என் மலர்
நீங்கள் தேடியது "தவெக"
- களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என்ற விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ.
- நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
மதுரை செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
இங்கே இருக்கும் அதிகாரிகளுக்கு சொல்கிறேன், 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதும், தவறு செய்யும் அதிகாரிகள், அவர்கள் ஐஏஎஸ் ஆக இருந்தாலும் சரி, எந்த அதிகாரிகளாக இருந்தாலும் சரி சிறைச் சாலை செல்வது உறுதி.
நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
எழுதி வைத்து கொள்ளுங்கள், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர்.
நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
வடிவேலு, நயன்தாரா வந்தால்கூடதான் கூட்டம் கூடும். நடிகர் என்றால் கூட்டம் கூடதான செய்யும். அதற்காக எல்லோரும் எம்ஜிஆர் ஆக மாற முடியாது.
அதிமுக களத்தில் இல்லை என பேச எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.
அதிமுக களத்தில் இல்லை என பேசுவது முட்டாள் தனமானது. விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன.
- குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட எத்தனை சீட்டுகள் எண்ணிக்கை என்பது முக்கியமில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் வளா்ந்து விடக்கூடாது, சாதி-மத மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருறோம்.
ம.தி.மு.க. எத்தனை சீட்டுகளில் போட்டியிட வேண்டும் என்பதை இயக்கத்தின் தலைமை முடிவெடுக்கும். உரிய எண்ணிக்கைக்கான சீட்டு எங்களுக்கு தி.மு.க. வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
ம.தி.மு.க. எப்போதும் தி.மு.க. கூட்டணியுடன் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வேறு எந்த கூட்டணியில் இருந்தும் அழைப்பு வந்ததா? என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. மதவாத சக்திகள் தமிழகத்தில் கால் பதிக்கும் சூழ்நிலையில், எங்களது கூட்டணி உறுதியாக உள்ளன.
கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன. அதனை வளர விடக்கூடாது என்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளாம். அவர் மதவாத சக்திகளை எதிர்க்கிறார். விஜய் அறியாமலேயே மதவாத சக்திகளுக்கு உதவி விடக்கூடாது. மதவாத சக்திக்கு எதிரான தி.மு.க. கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்.
த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் இணைய மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே மதவாத சக்திக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மேற்கு வங்காளம், தமிழகத்தையும் கைப்பற்றுவோம் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு கூறுகிறார்.
எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகம், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு இடங்களில் தகுதியான வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எஸ்.ஐ.ஆர்-ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான காலக்கெடு தான் குறைவு. அதில் உள்ள குறைபாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம்.
இப்படி குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது தகுதியான வாக்காளர்களை நீக்கி விடக்கூடாது என்பது தான் எங்களது அச்சம். ஏனெனில் இத்தகைய தவறுகள் ஒருசில மாநிலங்களில் நடந்துள்ளது. அது தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என்றார்.
இறுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு குறைந்த தொகுதிகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறதே என்று கேள்விக்கு, "எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பதை எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும். அதுகுறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கும் போது கூட்டணி தலைமையிடம் எங்கள் கட்சி தலைமை பேசும்.
தொகுதி எண்ணிக்கை குறைந்தால் யாருக்கும் சந்தோஷமாக இருக்காது. எண்ணிக்கை கூடினால் சந்தோஷப்படுவோம். தொகுதி எண்ணிக்கை குறைப்பு தொடர்பாக தி.மு.க. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.
- த.வெ.க தலைவர் விஜய் வரலாற்று நாயகனாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை காணுவதைப் போல இன்று தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது.
கோவை:
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக மலேசியா சென்றிருந்தார். அங்கு அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து அண்டை நாடுகளே வியந்து போய் இருக்கின்றன. அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியானது உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் நடந்துள்ளது.
இதுவரை மலேசியாவில் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் தான் ரோடு ஷோ சென்றுள்ளனர். ஆனால் இந்த முறை இவருக்கு ரோடு ஷோ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் வரலாற்று நாயகனாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை தான் தேவை என தமிழகத்தில் உள்ள பெண்கள், இளம் வயதினர் என அனைவரும் ஒருமனதாக குரல் கொடுக்கும் காட்சியை நாம் பார்த்து வருகிறோம்.
