேல்(76), குருசுகுப்பம் சிவராமன்(49) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதனால் இவ்வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • நிலமோசடி வழக்கு திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • மோசடி செய்தவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    திண்டுக்கல்:

    பழனியில் நிலமோசடி யில் ஈடுபட்டதாக 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் கேரளாவைச்சேர்ந்த 2 முதியவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்து ள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார். இவருக்கு சொந்தமான 38 செண்ட் நிலம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்துள்ளது.

    அந்த நிலத்தை கேரள மாநிலம் வைக்கம் பகுதியை ச்சேர்ந்த பாலகோபாலன் நாயர் (வயது 60) மற்றும் கோட்டயம் அடுத்துள்ள புதுப்பள்ளியைச் சேர்ந்த தங்கச்சன் (76) ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டு மோசடி செய்துள்ளனர்.

    ராஜேந்திரகுமாருக்கு சொந்தமான நிலத்தை பாலகோபாலன் நாயர் பவர் பத்திரம் மூலம் தங்கச்சனுக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்ற பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து பாலகோபா லன் நாயர் மற்றும் தங்கச்சன் ஆகியோரை கைது செய்த னர்.

    இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 25 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    4 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் நிருபிக்க ப்பட்ட நிலையில் பால கோபாலன் நாயர் மற்றும் தங்கச்சன் ஆகிய இருவரு க்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனயும், தலா 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    வெவ்வெரு பிரிவுகளுக்கு மொத்தம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய போதிலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளதால் இருவரு க்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டணையாக குறைந்துள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட னர்.

    ×