search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுரோட்டில்"

    • குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது
    • சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சா க்கடை திட்டப்பணிகள் மற்றும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. செட்டிகுளத்தில் இருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைப் லைன்கள் அமைக்கப்ப ட்டது. அதன் பிறகு அந்த பள்ளங்கள் நிரப்பப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.

    இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த பைப் லைன்கள் அமைக்கப்பட்ட பகுதியில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டது. பள்ளங்களை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் 2 நாட்களாகியும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கண்ணன் குளத்திலி ருந்து வடசேரி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. காலை 9 மணிய ளவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் வந்த போது சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் பஸ்சில் முன் சக்கரம் சிக்கியது. இதையடுத்து டிரைவர் பஸ்சை இயக்க முயன்றார். அப்போது பஸ்சின் முன் சக்கரம் தொடர்ந்து பள்ள த்தில் புதைந்தது. மேலும் பஸ்சின் முன் பகுதியும் சாலையில் தட்டியதால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ் நடுவழியில் நிறுத்தப்ப ட்டது. பஸ்சில் இருந்த பய ணிகள் இறக்கிவிட ப்பட்ட னர். மாற்று பஸ் மூல மாக அவர்கள் அனுப்பப்ப ட்டனர். பஸ் பாதாள சாக்கடை பள்ளத்தில் புதைந்து நின்றது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காலை நேரம் என்பதால் சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். காலை நேரம் என்பதால் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவ லகங்களுக்கு சென்றவர்கள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்கி தவித்தனர். போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை பள்ளத்தில் புதை த்த அரசு பஸ்சை மீட்கும் பணியும் மேற்கொள்ள ப்பட்டது.

    சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு சாலையில் புதைந்த அரசு பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து பஸ் புதைந்த இடத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சாலையில் தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டதையடுத்து அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் மூலம் அடைக்க ப்பட்டது. இதனால் சாலை குறுகலாக காட்சியளித்தது. வாகனங்கள் அந்த பகுதி யில் ஊர்ந்து சென்றன. அதே பகுதியில் உள்ள பள்ளத்தில் ஆட்டோ ஒன்றும் சிக்கியது.

    இதேபோல் செட்டிகுளம் சந்திப்பு பகுதியிலும் சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு 2 நாட்களாக உள்ளது. ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், மாநக ராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளனர். பள்ளம் ஏற்பட்ட பகுதியில் பொதுமக்கள் கம்பு ஒன்றை நாட்டி துணியை சுற்றி வைத்துள்ளனர். இந்த பிரச்சனைகள் தொடர்பு டைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக செட்டி குளம் பகுதியை ஆய்வு செய்து அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு நிரந்தர தீர்வாக பைப் லைன் அமைக்கப்பட்ட பகுதியில் சாலைகளை அப்புறப்படுத்தி விட்டு பைப்லைன் அமைக்க ப்பட்ட பகுதியின் மேல் காங்கிரீட் தளம் அமைத்து அத ன்பிறகு சாலை அமை க்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் காரில் வந்து கொண்டு இருந்தார்
    • என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார்

    நாகர்கோவில் : திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் பென்னி சாலமன் (வயது 45). இவர் நேற்று தனது காரில் நாகர்கோவில் சென்றார். பின்பு இரவு 9 மணி அளவில் இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரின் முன்பக்கம் என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார். அப்போது கவுன்சிலர் செந்தில் ராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் விட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து திங்கள்நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜான் வின்ஸ் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. கார் தீப்பிடிக்க தொடங்கியதும் சாலமன் இறங்கி விட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • சாலையில் திடீரென நடுரோட்டில் உருண்டு புரண்டு போராட்டம் செய்தார்.
    • இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கீதா.இவர்கள் 2 பேருமே ஆட்டோ டிரைவர்கள். இவர்களுக்கு யோகேஸ்வரன் (22) என்ற மகன் உள்ளார்.இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சந்திசேகருக்கு கையில் அடிப்பட்டதால் அவர் ஆட்டோ ஓட்டாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதையடுத்து அவரது மனைவி கீதா மட்டும் ஆட்ேடா ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இவர்களது மகன் யோகேஸ்வரன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதையடுத்து கீதா வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ஆனால் இதுவரையும் மாயமான யோகேஸ்வரன் பற்றி எந்த தகவலும் இல்லை.

    இதையடுத்து இன்று காலை 9 மணியளவில் கீதா ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் திடீரென நடுரோட்டில் உருண்டு புரண்டு போராட்டம் செய்தார்.

    இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து பெண் ஆட்டோ டிரைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர் மாயமான என் மகனை மீட்டுத்தர வேண்டும். சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் கிடைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

    பின்னர் பெண் போலீசார் உதவியுடன் கீதாவை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.

    அப்போது தான் ஆட்டோவில் வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குமரவேல், ராஜேஸ்வரி, தீபன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.

    சேலம்:

    மலேசியா ஜேலான் தெண்டல் பேர்மை பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 42). இவரது மனைவி ராஜேஸ்வரி (40), மகன் தீபன் (21) ஆகியோருடன் சேலத்தில் இருந்து ஒரு ஆட்டோவில், தங்கள் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வையப்பமலை பகுதிக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.

    சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது சேலத்தில் இருந்து கொல்லிமலை நோக்கி சென்ற, அரசு பஸ் கவிழ்ந்து கிடந்த ஆட்டோ மீது மோதியது.

    இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குமரவேல், ராஜேஸ்வரி, தீபன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால், அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டோவை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

    • கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
    • ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    கோவை மாவட்டம் சூலூர் தாலுகா வி.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 43).இவரது சகோதரர் வெங்கடாசலம்(40). சகோதரர்கள் இணைந்து அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடமிருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் க.கிருஷ்ணாபுரம் ஊராட்சி காமநாயக்கன்பாளையம் கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.

    தற்போது வீடு கட்டுவதற்காக, இடத்தை அளவீடு செய்ய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். நிலத்தை அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி ரோட்டின் மையப்பகுதியில் அளவீடு செய்து இதுதான் உங்களது வீட்டுமனை இடம் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது நிலத்தை முறையாக அளவீடு செய்து தரக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். தாசில்தார் இல்லாததால் மண்டல துணை தாசில்தாரிடம் மனு அளித்து தங்களது இடத்தை உரிய அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் செய்தியாளரின் அழைப்பை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×