நான் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அங்கு ஆர்ப்பரித்து வரக்கூடிய கூட்டத்தை பார்க்கும் போது 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் 88-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆகியோருக்கு திரண்ட கூட்டத்தை போன்று தற்போது தமிழகத்தில் விஜய்க்கு கூட்டம் வருவதை பார்க்க முடிகிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை காணுவதைப் போல இன்று தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது. இந்த மாற்றமானது எதிர்காலத்தில் தமிழகத்தின் வரலாற்றில், விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராக அமர்வதை மக்கள் சக்தியோடு இணைந்து அந்த பணியை நிறைவேற்றுவோம்.
த.வெ.கவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பல இடங்களில் கருத்துக்களை பரிமாறி வருகிறார்கள். இதுவரையிலும் அந்த கருத்துக்கள் என்னை போன்றவர்களின் கவனத்துக்கு வரவில்லை. கவனத்திற்கு வந்தால் தான் அதற்கு பதில் அளிக்க முடியும்.
ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்வர். பொதுவாக ஒரு புதிய இயக்கம் தொடங்கி இருக்கிறது. ஒரு வரலாறு படைக்கிற இயக்கம். எது வேண்டுமானாலும் மக்கள் கோரிக்கை வைக்கும் போது அந்த கோரிக்கைக்கு ஏற்ப எப்படி நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆராய்ந்து அந்த பணிகளை மேற்கொள்வோம்.
எங்களை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். த.வெ.க தலைவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி இணைய முடியும் என தெளிவாக சொல்லிவிட்டோம்.
த.வெ.க., பா.ஜ.க மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்ற திருமாவளவனின் கருத்து வேறு. இதே தி.மு.க வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோது என்ன செய்தார் என்பதை திருமாவளவன் தான் விளக்க வேண்டும்.
எங்கள் தலைவர் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசும் போது 2 கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த மக்களும் அதற்கு கரகோஷம் அளித்தனர். கொள்கை ரீதியாக நாங்கள் எதிர்க்கிறோம். யாரை அப்படின்னு அவர் கேட்டபோது மக்கள் சொன்னார்கள். மக்கள் உணர்வை தான் அவர் பிரதிபலிக்கிறார். எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
த.வெ.கவில் எந்தெந்த தலைவர்கள் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனவரி முதல் வாரத்துக்குள் அத்தனையும் உங்களுக்கு தெரியும் என்றார்.
- எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்
- சினிமா உலகம் நிச்சயமாக அவரது இருப்பையும், துடிப்பையும் மிஸ் செய்யும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். அவரது சினிமாப்பயணம் மற்றும் திரையில் அவர் வெளிப்படுத்திய ஆற்றல் சிறப்பானவை, மறக்கமுடியாதவை. அவர் இந்தக் அத்தியாயத்தை முடித்துக்கொண்டு ஒரு புதிய பயணத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில், சினிமா உலகம் நிச்சயமாக அவரது இருப்பையும், துடிப்பையும் மிஸ் செய்யும். வரவிருக்கும் அனைத்திலும் அவருக்கு வெற்றியும், நல்வாழ்த்துக்களும் மட்டுமே கிடைக்க வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
- மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இணையான கட்டமைப்பை தற்போது த.வெ.க. உருவாகி வருகிறது.
- ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் விஜய் மக்கள் பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.
தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
எந்தக்கட்சிக்கும் இல்லாத அளவுக்கு நிர்வாக ரீதியாக 128 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை த.வெ.க. அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அதேபோல், வார்டு பகுதி செயலாளர்களையும் நியமித்துள்ளது.
மாவட்டச்செயலாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்ட தொகுதிகளில் அவர்கள் மின்னல் வேகத்தில் பணிகளை முன்னெடுத்து உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இணையான கட்டமைப்பை தற்போது த.வெ.க. உருவாகி வருகிறது.
