search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவநாதன் யாதவ்"

    • தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் இந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரமே களம் இறங்கி உள்ளார்.
    • பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்த சிவகங்கை மக்களை தேவநாதன் யாதவ் நேரில் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.

    சிவகங்கை:

    சிவகங்கை சீமை என்றதும் ராணி வீரமங்கை வேலுநாச்சியார், மாமன்னர் மருதுபாண்டியர்கள், வீரத்தாய் குயிலி போன்றோரின் வீரம் எக்காலத்திலும் போற்றத்தக்கது. இவர்கள் சிவகங்கையின் அடையாளங்கள் என்றே கூறலாம்.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பொறுத்தவரை எம்.பி.யாக தற்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் இந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரமே களம் இறங்கி உள்ளார். பா.ஜனதா கூட்டணி சார்பில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனர் தேவநாதன் யாதவ், அ.தி.மு.க. சார்பில் பணங்குடி சேவியர் தாஸ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

    இந்த முறை கார்த்தி சிதம்பரத்திற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு நிலவியது. மேலும் கார்த்தி சிதம்பரம் கிராமப்புறங்களுக்கு சென்று மகளிருக்கு ஆயிரம் ரூபாய், 100 நாள் வேலைத் திட்டம், ஏழைப் பெண்களுக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்பதையெல்லாம் சொல்லி வாக்கு கேட்கிறார். ஆனால் மக்கள் கார்த்திக் சிதம்பரத்தை எதிர்த்து கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்கள். பல கிராமங்களில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிர்ப்பு இருப்பதால் வாக்கு சேகரிக்க முடியமால் திணறிவருகிறார்.

    காங்கிரஸ் வேட்பாளரான தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்கு கேட்டு சென்ற ப. சிதம்பரத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தேர்தல் களமானது பாஜகவுக்கு சாதகமாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்த சிவகங்கை மக்களை தேவநாதன் யாதவ் நேரில் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.

    அண்ணாமலையின் தீவிர பிரசாரம், மோடியின் திட்டங்கள், களத்தில் தீவிர வேலைப்பாடு, கூட்டணியின் பலம் என தேர்தல் களத்தில் முன்னேறி வருகிறார் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ்.

    • சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு இடையில் நேரடி போட்டி உருவாகி உள்ளது.
    • சிவகங்கை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வரவில்லை.

    சிவகங்கை :

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களைப் பிரதானமாகச் செய்து வருகிறது. சிவகங்கை தொகுதி தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதால் அங்கு படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது. மேலும் ஆளும் கட்சி திமுக மீது எதிர்ப்பு நிலையில் தான் சிவகங்கை மக்களின் மன நிலை உள்ளது. ஜி.கே.வாசன், அமமுக போன்ற கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளதால் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு இடையில் நேரடி போட்டி உருவாகி உள்ளது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் நிற்கிறார். அதிமுக சார்பில் கல்லல் ஒன்றியச் செயலாளரான சேவியர் தாஸ், நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி போட்டியிடுகிறார். இதில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி என களம் இருக்கிறது.

    சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்குலத்தோர், யாதவர் முத்திரையிர் பட்டியல் பிரிவினர், உடையர், சிறுபான்மையினர் கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் செட்டியார் சமூக வாக்குகள் இருக்கின்றன. "பாஜக-விற்கு கடந்த தேர்தலின்போது உட்கட்டமைப்பு பெரிய அளவில் இல்லை. ஆனால் இந்த முறை தொகுதியில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பணியாட்களை அமர்த்தி வேலை செய்து வருகின்றனர். மேலும், "சிவகங்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான யாதவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருப்பதால் அவர்களின் கணிசமான வாக்குகள் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவிற்கு கிடைக்கும்.

    அமமுக, ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவாளர்களும் இங்கே இருப்பதால் காங்கிரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வெற்றி வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, சிவகங்கை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக காரைக்குடி பகுதிக்கு திட்டங்களை நகர்த்துவதால் மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கை பின்தங்கிவிட்டது

    இந்த முறை பிரதமர் மோடிக்கு எதிரான அலை என்பது பெரிய அளவில் இல்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் செயல்பாடு மோடி அரசின் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு திட்டம், ரூ.6000 நிதி, குறைந்த விலையில் உரம் என விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் நேரடியாக விவசாயிகளை சென்றடைந்துள்ளதால் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பாஜகவின் வசமாக மாறியுள்ளது. மேலும் தேவநாதனின் பிரசார யுக்தி கிராமம் தோறும் வாக்குசேகரிப்பு குறிப்பாக யாதவர்களின் ஆதரவு என களத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முந்தி செல்கிறது.

    • சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது
    • இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

    சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

    அந்த புகாரில், "சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.

    அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்.

    ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டர்களுக்கு எழுந்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

    ×