search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nanjilsampath"

    தேர்தல் பிரசாரத்தில் கவர்னர் கிரண்பேடியை தரக்குறைவாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது தலைமை தேர்தல் ஆணையரிடம் பாஜக மாநில பொதுச்செயலாளர் புகார் தெரிவித்துள்ளார். #BJP #kiranbedi #nanjilsampath

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில்சம்பத் நேற்று புதுவையில் பிரசாரம் செய்தார். தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கி அரியாங்குப்பம், முதலியார் பேட்டை ஆகிய இடங்களில் காலையும், மாலையில் நகர பகுதியிலும் நாஞ்சில் சம்பத் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.

    தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் அவர் பேசும்போது, கவர்னர் கிரண்பேடியை பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். இதுதொடர்பாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் புதுவை தலைமை தேர்தல் ஆணையர் கந்தவேலுவிடம் புகார் செய்தார்.

    புகாருடன் நாஞ்சில் பேசியதற்கான ஆதாரமான சிடியையும் சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அருண், டி.ஜி.பி. சுந்தரிநந்தா ஆகியோரிடமும் புகார் செய்தார்.

    இதுதொடர்பாக ரவிச்சந்திரன் கூறும்போது, நாட்டிலேயே முதல் ஐ.பி.எஸ். முடித்த பெண்மணியான கிரண்பேடி நாட்டின் சிறந்த பெண்மணி என பல விருதுகளை பெற்றுள்ளார். அவரைப்பற்றி தரக்குறைவாகவும், இழிவாகவும் தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.

    பெண்களை இழிவாக பேசுவதை தி.மு.க.வினர் வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் செய்துள்ளேன். அகில இந்திய தேர்தல் ஆணையருக்கும் இதுதொடர்பான புகார் மனுவை அனுப்ப உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #kiranbedi #nanjilsampath

    ம.தி.மு.க.வில் மீண்டும் சேரும் எண்ணம் இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். #nanjilsampath #vaiko

    நாகர்கோவில்:

    டி.டி.வி. தினகரன் அணியின் தீவிர ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத், கருத்து வேறுபாடு காரணமாக அவரது அணியில் இருந்து திடீரென விலகினார். பின்னர் இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன். தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்பேன் எனவும் அறிவித்தார்.

    இந்தநிலையில் நேற்று சென்னையில் நடந்த தமிழ் அறிஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்தும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொண்டனர். அப்போது 2 பேரும் கைகுலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.


    நாஞ்சில் சம்பத், ஏற்கனவே ம.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர். நேற்று அவர் வைகோவை சந்தித்து பேசியது ம.தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாஞ்சில் சம்பத் மீண்டும் ம.தி.மு.க.வில் சேர வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதை நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார்.

    வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் முன்னெடுத்த தமிழ் இலக்கிய நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். விசாகப்பட்டினம், கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் வைகோவும் கலந்து கொண்டார். நாங்கள் இருவரும் இலக்கியம் தொடர்பாக கருத்துரைகள் வழங்கினோம்.

    அப்போது மரியாதை நிமித்தமாக நாங்கள் சந்தித்து பேசிக் கொண்டோம். நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை. நான் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி தமிழ் இலக்கிய மேடைகளில் பங்கேற்று வருகிறேன். ம.தி.மு.க.வில் மீண்டும் சேரும் எண்ணம் இல்லை. இதுபோல எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு கிடையாது.

    ஜாலியன் வாலாபாக் படுகொலையை போல தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய மக்கள் மீது போலீசை ஏவி தாக்குதல் நடந்துள்ளது. இதன் மூலம் அழியாத பழியை தேடி உள்ளது எடப்பாடி அரசு. இதற்கு அவரால் பிராயச்சித்தம் தேட முடியாது. பலியானவர்களின் ஆவி அவர்களை சும்மா விடாது.

    தற்போது 56 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் உள்ளனர். ஆனால் அவர்களை சந்திக்க முதல்-அமைச்சர் அங்கு செல்லவில்லை. தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல நடப்பது அ.தி.மு.க. ஆட்சியா அல்லது பா.ஜ.க. ஆட்சியா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #nanjilsampath #vaiko 

    ×