search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூட்ரினோ திட்டம்"

    நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NeutrinoProject #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நிறுவனத்திற்கு நியூட்ரினோ மைய ஆய்வக பணிகளை தொடர டாடா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மனுவை விசாரித்த தீர்ப்பாயம், “நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும், அதுவரை ஆய்வு மைய பணிகளை தொடங்கக்கூடாது” என இடைக்கால தடை விதித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவிற்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

    ‘நியூட்ரினோ ஆய்வு மையம் விவகாரத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்படும் வரை தான் திட்ட நடைமுறைகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை டாடா நிறுவனத்தின் சார்பில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதலை பெற்றுவிட்டால், திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். அதனால் இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவை ரத்து செய்து, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என மனுதாரர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #NeutrinoProject #SupremeCourt
    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதால் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #neutrinoproject

    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நியூட்ரினோ திட்டத்துக்கு பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்தது வர வேற்கத்தக்கது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்.

    சேலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற 5-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் விலகி, ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். தேர்தலுக்கு பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும். திருச்சியில் 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும். பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளதால் தொழிலாளர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 2 மணி நேரம் பட்டாசு வெடித்தால் காற்று மாசு பாடு ஏற்படாதா? எனவே எந்தெந்த வெடிகளை வெடிக்க வேண்டும் என வரையறை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #neutrinoproject

    நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தது. #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal
    புதுடெல்லி:

    நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் அணுத்துகள்களாகும்.

    இந்த அணுத்துகள்களை ஆய்வு செய்தால் சூரியன் மற்றும் நியூட்ரினோதுகள்களின் ரகசியங்களை கண்டுபிடிக்க முடியும்.

    சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் மலைப் பகுதியில் மிகப்பெரிய ஆய்வு கூடம் அமைத்து நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவும் இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தேவாரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருக்கும் பொட்டிபுரம் கிராமம் அருகே ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்து ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்காக மலைக்கு அடியில் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தை அமல்படுத்தும் முயற்சிகள் கடந்த 2015-ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்டன.

    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு பொட்டிபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை அமைத்தால் தங்கள் ஊர்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தேனி மாவட்ட நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த அமைப்பு தனது மனுவில், “நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பொது மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும்” என்று கூறி இருந்தது.

    கடந்த மாதம் 5-ந்தேதி இந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்தது. அப்போது நீதிபதிகள் நியூட்ரினோ திட்டம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசு, மற்றும் டாடா நிறுவனம் ஆகியவை எழுத்து பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.



    அதன்பேரில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எழுத்துப் பூர்வ தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த மாதம் 9-ந்தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

    அப்போது தமிழக அரசு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜராகி வாதாடினார். அதன்பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகுவேந்திர ரத்தோர் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை வெளியிட்டது.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தேனியில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு இடைக்கால தடை விதித்தனர். தீர்ப்பின் முழு விவரம் வருமாறு:-

    தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை அமைக்க வேண்டுமானால் வனவிலங்கு வாரியத்தின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும். தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த ஆய்வு திட்டத்தை அங்கு செயல்படுத்த இயலாது.

    நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனவிலங்குகளுக்கு எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால தடை நீடிக்கும்.

    அந்த ஆய்வு பணிகள் முற்றிலும் முடிந்தபிறகே நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு தடை விதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும். தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆய்வு பணிகள் முடிவடையாத காரணத்தால் மத்திய அரசு அளித்து இருக்கும் அனுமதியை ரத்து செய்ய இயலாது.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்து இருப்பதால் பொட்டிபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் தெரிவித்து இருக்கிறார்கள். என்றாலும் இந்த ஆய்வு திட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    ஆனால் இந்த திட்டத்தால் அந்த பகுதிகள் சர்வதேச அளவுக்கு மிகப்பெரிய மேம்பாட்டை அடைய முடியும் என்று அதிகாரிகள் கூறி வருகிறார்கள். அதற்கேற்ப சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal
    நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #NeutrinoProject #NGT
    புதுடெல்லி:

    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை தொடர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, நியூட்ரினோ ஆய்வு மையம் விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.


    தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராகேஷ் சர்மா, இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. இதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #NeutrinoProject #NGT #TamilNaduPollutionControlBoard
    நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்று இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு கூறினார்.
    ஆலந்தூர்:

    இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நடக்கிறது. மேலும் 4 யூனிட்டுகள் தொடங்குவதற்கான பணி நடைபெறுகிறது. இன்னும் 5 அல்லது 6 ஆண்டுக்குள் இந்த பணி முழுவதும் முடிவடையும்.



    கூடங்குளத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவைக்கு அதிகமாக மின்சாரம் கிடைக்கிறது. எனவே தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படாது.

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடைபெறும் பணிகள் மெதுவாக நடைபெற்றாலும் சரியான முறையில் நடக்கிறது.

    தற்போது நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் முக்கியமாக சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×