இந்தநிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனில் கடந்த நவம்பர் இறுதியில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்காக விசில், மோதிரம், மைக், உலக உருண்டை உள்ளிட்ட சில சின்னங்களை குறிப்பிட்டு அனுப்பியது. இதில், த.வெ.க.வுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்தல் சின்னத்தை இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த சின்னம் மோதிரமா?, விசிலா? அல்லது வேறு சின்னமா? என்பது இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.
ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் விஜய் மக்கள் பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் த.வெ.க.வுக்கான சின்னத்தை விஜய் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து த.வெ.க.வினர் கூறும்போது, 'மக்கள் சந்திப்பில் சின்னம் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. எங்கள் தலைவர் எப்போதும் மக்களுடனே இருக்கிறார். எனவே சின்னமும் மக்கள் சந்திப்பிலே அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தனர்.
- புரட்சி தலைவி அம்மாவோடு பயணத்தை மேற்கொண்டேன் மகிழ்ச்சியாக இருந்தது.
- என்னை நீங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள். அதற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:
* புரட்சி தலைவி அம்மாவோடு பயணத்தை மேற்கொண்டேன் மகிழ்ச்சியாக இருந்தது.
* நான் ஒருவரை அடையாளம் காட்டினேன். அந்த அடையாளம் காட்டியவர் தான் இறுதியில் என்னை அடையாளம் காட்டி விட்டு சென்று விட்டார். கவலைப்பட தேவையில்லை.
* நல்ல இடத்துக்கு நீங்கள் போங்கள் என்று அடையாளத்தை காட்டி இருக்கிறார். அதற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.
* அவரோடு இருந்தால் இன்னும் பின்னுக்கு தள்ளி இருக்க முடியும். ஆனால் என்னை நீங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள். அதற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கேட்காமலேயே தோன்றி இருக்கக்கூடிய தலைவர் தான் நம்முடைய தளபதி.
- தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்து இருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:
* வழி தெரியாமல் நின்றபோது எனக்கு வழிகாட்டியவர் விஜய்.
* என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான் என்று கூறி கண்கலங்கினார்.
* தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு நாதர் சொன்னார்.
* இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையென்று சொல்லுவதில்லை.
* கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா... என்று இந்து மதம் சொல்லும்.
* கேட்காமலேயே தோன்றி இருக்கக்கூடிய தலைவர் தான் நம்முடைய தளபதி. கேட்காமலேயே கொடுக்கக்கூடிய தளபதி நமக்கு கிடைத்து இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
- த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கில் த.வெ.க. முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் வருகிற 29-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நிர்வாகிகள் டெல்லி சென்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
- மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
- எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த திட்டத்திற்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் இயற்றி உள்ளனர்.
இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எம்.பி.க்கள் மனு அளித்துள்ளோம்.
ஏனென்றால் அந்தந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு நிதி வழங்குவது சாத்தியமில்லை. மேலும் மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது.
மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்தி வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகின்றனர்.
நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். ஆனால் அவர் தீய சக்தி தி.மு.க., தூய சக்தி த.வெ.க. என கூறியது ஏற்புடையதல்ல. ஏனென்றால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்னும் சில நாட்களில் மேலிட பொறுப்பாளர்கள் பேசுவர். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.
தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.
எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம். எங்கள் தலைவர் ராகுல்காந்தி கூட இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி வாக்குகள் நீக்கப்படுவது ஏற்புடையதல்ல. பீகாரில் கூட கடைசி நேரத்தில் பல வாக்குகள் சேர்க்கப்பட்டது. இந்த எஸ்ஐஆர் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
- 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் மயக்க நிலையில் உள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக்கழக கட்சி நிர்வாகி. இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தினால் சென்னை பனையூரில் அக்கட்சி தலைவரான நடிகர் விஜயின் காரை முற்றுகை யிட்டு அஜிதா மற்றும் அவரது ஆதர வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அஜிதா ஆக்னல் 3 நாட்களாக உணவு அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை அவரது கணவர் உள்ளிட்டோர் உடனடியாக தூத்துக்குடியில் தங்கள் வீட்டருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறும்போது, அஜிதா ஆக்னலுக்கு தற்போது எக்ஸ்ரே போன்ற பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தூக்க மாத்திரைகளின் செயல்பாட்டை குறைக்கும் விதமான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு இல்லை. 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் மயக்க நிலையில் உள்ளார்.விரைவில் குணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவருக்கு இன்று 2-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அஜிதா ஆக்னல் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.
- காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.
- நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள்.
திருச்சி:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் ஓராண்டுக்கு முன்னரே களத்தில் அனல்பறக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளப்போகும் கட்சியும் தங்களுக்கான கூட்டணியை இன்னும் இறுதிசெய்யாத நிலையில் அத்தனை தொகுதிகளில் வெல்வோம், இத்தனை தொகுதிகளில் வெல்வோம் என்று கூக்குரலிட்டு வருகிறார்கள்.
கடைசி நேரத்தில் கூட்டணியில் மாற்றங்கள் வரும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்தபோதிலும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் ஒரு அணியும், விஜய்யின் த.வெ.க. கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டன. இதர கட்சிகளாக தே.மு.தி.க. தனது கூட்டணி குறித்து வருகிற 9-ந்தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் என்று அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க., பா.ம.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. தொண்டர் மீட்புக்குழு போன்றவை விரைவில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறியுள்ளன. அதன் அடிப்படையில் 4 முனை போட்டியா அல்லது 5 முனை போட்டியா என்பது வெகுவிரைவில் தெரியவரும்.
கட்சி தொடங்கிய பின்னர் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விஜயின் த.வெ.க. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்காக அக்கட்சியும் கூட்டணி கதவுகளை திறந்து வைத்துள்ளது.
இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தபோதிலும் அதன் மூத்த நிர்வாகிகள் தற்போது வரை எந்த விமர்சனமும் செய்யாதது சந்தேகங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுசாமி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.
இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் நான் மட்டுமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எங்களது மாவட்ட தலைவர், மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசியுள்ளனர். விஜய் பற்றி பேசும்போது அங்கு திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உள்ளது.
காங்கிரசின் அடிமட்ட தொண்டர்கள் தி.மு.க. மீது கோபத்தில் இருப்பது உண்மைதான். ஒரு இயக்கம் அடிமட்டத்தில் வளர வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ஆனால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் அவமானப்படுத்தியதாக தொண்டர்கள் கருதுகிறார்கள்.
பல இடங்களில் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. ஒரு சில இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு அந்த இடங்களிலும் பண பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்தார்கள். அந்த குமுறல் தான் இன்றைக்கு ஆர்ப்பரிப்பாக வெளிப்படுகிறது. எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கிவிடும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருப்பவர்கள், ஒரு சில பயனாளிகளை தவிர யாரும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிருவரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மற்ற காங்கிரஸ் கட்சியினரை கீழ்த்தரமாக நடத்துவதாக நினைக்கிறார்கள். கூட்டணி தோழமை என கூறிவிட்டு காங்கிரசை வேரறுக்கும் வேலையைத்தான் தி.மு.க. செய்தது.
நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள். இது நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் தெரியும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே அது பெருந்தலைவர் காமராஜர் தான். ஆனால் அவரையும் அவமானப்படுத்தினார்கள். ஆனால் தி.மு.க. தலைமை உடனடியாக அதை கண்டிக்கவில்லை. இது போன்ற கோபத்தின் வெளிப்பாடுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும். காங்கிரசும் அவ்வாறு முடிவு எடுக்கும் என தொண்டர்கள் நம்புகிறார்கள்.
ஒரு சாரார் தி.மு.க. கூட்டணியை விரும்புவதாகவும், மற்றொரு தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியை விரும்புவதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. அவ்வாறு கூறி காங்கிரசை துண்டாக்க முடியாது. அடிபட்ட காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த மனநிலையும் தி.மு.க. கூட்டணி கூடாது என்பதாகத்தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் காங்கிரசை த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க தூண்டுகிறது என்றார்.






