search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை தேர்தல் கமிஷன்"

    பாராளுமன்ற தேர்தல் முடிந்தது. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது. 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்ற தேர்தல், சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே 19-ந் தேதி வரையில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்த நிலையில் 483 தொகுதிகளில் 66.88 சதவீத வாக்கு பதிவானது.

    பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டீகாரில் 1 என மொத்தம் 59 தொகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் நரேந்திர மோடி (வாரணாசி) மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத் (பாட்னா சாகிப்), ஆர்.கே. சிங் (ஆரா), ராம் கிருபால் யாதவ் (பாடலிபுத்திரா), மனோஜ் சின்கா (காசிப்பூர்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.



    காங்கிரசில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் (சசாராம்), காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் (மண்ட்சார்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தனர்.

    இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது.

    பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா, பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன்சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் என தலைவர்கள் பிரசாரங்களின்போது, தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்கள் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் எழுந்தன.

    நடத்தை விதிகள் புகார்களை கையாள்வதில் தேர்தல் கமிஷனர்கள் இடையே மோதல் ஏற்பட்டது, இதுவே முதல் முறை.

    இந்த நிலையில் பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. எல்லா மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

    மொத்தம் 10 கோடியே 1 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்களுக்காக சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்ததாக தகவல்கள் வந்தாலும், அது வாக்குப்பதிவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் ஹரிஷ் முகர்ஜி சாலையில் மித்ரா கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பிற்பகல் 3 மணிக்கு ஓட்டுப்பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் கொல்கத்தாவில் வாக்குப்பதிவு செய்தார்.

    முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சாரியா உடல்நலக்குறைவால் வாக்களிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

    உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலையில் சீக்கிரமாக வந்து வாக்களித்தார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, “மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்” என கூறினார்.

    அங்கு பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி உள்ளிட்ட பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கோளாறு புகார்கள் எழுந்தன.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மின்னணு வாக்கு எந்திர கோளாறு புகார்கள் பரவலாக எழுந்தன. புதிய வாக்காளர்களும், பெண்களும் உற்சாகத்துடன் வாக்களித்தனர். பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களும் மோதிக்கொண்டனர். ஜாதவ்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரசார் கள்ள ஓட்டு போட்டதாக பாரதீய ஜனதா கட்சியினர் புகார் கூறினர்.

    பாரதீய ஜனதா கட்சித்தலைவர்கள் உத்தரவின்பேரில், வாக்காளர்களை மத்திய படையினர் சித்ரவதை செய்ததாகவும், மிரட்டியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போடாவிட்டால் உங்களை சுட்டுவிடுவோம் என வாக்காளர்களை மத்திய படையினர் மிரட்டியதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தீரக் ஓ பிரையன் கூறினார்.

    பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. காதூர் சாகிப் தொகுதியில் நடந்த மோதலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். பரவலாக பல இடங்களில் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் கட்சிகளின் தொண்டர்கள் இடையே மோதல்கள் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    அங்குள்ள சந்தாலி தொகுதியில் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலா ரூ.500 கொடுத்து, அவர்களை சிலர் வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும், அவர்களின் விரல்களில் சமூக விரோத சக்திகள் அழியாத மையிட்டதாகவும் புகார்கள் எழுந்து, தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டுள்ளது.

    பீகாரில் 8 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 462 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள இடங்களில் தேர்தல் நடந்ததால் 2 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

    முதல்-மந்திரி நிதிஷ் குமார், மகன் நிசாந்துடன் வந்து பாட்னாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு பதிவு செய்தார்.

    நேற்றைய இறுதிக்கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இத்துடன் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி நடந்து வந்த பாராளுமன்ற தேர்தல் நேற்று முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலானவை பாரதீய ஜனதா கட்சி கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளன.

    இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடக்கிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்கின்றனவா என்பது அப்போது தெரிய வரும்.
    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவைவில் உள்ள 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதில் பணப் பட்டுவாடா புகார் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    அதைதொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இறுதிக்கட்டமாக எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று  நடைபெற்ற வாக்குப்பதிவு 6 மணியுடன் முடிவடைந்தது. 

    இன்றைய தேர்தலில் அதிகபட்சமாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் 73.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

    அதற்கு அடுத்தபடியாக, ஜார்கண்ட் மாநிலத்தில்70.05 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 69.38 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 66.18 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 63.57 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 58.81 சதவீதம் வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 54.37 சதவீதம் வாக்குகளும், மிகவும் குறைந்தபட்சமாக பீகாரில் 49.92சதவீதம் வாக்குகளும் பதிவாகின.  

