search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் தமிழகம்"

    தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRains
    சென்னை:

    தென் கிழக்கு வங்க கடலில் கடந்த வாரம் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடகடலோர மாவட்டங்கள் வழியாக தரைப்பகுதியை கடந்து கேரளா சென்று விட்டது.

    இதனால் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

    மேலும் 9-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.


    இதற்கிடையே குமரிக் கடல் மற்றும் தென் கிழக்கு அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிக்கும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #IMD #TNRains
    அடுத்த 24 மணி நேரத்திற்குள் டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain #DeltaDistrict #IMD
    சென்னை:

    தமிழக கடலோர பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தரை பகுதிக்குள் நகர்ந்து வலு இழந்தது.

    இதனால் உள் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாகவும், சில சமயம் கன மழையும் பெய்து வருகிறது.

    வலு இழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலுக்கு சென்று மேலடுக்கு சுழற்சியாக பரவி உள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள குமரி கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.


    இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. #ChennaiRain #DeltaDistrict #IMD
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தமிழகத்தில் தொடங்கி பரவலாக பெய்தது. தீபாவளிக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்களாக மழை இல்லை.

    இந்த நிலையில் நேற்று இலங்கையையொட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இந்தியப் பெருங்கடல் மற்றும் குமரி கடல் பகுதிவரை பரவி இருந்தது.

    அது இன்று வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு திசையில் கன்னியாகுமரி நோக்கி நகர்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் கன்னியாகுமரியை கடந்து செல்லும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.


    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரம், ராமநாதபுரம், பாம்பன், இரணியல், திருச்செந்தூர், தூத்துக்குடி, குளச்சல், ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இதேபோல் அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் (9-ந்தேதி) புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #IMD #HeavyRain
    அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். #NortheastMonsoon #Rain
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 21-ந் தேதி முடிவடைந்தது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

    அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழையோ மிக கனமழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.



    சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் அதிகபட்சமாக 29 செ.மீ. மழை பெய்துள்ளது.

    மழை அளவு (செ.மீ. )வருமாறு:-

    சாத்தான்குளம் - 22
    பாபநாசம் - 16
    திருச்செந்தூர் - 11
    காட்டுமன்னார்கோவில் - 10

    இதற்கிடையே தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    இந்த தாழ்வு பகுதி புயல் சின்னமாகவும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NortheastMonsoon #Rain


    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கும், கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRain #KeralaRain
    சென்னை:

    கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளாவில் பலமாக கொட்டி நாடு முழுவதும் பரவலாக பெய்தது.

    தற்போது பருவ மழையானது கிழக்கு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், வடக்கு மராட்டியம், குஜராத் மாநிலங்களில் நின்று போனது. அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகம், மற்றும் அரபிக்கடல் பகுதியிலும் பருவ மழை முடிவுக்கு வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் லேசாக மழை பெய்து வருகிறது

    இந்த நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் இன்று காலை முதல் 7-ந்தேதி காலை 4 மணி வரை 4 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் 8-ந்தேதி மழை குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    இதேபோல் தென்மேற்கு வங்க கடலில் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. #TNRain #KeralaRain
    தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ChennaiRains
    சென்னை:

    சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது.

    இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வட தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி உள்ளது. இதனால் வடதமிழகம்- தென் தமிழகத்தில் இன்று காலை முதல் மழை பெய்தது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும்.


    தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழைபெய்து வருகிறது. இங்கு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாவதற்கான வாய்ப்பு நிலவுவதால் வருகிற 26-ந்தேதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் சீற்றமும் அதிகம் காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் இன்று அதிகாலையில் மழை பெய்த நிலையில் தொடர்ந்து மழை தூறல் காணப்பட்டது.

    எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, கிண்டி, அடையார், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், வில்லிவாக்கம், அயனாவரம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.  #ChennaiRains
    ×