search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. நிர்வாகி"

    • சரிபார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்
    • அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வருகினற 27-ந்தேதி அன்று வெளியிட உள்ளது.

    வருகிற 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர நவம்பர் மாதத்தில் 4, 5, 18, மற்றும் 19 ஆகிய 4 தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

    வருகிற ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்,

    ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி முனைப்புடன் செயல்பட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • வேணு,பாஸ்கர் இருவரும் சேர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் கடனாக வாங்கினர்.
    • தி.மு.க. பிரமுகர் பாஸ்கரன், தேர்கு ணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக வேணு குற்றஞ்சாட்டியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தேர்குணம் பகுதியை சேர்ந்தவர் வேணு. வெல்டிங் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர்கள் இருவரும் சேர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமான மாக வைத்து ரூ.60 லட்சம் கடனாக வாங்கினர். இதில் தேர்குணம் பகுதியைச் சேர்ந்த வேணு ரூ.15 லட்சத்தை மட்டும் திருப்பி கட்டியுள்ளார். மீதி தொகை யை கட்டுவதற்கு காலதாம தம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாஸ்கருக்கும், வேணுவுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. நிர்வாகியுமான பாஸ்கரன் என்பவர் மூலமாக வேணு விடம் பாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தி பணத்தை கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன், தேர்குணத்தை சேர்ந்த பாஸ்கர் ஆகிய இருவரும் சேர்ந்து வேணுவை கடத்தினர். வானூர் அருகேயுள்ள காட்ராம்பாக்கத்தில் இருந்து கடத்தி, மாத்தூரில் உள்ள ஒரு வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இது தொடர்பாக வேணு, வாட்ஸ்அப் மூலமாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வேணுவின் மனைவி கிளியனூர் போலீஸ் நிலையம் சென்றார். தனது கணவரை கடத்தி சென்று மாத்தூரில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தரவேண்டு மெனவும், வாட்ஸ்அப் தரவுகள் மூலம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கிளியனூர், கோட்டக்குப்பம் போலீசார் மாத்தூருக்கு விரைந்து சென்று வேணுவை மீட்டனர். மீட்கப்பட்ட வேணு, தன்னை தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன், தேர்குணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மதி, நீல மேகம், செல்வம் ஆகியோர் கடத்தி சென்று சித்திரவதை செய்ததாக கிளியனூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. பிரமுகர் பாஸ்கரன், தேர்கு ணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக வேணு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களை கைது செய்ய வேண்டுமென கோட்டக்குப்பம் போலீஸ் துணை சூப்பிரண்டி டம் வேணு மனு கொடுத்துள் ளார். இந்த சம்பவம் கிளியனூர் மற்றும் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை ஒருவர் தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பணியில் இருந்த போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபரை ்அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு. இவர் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    இவர் அதே ஊரில் வசிப்பவரிடம் ரூ.30 ஆயிரம் பணம் கடன் வாங்கினார். இதற்கு வட்டியாக இதுவரை ரூ.ஒரு லட்சத்து பத்தாயிரம் வழங்கிய பின்பும், மீதம் ரூ.20 ஆயிரம் தரவேண்டுமென நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கடன் கொடுத்தவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு வந்த போலீசார், சிவகுரு மற்றும் அவரது மனைவியை மிரட்டி பணம் கொடுக்க வலியுறுத்தினர். எனவே, கடன் கொடுத்த நபர் மீதும், வீட்டிற்கு வந்து மிரட்டிய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக சிவகுரு கூறினார். கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென தி.மு.க. பிரமுகர் சிவகுருவிற்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • கோவையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் கூட பல வகையான தின்பண்டங்கள் கொடுத்து ரூ.250க்கு தான் பில் போடுகின்றனர்
    • பார் உரிமையாளர், கட்சிக்கார ர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.அதற்கெல்லாம் யாரிடம் வாங்குவது என கூறினார்.

    பல்லடம்:

    பல்லடத்தில் சமூக வலைதளங்களில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் மதுபான பாரில் கூடுதலாக விலை அதிகம் வைத்து விற்பனை செய்வது குறித்து பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    அதில் பல்லடம் மதுபான பாரில் பீர் குடிக்க சென்றேன். அதற்கு 300 ரூபாய் என்றனர். கோவையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் கூட பல வகையான தின்பண்டங்கள் கொடுத்து ரூ.250க்கு தான் பில் போடுகின்றனர். பல்லடத்தில் இவ்வளவு அதிகமாக பில் போடுகிறீர்களே என்று கேட்டபோது, அந்த பார் உரிமையாளர், கட்சிக்கார ர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.அதற்கெல்லாம் யாரிடம் வாங்குவது என கூறினார். எந்தக் கட்சிக்கா ரர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்று நான் கேட்டபோது எல்லா கட்சிக்கும் தான் என்றனர்.

    எதற்காக கட்சிக்காரர்கள் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். இது கட்சி தலைமை வரை இது தெரியட்டும் என்றுதான் இந்த பதிவை போடுகிறேன். இவ்வாறு அவர் பேசி உள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 30). மாணவரணி தி.மு.க. அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை இருந்தனர்.

    மணிகண்டபிரபுவின் மனைவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் மணிகண்டபிரபு இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்த கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மணிகண்ட பிரபுவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அது தவிர இவர் அதே பகுதியில் சிறு தொழில் ஒன்றையும் செய்து வந்தார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வேதனையில் இருந்துள்ளார்.

    இதனால் அவர் வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×