    மேற்கண்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 60.21 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இந்நிலையில், இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்ததாக இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    இன்றைய தேர்தலில் 3.47 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 3,377 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட  7.27 கோடி பேர் வாக்களித்ததாக  தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
    8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.85 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
    புதுடெல்லி: 

    பாராளுமன்ற மக்களவைவில் உள்ள 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதில் பணப் பட்டுவாடா புகார் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    அதைதொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

    பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

    8 மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 64.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் 63.58 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 57.27 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 50.24 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 49.43 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 48.18 சதவீதம் வாக்குகளும், பீகாரில் 46.66 சதவீதம் வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 46.07 சதவீதம் வாக்குகளும், பதிவாகின. 

    ஒட்டுமொத்தமாக மேற்கண்ட 59 தொகுதிகளிலும் 3 மணிவரை 51.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
    பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    மேற்கு வங்கத்தில் 19-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடக்கிறது. மாநிலத்தில் அமித்ஷா ஊர்வலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு பெரிய வன்முறை வெடித்தது. இதனையடுத்து அரசியல் சட்டப்பிரிவு 324-ஐ கையிலெடுத்த தேர்தல் ஆணையம் ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 16-ம் தேதி இரவு 10 மணியுடன் அனைத்து பிரசாரங்களும் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

    மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷா தனது கூட்டத்தின் மூலம் வன்முறைகளை உருவாக்கியுள்ளார், வித்யாசாகர் சிலை சிதைக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி வருத்தப்படவில்லை. மேற்கு வங்காள மக்கள் இதனை தீவிரமாக எடுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், தேர்தல் ஆணையத்திற்கு மிரட்டல் விடுத்தார். அதன் விளைவுதான் பிரசாரத்திற்கு ஒருநாள் தடையா? வங்க மக்கள் பயப்பட மாட்டார்கள். 

    நான் மோடிக்கு எதிராக பேசுவதால்தான் மேற்கு வங்கம் இலக்காக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை பா.ஜனதா நடத்துகிறது. இது இதுவரையில் இல்லாத ஒருநடவடிக்கையாகும். நேற்று வன்முறையே அமித் ஷாவால் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் அமித்ஷாவிற்கு நோட்டீஸ் விடுக்காதது ஏன்? பிரசாரம் செய்ய தடை விதிக்காதது ஏன்? குண்டர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தார்கள், அவர்கள் காவி நிறம் அணிந்துக்கொண்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். 

    பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இருந்த வன்முறைகளை உருவாக்கியுள்ளனர். தேர்தல் கமிஷனின் முடிவு நியாயமற்றது, அரசியல் ரீதியாக ஒருசார்பானது. பிரதமர் மோடி நாளை தன்னுடைய இரண்டு பேரணிகளை முடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். 

    மேலும் பேசுகையில், பிரதமர் மோடி உங்களால் உங்கள் மனைவியையே கவனித்துக் கொள்ளமுடியவில்லை, எப்படி நாட்டை கவனித்துக் கொள்வீர்கள்? எனக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. மாயாவதி இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்ததால், தனிமனித தாக்குதலில் தரம் தாழ்ந்து விட்டார் என பா.ஜனதா விமர்சனம் செய்தது. இப்போது மம்தாவும் அதுபோன்று பேசியுள்ளார். 
    மேற்கு வங்காள மாநிலத்தில் அமித் ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஒருநாள் முன்னதாகவே பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
    கொல்கத்தா:

    7 கட்டங்களாக நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலில் வரும் 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 9 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றிரவு கொல்கத்தா நகரில் நடந்த பாஜக ட்ய்ஹலைவர்  அமித் ஷா பேரணியின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதைதொடர்ந்து, அம்மாநிலத்தை சேர்ந்த சீர்திருத்தவாதி ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல், மா.கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இவ்விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் கமிஷனை குறை சொல்கின்றன.

    இதை எல்லாம் கருத்தில் முன்னிறுத்தி ஒருநாள் முன்னதாகவே பிரசாரத்தை நிறுத்துமாறு அம்மாநில தேர்தல் கமிஷன் இன்றிரவு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மேற்கு வங்காளம் மாநில தேர்தல் கமிஷன் இன்றிரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘டம் டம், பரசட், பசிர்ஹட், ஜெய்நகர், மதுராப்பூர், ஜாதவ்பூர், டைமன்ட் ஹார்பர், தெற்கு கொல்கத்தா, வடக்கு கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளிலும் நாளை (16-ம் தேதி) இரவு 10 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும்வரை யாரும் பிரசாரத்தில் ஈடுபட கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் 17-ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடியும் நிலையில் இங்கு மட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் கமிஷன், ‘தேர்தல் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின்படி 324-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறை.

    இருப்பினும், இதுபோல் தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும் வன்முறையும் எங்கு நடந்தாலும் இனி அங்கும் இந்த நடவடிக்கை பாயும்’ என தெரிவித்துள்ளது.
    டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. வை கட்சியாக டிடிவி தினகரன் பதிவு செய்தார். #dinakaran #electioncommission #ammk

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா, சிறை செல்ல நேர்ந்ததால் தினகரன் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரானார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு அ.தி.மு.க.வை கைப்பற்றியதால் தினகரனால் அதில் நீடிக்க முடிய வில்லை.

    அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருந்தவர்களையெல்லாம் ஒன்று திரட்டி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றார். அந்த வேகத்தில்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அவர் தொடங்கினார்.

    அந்த கட்சியில் துணை பொதுச்செயலாளராக இருந்து வந்த தினகரன், உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் பக்கமே இருக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறிவந்தார். அ.தி.மு.க.வை கைப்பற்றும் நோக்கத்திலேயே அவர் இது போன்று செயல்பட்டு வருவதாக கணிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் தினகரன் கோரினார். ஆனால் அவரது கட்சி பதிவு செய்யப்படாமல் இருப்பதாகவும், எனவே ஒரே சின்னத்தை ஒதுக்க முடியாது என்றும் கூறி தேர்தல் ஆணையம் கைவிரித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தலையிட்ட பின்னரே தினகரன் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் கிடைத்தது. பரிசு பெட்டி சின்னத்தில் அனைவரும் போட்டியிட்டனர்.

    இந்த நிலையில் தினகரன் அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடிவு செய்தார். இதற்கு வசதியாக அ.ம.மு.க. பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அக்கட்சியின் வக்கீல் செந்தூர் பாண்டியன் இதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது கட்சியை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம் என்றார்.

    அ.ம.மு.க. கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் கமி‌ஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தில் கவர்னர் கிரண்பேடியை தரக்குறைவாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது தலைமை தேர்தல் ஆணையரிடம் பாஜக மாநில பொதுச்செயலாளர் புகார் தெரிவித்துள்ளார். #BJP #kiranbedi #nanjilsampath

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில்சம்பத் நேற்று புதுவையில் பிரசாரம் செய்தார். தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கி அரியாங்குப்பம், முதலியார் பேட்டை ஆகிய இடங்களில் காலையும், மாலையில் நகர பகுதியிலும் நாஞ்சில் சம்பத் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.

    தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் அவர் பேசும்போது, கவர்னர் கிரண்பேடியை பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். இதுதொடர்பாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் புதுவை தலைமை தேர்தல் ஆணையர் கந்தவேலுவிடம் புகார் செய்தார்.

    புகாருடன் நாஞ்சில் பேசியதற்கான ஆதாரமான சிடியையும் சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அருண், டி.ஜி.பி. சுந்தரிநந்தா ஆகியோரிடமும் புகார் செய்தார்.

    இதுதொடர்பாக ரவிச்சந்திரன் கூறும்போது, நாட்டிலேயே முதல் ஐ.பி.எஸ். முடித்த பெண்மணியான கிரண்பேடி நாட்டின் சிறந்த பெண்மணி என பல விருதுகளை பெற்றுள்ளார். அவரைப்பற்றி தரக்குறைவாகவும், இழிவாகவும் தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.

    பெண்களை இழிவாக பேசுவதை தி.மு.க.வினர் வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் செய்துள்ளேன். அகில இந்திய தேர்தல் ஆணையருக்கும் இதுதொடர்பான புகார் மனுவை அனுப்ப உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #kiranbedi #nanjilsampath

    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. #ParlimentElection2019 #ECI #Pollschedule
    புதுடெல்லி:

    மத்தியில் உள்ள பாஜக அரசின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டின் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, வரும் மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். எனவே இதற்கான ஆயத்த வேலைகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
     
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றும் நோக்கில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.



    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில், பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகளை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும்,  தேர்தலை 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #ECI #Pollschedule
    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. #ParlimentElection2019 #ECI
    புதுடெல்லி:

    மத்தியில் உள்ள பாஜக அரசின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டின் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, வரும் மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். எனவே இதற்கான ஆயத்த வேலைகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
     
    இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றும் நோக்கில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியது.

    இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். #ParlimentElection2019 #ECI
    சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக 11-ம் தேதி ஆய்வு செய்யப்படுகிறது. #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியமைத்தது. 

    அங்கு அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அம்மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியான சந்திரசேகர் ராவும், அவரது தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியினரும் சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சட்டசபையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் முடிவை ஏற்று, சட்டசபை கலைப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். மேலும், புதிய அரசு அமைவது வரை தற்காலிக முதல்-மந்திரியாக தொடருமாறு சந்திரசேகர் ராவை அவர் கேட்டுக்கொண்டார்.

    தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 

    இந்த ஆண்டு இறுதிக்குள் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இப்போதே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் நகருக்கு துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன்  அனுப்பி வைக்கிறது.

    வரும் 11-ம்  தேதி (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் இதுதொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் கமிஷனரிடம் சமர்ப்பிப்பார்கள். இதன் அடிப்படையில் 4 மாத தேர்தல்களுடன் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படலாமா? என்று முடிவு செய்யப்படும்.  #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI
    ×