search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் கடித்தது"

    • ராஜா கூலித் தொழிலாளி இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
    • சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை பவளக்கொடி வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கூலித் தொழிலாளி. இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் நாட்டு மருந்துகள் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் இவர் சோர்வாகவும், வேலைக்கு செல்லாமலும் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று திடீரென இவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்கிரவாண்டியில் நாய் கடித்து குதறியதில் 10 ஆடுகள் இறந்தன.
    • தினம்தோறும் ஆடுகளை மேய்ச்சல் செய்து விட்டு பண்ணையில் அடைத்து வளர்த்து வந்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி வசித்து வருபவர் ஜாகிர் உசேன் இவருக்கு சொந்தமான சுமார் 50 ஆடுகள்விக்கிரவாண்டி கீழக்கொந்தை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டின் அருகே பண்ணை வைத்து வளர்த்து வந்தார். ராமச்சந்திரன் தினம்தோறும் ஆடுகளை மேய்ச்சல் செய்து விட்டு பண்ணையில் அடைத்து வளர்த்து வந்தார் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து விட்டு பண்ணையில் அடைத்து விட்டு இரவு தூங்கிவிட்டார் .நேற்று இரவு அடையாளம் தெரியாத நாய் ஆட்டுப்பண்ணையில் உள்ளே புகுந்து பன்னையிலிருந்து ஆடுகளை கடித்து குதறியது இதில் பத்து ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இருந்தன .அதிகாலை எழுந்து பார்த்தபோது 10 ஆடுகள் நாய்கள் கடித்து இறந்து கிடந்தன.

    ×